Skip to main content

தேவ்தத் பட்டாநாயக்கை ஏன் செருப்பைக் கழற்றி அடிக்கக் கூடாது?



நேற்றை ஹிந்து நாளிதழில் வெளியான Vedantic Attachment and Islamic Idolatry எனும் கட்டுரையைப் படித்தபோது நமது வலதுசாரிகளில் சற்றே புத்திசாலிகளாக உள்ளவர்கள் கூட காவி வண்ணம் பூசிக் கொள்ளும் போதுஎப்படி கோமாளிகளாகிப் போகிறார்கள் என வியப்பேற்பட்டதுஅதாவது இந்துத்துவாவை ஆதரிக்கும் போது எந்த தர்க்க நேர்த்தியும் அற்ற பிதற்றலாகசுத்த பேத்தலாக அவர்களின் கருத்துக்கள் அமைகின்றனஆனால் தத்துவம்பொருளாதாரம் என்றெல்லாம் வரும் போது நிதானமாக உரையாடுகிறார்கள்தாமரைப் பூவைக் காட்டினால் சுத்த லூசாகி விடுகிறார்கள்இவர்களின் எழுத்துக்கள் சற்றே அறிவு படைத்தவர்களைக் கூடமுடியை பிய்த்துக் கொள்ள வைக்கிறதுசொல்லப் போனால் எதிர்த்தரப்பினரை தம் தரப்பை ஏற்றுக் கொள்ளவைப்பதல்லதம் கோமாளித்தனக் கருத்தக்களால் அவர்களை பைத்தியம் பிடிக்க வைப்பதே இவர்களின் நோக்கமாக இருக்கிறது. “பேட்மேன்” படத்தில் வரும் நோக்கர் பாத்திரத்துடன் நமது வலதுசாரிஅறிவுஜீவிகளை தாராளமாக ஒப்பிடலாம். குறிப்பாக, தேவ்தத் பட்டாநாயக்கின் இந்த கட்டுரை அப்படியான உச்சகோமாளித்தனம்.

இதைப் பாருங்கள்:

//In Mecca, a large number of historic sites, including mosques, and even sites associated with Prophet Muhammad’s life, are being broken by the guardians of the Kaaba. This is being done to prevent these sites from becoming shrines, for that would amount to idolatry, which is forbidden in Islam. These structures and sites are being replaced by luxury hotels, a place for pilgrims to stay, a pragmatic solution that brings wealth to the land.

Why is such pragmatism not displayed when it comes to much less significant Islamic structure in India? Does the attachment of a section of Muslims to Babri Masjid lean towards idolatry? Or is it a fight for justice over a land dispute, and a case of land grabbing stretched over decades? Is the compensation not enough?//

மக்காவில் வழிபாட்டிடங்கள் உடைக்கப்படுவதைக் கொண்டு அவர் பாபர் மசூதி இடிப்பை நியாயப்படுவது இங்கு தெளிவு. ஆனால் இதில் ஏதாவது லாஜிக் இருக்கிறதா?

மக்காவில் அரசாங்கத்தால் நபியின் மனைவி கதீஜாவின் வீடு உள்ளிட்ட வரலாற்று கட்டமைப்புகள் உடைக்கப்படுவதும் இந்தியாவில் அயோத்தியில் இந்துத்துவ கும்பலால் ஒரு மசூதி நொறுக்கப்படுவதும் ஒன்றல்ல. அங்கே வஹாபிய மேலாதிக்கம் காரணமாக, இடத்தையோ சிலையையோ ஒருவர் வழிபடக்கூடாது எனும் நோக்கில், சில தர்ஹாக்களும் இடங்களும் அழிக்கப்படலாம். அது நியாயமா என்பது வேறு கேள்வி. ஏனென்றால் அது இஸ்லாத்துக்குள் தூய்வாதத்தை ஏறகலாமா எனும் கேள்வி சம்மந்தப்பட்டது.
ஆனால் அதுவும் ஒரு மக்கள் திரளை அந்நியப்படுத்தி எச்சரிக்கும் நோக்கில் மசூதியை இடிப்பதும் ஒன்றல்ல.
இஸ்லாமியரின் வழிபாட்டிடம் நவீன இந்தியாவில் இடிக்கப்படுவதற்கு இரு விளைவுகள் உண்டு:

