Skip to main content

உடல் எடை குறைப்பதன் மிகப்பெரிய சவால் (2)

நமது மரபணுக்கள்வாழும் சூழல்உணவுப்பழக்கம்நீண்ட காலமாய் நாம் தக்க வைத்துள்ள எடை ஆகிய காரணிகள் இந்த நிர்ணயிக்கப்பட்ட எடையை வரையறுக்கின்றன.தா., எனது உடலமைப்பு என் தாய் மாமாவை ஒட்டி இருந்தால் அவரைப் போன்றே எனக்கும் 70 கிலோ எடை நிர்ணயிக்கப்படலாம்அவரைப் போன்றே எனக்கும் 40 வயதில் வழுக்கை விழலாம்ஆனால் இது இப்படி ஒரு உறவினரை மட்டும் ஒட்டி எப்போதும் அமைவதில்லைநமது குடும்பத்தில் உள்ள பலரது மரபணு சுபாவங்கள் நமக்கு வந்து சேரும்அதனாலே உங்கள் பெற்றோருக்கு நீரிழிவோ மனப்பிரச்சனையோ இல்லாவிடிலும் அது வேறு ஏதோ உறவுக்கிளைகள் வழி உங்களுக்கு வந்து சேரலாம் (காவிரி நதி கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு - பல்வேறு பிரச்சனைகளுடன் - வருவது போல). எடை நிர்ணயமும் அவ்வாறு மரபணு ரீதியாய் நிகழலாம்.


ஆனால் அது மட்டுமல்லநீங்கள் வாழும் சூழலுடன் நீங்கள் செய்யும் எதிர்வினையும் இதை தீர்மானிக்கும்.தா., நீங்கள் நிறைய பப்களும் இரவு பகலாய் நுகர்வுக் கலாச்சாரத்தில் சீரழியும் பங்களூர் போன்ற ஒரு நகரத்துக்கு வருகிறீர்கள்ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிகிறீர்கள்உங்கள் நண்பர்கள் தினமும் மாலையில் குடிக்கிறார்கள்இரவு வெகு தாமதமாய் தூங்க செல்கிறார்கள்துரித உணவும் தூக்கமின்மையும் அவர்களது உடல் நலனைக் கெடுக்கிறதுநீங்களும் அவர்களை பின்பற்றுகிறீர்கள்நீங்கள் பெங்களூர் வரும் போது 60 கிலோஒரே வருடத்தில் உங்கள் எடை 75க்கு தாவுகிறதுஆனால் உங்கள் நிர்ணயிக்கப்பட்ட எடை 60 கிலோ தான்நீங்கள் உணவு மற்றும் வாழும் முறையை மாற்றிதினமும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு சுலபமாய் 60 கிலோவுக்கு மீள முடியும்ஆனால் நீங்கள் சில வருடங்கள் தொடர்ந்து 75 கிலோவிலே இருக்கிறீர்கள் எனக் கொள்வோம்ஐந்தில் இருந்து பத்து வருடங்கள்மெல்ல மெல்ல 85 கிலோவுக்கு வந்த  பிறகு ஒருநாள் நீங்கள் விழிப்புணர்வு பெற்று திருந்துகிறீர்கள்நல்ல உணவுதூக்கம்தினமும் உடற்பயிற்சிநிம்மதியான மனநிலைஇப்போது நீங்கள் மீண்டும் 60 கிலோவுக்கு மீள்வது சிரமம்இப்போது உங்கள் நிர்ணயிக்கப்பட்ட எடை 75ஆக இருக்கும்இதை குத்துமதிப்பாகத் தான் சொல்கிறேன் என்றாலும் நமது எடையை உடல் இப்படித் தான் அடிக்கடி வரையறை வகுத்து நிறுத்தி வைக்கிறதுஇந்த எல்லைக்கோடு மெல்ல மெல்ல சில கிலோக்கள் மேலும் கீழுமாய் செல்லலாம்ஆனால் ஒரேயடியாய் மாறாதுஒரு சில மாதங்களில் மாறாது.

