Skip to main content

பெயரில் சாதியை ஒழிப்பது



ஒரு பழைய “நீயா நானாவின்” டிரைலரைப் பார்த்தேன்சாதியை ஒழிப்பதில்கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் உள்ள வித்தியாசத்தை இது விவாதிக்கிறதுசாதியை வெளிப்படையாகபெயரொட்டாக வைத்துக் கொள்ளும் கேவலமான வழக்கம் கேரளாவில் பலருக்கும் உண்டுஇது ஏன்தமிழகத்தில் இது ஏன் இல்லை என நிகழ்ச்சியில் கரு.பழனியப்பனின்நடிகை பார்வதி நாயரும்விவாதிக்கிறார்கள்.
டிரைலரில் இந்த குறுவிவாதத்தைக் கண்ட போது எனக்குள் எண்ணம் நாம் இந்தளவுக்கு மேம்பட்டு தான்இருக்கிறோமா எனும் கேள்வி எழுந்தது
நீயா நானா” போன்ற நிகழ்ச்சிகளில் பெயரில் சாதி வைப்பதில்லை என தமிழர்கள் பெருமையடித்தாலும்கொடூரமான சாதிப் படுகொலைகள்ஆணவக் கொலைகள் இங்கே தான் அதிகமாக நடந்துள்ளனதாழ்த்தப்பட்டவர்களை பொதுவெளியில் வைத்து வெட்டுவதுகொன்று ரயில்பாதையில் கிடத்துவதுகாலனிக்குதீ வைப்பது போன்ற அநீதிகள் நம்மூரில் அதிகம்மேலும்சாதிக்கொரு கட்சியையும் நாமே அங்கீகரிக்கிறோம்அந்த சாதியின் அடிப்படையிலே இன்றும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்ஏன் இத்தகையசீரழிவுகளை கேரளாவில் நாம் காண்பதில்லை?


ஒரு காரணம் அங்கே சாதியை சமூகம் ஒட்டுமொத்தமாக ஏற்றுக் கொண்டுள்ளது என்பதுஅதாவது சாதிஅமைப்பு இறுக்கமாக இருக்கும் போது சமரசம் நிலவும்ஆனால் தமிழகத்தில் போல இளகலாக இருக்கும்போது அதற்குள் அசைவுகளும் மேல்நோக்கிய பாய்ச்சல்களும் நடக்கும்அப்போது எதிர்ப்பும் வன்முறையும்வெடிக்கும்தமிழகத்தில் உள்ள நிலைமை “நான் உன் சாதியை கேள்விக்கு உட்படுத்த மாட்டேன்நீ என்னைமாற்றவோ என்னை விமர்சிக்கவோ முயலாதேநீ என் பெண்ணைத் தொடாதே நானும் உன் பெண்ணைத் தொடமாட்டேன்அது மட்டுமல்ல நீ உன் எல்லைகளைத் தாண்டினால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்உன்உயிரைப் பறிப்பேன்உடைமைகளை எரிப்பேன்குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொண்டு வருவேன்.” எனும்சமரச ஒப்பந்தம்இது ஒரு அச்சுறுத்தலும் தான்தமிழகத்தில் இந்த அச்சுறுத்தல் மிக மௌனமாக ஆனால்பட்டவர்த்தமாக படமெடுத்தாடுகிறது.
 இங்கு முழுமையாக வெளிப்படையாக நாம் சாதியை ஏற்க முடியாமல் தவிக்கிறோம்இதுவே பின்னர் சாதிமோதல்கள் / தாக்குதல்கள் உள்ளிட்ட பல குற்றங்களுக்கு வழிவகுத்தது - அதாவது தமிழர்கள் அரைகுறைமுற்போக்காக இருப்பதே சாதி வன்முறைக்கு வழிவழ்குத்துள்ளதுஎது சாதியை பெயரில் உதறத் தூண்டியதோஅதுவே சாதிக்காக கத்தியை தூக்கவும் வைத்தது.
 மேலும் நாம் பெயரில் ஒழித்து விட்டு அரசியல் களத்தில் வெளிப்படையாக அதை வைத்து அறுவடைபண்ணினோம்இதற்கு ஒரு சிறந்த உதாரணம் ராமதாஸும் அன்புமணியும்அவர்கள் தம் பெயருக்கு ஒட்டாகசாதியை வைப்பதில்லைஆனால் அவர்களின் அரசியல் முழுக்க முழுக்க வன்முறையால் சாதியைமுன்னெடுப்பதும்அச்சத்தால் மக்களை பிரித்து பயன்படுத்துவதும்தொண்ணூறுகளில் இப்படியான சாதிஅரசியல் ஒரு மோசமான அலையாக எழுந்து சமூகத்தை அலைகழித்ததுசாதிப்பெயரை வைத்துக் கொள்வதைவிட நாம் இதற்காகத் தான் அதிகமாக வெட்கப்பட வேண்டும்.

இதையெல்லாம் பார்க்கும் போது நாம் மலையாளிகளை விட மேலும் இல்லைமோசமும் இல்லை எனப்படுகிறதுஅது மூடின புண்நாம் திறந்தநிலைப் புண்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...