Skip to main content

அத்திவரதரும் இந்துத்துவ அரசியல் கனவும்


அத்திவரதர் வைபவம், அது சம்மந்தமான பரபரப்பு பற்றி சரவணன் சந்திரன் எழுதிய பதிவைப் படித்தேன். அவர் அப்பதிவை அழகாக எழுதியிருந்தாலும் ஒரு கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை. அப்பதிவு பல பாஜகவினர் மற்றும் நடுநிலை சங்கிகளின் மார்பில் பாலை வார்த்திருக்கும் என்பதாலே இங்கு மாற்றுக்கருத்தை கூற விழைகிறேன்.

 - “மதம் சார்ந்த, கலாச்சார பெருமைகள் சார்ந்த உரையாடல்கள் இனி மையத்தை நோக்கி நகர்வதைத் தவிர்க்கவே முடியாது. அதற்குத் தோதான காலமும் திரண்டு வந்திருக்கிறது. எந்தப் பக்கம் நிற்கிறோம் என்பதில்தான்  தமிழக அரசியலின் எதிர்காலமும் தீர்மானிக்கப்படும். மதச் சொல்லாடல்களைத் தவிர்த்து விட்டு, இனி தமிழக அரசியல் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்கிற நம்பிக்கையும் தகர்ந்திருக்கிறது. ஒருவகையில் மண்டல்-மந்திர் அரசியல் மறுபடியும் துளிர்விடுவதற்கான காலமிது. அதற்கான ஆரம்பப் புள்ளிகள் தெரியவும் துவங்கி விட்டன. மதம் சார்ந்த விஷயங்களில் குழப்பமில்லாத அரசியல் கருத்துக்களை உருவாக்கிக் கொள்ள வேண்டிய நிர்பந்தமும் தமிழக கட்சிகளிடையே உருவாகியிருக்கிறது. பெரும்பான்மை சமூகத்தின் நம்பிக்கைகளில் கைவைக்கையில் கொஞ்சம் கவனத்துடன் செயல்பட வேண்டிய இக்கட்டும் எதிர்த்தரப்பிற்கு ஏற்பட்டிருக்கிறது. எல்லா தரப்பும் ஊன்றிக் கவனிக்க வேண்டிய புள்ளியாக இதையே பார்க்கிறேன்.” என சரவணன் சந்திரன் அவர் சொல்வதன் பொருள் இந்துத்துவ பூமியாக தமிழகம் விரைவில் உருமாறுவதை நாம் தடுப்பது எளிதல்ல, இந்து மத நம்பிக்கைகளை ஒட்டி அரசியல் கட்சிகள் இனி தமது கருத்தாடல்களை மறுதகவமைப்பு பண்ண வேண்டும், பெரியாரிய மத கிண்டல்களை மக்கள் இனி பொறுக்க மாட்டார்கள் என்பதே. ஆனால் கடந்த தேர்தலில் பாஜக தமிழகத்தில் பெற்றமிகப்பெரிய வெற்றியைபார்க்கையில் எனக்கு நம்பிக்கை ஏற்பட மாட்டேன் என்கிறது.

தமிழகம் என்றுமே ஆன்மீக பூமி தான். கோயில்களின் நிலம் தான். ஆனால் அது நம்மை மத வேறியர்களாக, இந்து தேசியவாதிகளாக மாற்றுவதில்லை. அதற்கு சில அடிப்படையான காரணங்கள் உண்டு.
1) இந்து தேசியம் பக்தியில் வேரூன்றுவதில்லை - அது இந்து-இஸ்லாமிய வெறுப்பில், மத இருமையில், அந்த இருமையை பின்புலமாக கொண்டு உருக்கொள்ளும்இந்தியதேசியவாதத்தில் (மாநில, மொழி தேசியவாதத்தில் அல்ல) வேரூன்றி உள்ளது. தமிழகத்தில் இஸ்லாமிய வெறுப்பு உருக்கொள்ளாதவரை இந்துத்துவ அரசியல் இங்கே முலையுண்டு வளர்ந்து தவழாது. கரு தோன்றியதுமே கலைந்து விடும்.
2) அடுத்து பாஜக இந்த இந்து-இஸ்லாமிய பிரிவினை கதையாடலை வைத்து ஒற்றை இந்தியா எனும் லட்சியத்தை முன்னெடுக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தமட்டில் அதுவும் சுலபமாக இராது. தமிழகம் அடிப்படையில் தன்னை தனி நிலமாக, தனி தேசமாக கருதுவது. மொழி மற்றும் பண்பாட்டு அடிப்படையில், இந்தியா எனும் கருத்தமைவை இங்கே திணிக்க முடியாதபடி ஒரு பிளவு நீண்ட காலமாக உருப்பெற்றுள்ளது. இந்தியா என்றால் வடக்கே என மக்கள் ஆழமாக நம்புவார்கள். ஆக நீங்கள் இந்து மதத்தை இங்குள்ள ஆலய வழிபாட்டு முனைப்பைக் கண்டு கடைபரப்பலாம். ஆனால் அந்த கடையில் நீங்கள் இந்திய தேசியவாதத்தை விற்றால் போண்டியாகி விடும். இந்து மத பக்தியும் இந்திய தேச பக்தியும் இருவேறு சரக்குகள் - தமிழ் நிலத்தில் இரண்டையும் கலந்தால்தாமரைஇலை நீர் போல தனித்து நிற்கும்.  


அத்திவரதரைப் பார்க்க மக்கள் ஆயிரக்கணாக்கில் திரண்டு வருவார்கள்; பிரதமரும் வருவார். ஆனால் அதே அத்திரவரதரைக் கொண்டு தேர்தலில் ஒருவேளை நிறுத்தினால் ஓட்டளிக்க யாரும் வர மாட்டார்கள். அது வேற வாய்!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...