1) அந்த தலத்தில் வழிபாடு செய்து வந்த மக்கள் வேறு இடங்களுக்கு செல்ல வேண்டி வருகிறது. உதாரணமாக, நாளை இஸ்லாமியர் அதிகமாக வசிக்கும் ஒரு பகுதியில் உள்ள ஒரு பிரசித்தமான மசூதியை ஒரு கும்பல் இடித்து அங்கு கோயில் கட்ட நினைத்தால் அது நடைமுறை சார்ந்த பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஒரு வழிபாட்டிடம் என்பது மக்கள் சமூகமாக்கல் செய்கிற இடம்; அது மக்கள் தம்மை சமூகமாக உணர்வதற்கான இடம்; அங்கே தானதர்மம், சமூகத்தொண்டு ஆகிய நற்செயல்களும் நடக்கலாம். அங்கே அந்த மக்கள் திரளுக்கான பண்பாட்டு மூலதனம் உற்பத்தியாகிறது (கூட்டுப்பிரார்த்தனை மற்றும் சடங்குகள் குறித்த பயிற்சியினால்). வழிபாட்டிடங்கள் வெறுமனே நம்பிக்கை சார்ந்த ஒரு விசயம் மட்டுமல்ல. மக்காவில் ஒரு தர்ஹா இடிக்கப்பட்டாலும் மக்கள் ஒரு ‘பெருங்கதையாடல்’ வழிபாட்டிடத்துக்காவது செல்லலாம். ஆனால் இந்தியாவில் நீங்கள் தர்காவில் இருந்து மசூதிக்குப் போக முடியாது. நீங்கள் மசூதியில் இருந்து வெற்றிடத்துக்கும், அழிவு குறித்த கற்பனை வெளிக்குள்ளும் தான் சென்றாக வேண்டும். பட்டாநாயக் கேட்பது போல மக்கள் தங்களுக்கு தரப்பட்ட மாற்று இடத்தில் ஒரு மசூதி கட்டிக் கொண்டு நகர முடியாது. வழிபாட்டிடம் என்பது கழிப்பறை அல்ல தோன்றுகிற இடத்துக்கு மாற்றுவதற்கு. அது நீங்கள் வசிக்கிற இடத்தில் அருகில், அல்ல திரளான மக்களின் வாழ்விடத்துக்கு மையத்தில் இருக்க வேண்டும்.

2) இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்தே, அதாவது காலனியாதிக்க காலத்தில் இருந்தே, எரிந்து வரும் பிரச்சனை அயோத்தியா வழக்கு. பாபர் மசூதி இடிக்கப்படுவதை இஸ்லாமிய மக்கள் அரை நூற்றாண்டுகளாக இந்தியா முழுக்க இஸ்லாமியர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், நடத்தப்படுவதாக அஞ்சப்படும் தாக்குதல்களின் பின்னணியில் வைத்தே பார்ப்பார்கள். மக்காவில் இடிக்கப்படுவதை அந்த ஊர் மக்கள் அப்படிப் பார்க்க மாட்டார்கள். அயோத்தி என்பது இந்துக்கள்-இஸ்லாமியர் இரு சாராருக்கும் இங்கு ஒரு குறியீடு; மக்காவில் ஒரு தூணோ வீடோ இடிக்கப்படுவது இப்படியான குறியீடு ஆகாது.

தேவ்தத் பட்டாநாயக் இந்த கட்டுரையில் இப்படி சம்மந்தமில்லாத இரு விசயங்களை முடிச்சுப் போட்டு பாபர் மசூதி இடிப்பை நியாயப்படுத்துவது விஷமத்தனமானது. அவர் தொன்மங்களைப் பற்றி சுவாரஸ்யமாக, சற்று ஆழத்துடன் எழுதுகிறவர் தான். அந்தளவில் எனக்கு அவரைப் பிடிக்கும். ஆனால் இத்தகைய மதவாத அடிவருடிக் கட்டுரைகளை அவர் எழுதும் போது என்றாவது கையில் மாட்டினால் சாணியை முக்கிய செருப்பால் அடிக்க வேண்டும் போலத் தோன்றுகிறது. அமைதியான என்னையே இப்படி சிந்திக்க வைக்கிறார் பாருங்கள். அது தான் இவரைப் போன்றவர்களின் வெற்றி. அதனால் வேண்டாம். அவரை அடுத்த முறை எங்காவது நேரில் பார்க்க நேர்ந்தால் மனதுக்கு ரெண்டு அடி கொடுத்து விட்டு கடந்து விடலாம்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...