அதே நேரம்நீங்கள் கடுமையாய் முயற்சித்து 1-2 வருடங்களில் 60 கிலோவுக்கு மீள்கிறீர்கள் என வைப்போம்நீங்கள் இதே எடையை தொடர்ந்து கராறான உணவுப்பழக்கம் / உண்ணாநோன்பு மற்றும் உடற்பயிற்சி மூலம் 2 வருடங்கள் தக்க வைத்தால் உங்கள் நிர்ணயிக்கப்பட்ட எடை மீண்டும் 60க்கு வந்து விடும்அடுத்துஇரண்டு வருட லட்சுமணக் கோட்டை தாண்டி விட்டோம்இப்போது எதிர்பாராத வாழ்க்கை மாற்றங்களால் எடை 65-68 என எகிறினாலும் நீங்கள் கவலைப்பட தேவையிராதுசுலபத்தில் 60 கிலோவுக்கு பேருந்து ஏறி போய் சேர்ந்து விடலாம்ஆனால்சிலர் செய்வது போலஆறு மாதங்கள் மட்டும் டயட்ஜிம் என தேனிலவு கொண்டாடி விட்டு மீண்டும் “பழைய குருடி” என பப்குடிகொண்டாட்டம் என கிளம்பினால் எடை நகர்ந்து நகர்ந்து 75க்கு சென்று விடும்இதனால் தான் சில மருத்துவர்கள் கவலைப்படுவது போலதொடர்ந்து எடை ஏறி இறங்குவது ஆரோக்கிய கேடுகளை ஏற்படுத்தும்உங்கள் நிர்ணயிக்கப்பட்ட எடையை உணர்ந்து அதை ஒன்று சரியான எடைக்கு நகர்த்தி அங்கேயே ஆணி அடித்து ஸ்தாபிக்க வேண்டும்இல்லாவிட்டால் தோல்வி நிச்சயம்.

இந்த புள்ளிவிபரத்தைப் பாருங்கள். Science ஆய்விதழில் வெளியான ஒரு ஆய்வுக்கட்டுரை சொல்வது என்னவென்றால் நீங்கள் எடையை குறைத்த பிறகு தினமும் 100 கலோரிகளை நீங்கள் உணவில் இருந்து குறைத்தால் நிர்ணயிக்கப்பட்ட (அளவானஎடையை நீண்ட காலம் தக்க வைக்கலாம்ஆனால் இது ஒரு நிரந்தர வாழ்க்கை முறையாக இருக்க வேண்டும்இது சிரமம் என பயின்று பார்த்தவர்களுக்குத் தெரியும்

தினமும் 900 கலோரிகள் மட்டுமே உட்கொள்வேன் என ஒருவர் கால்குலேட்டரில் கணக்கிட்டுப் பார்த்து உண்ண முடியாதுசில நாட்கள் முன்னே பின்னே போகும்பிறகு நம்மை அறியாமலே இந்த அதிக கலோரி உட்கொள்ளுதல் வழக்கமாகி விடும்அதாவது ரெண்டு கவளங்கள் கூடுதலாய் சாப்பிடுவதைஒரு ரொட்டியை கூடுதலாய் எடுத்து தட்டில் வைப்பதை நாம் எப்போதும் உணர்வதில்லைமாறாகசாக்லேட்ஐஸ்கிரீம்பிஸ்கட்கள் சாப்பிடுவதாலே கலோரிகள் அதிகரிக்கும் என நினைக்கிறோம்மிகச் சின்ன மாற்றங்களே எப்போதும் மிகப்பெரிய தேக மாற்றங்களுக்கு வழிவகுக்கும்

இன்னொரு ஆய்வு இப்படி சொல்கிறதுஇரண்டு வருடங்கள் தொடர்ந்து தினமும் நீங்கள் 170 கலோரிகளை உணவில் குறைத்தால் சுலபமாய் நீங்கள் உங்கள் நிர்ணயிக்கப்பட்ட எடையை நிறுவி விடலாம்ஆனால் இதற்கு அடுத்த வருடங்களிலும் நீங்கள் கராறாய் உண்ண வேண்டும்இதற்கு ஒரு எளிய வழி ஒருவேளை உணவை முழுக்க மாற்றுவதுஉதாரணமாய்உங்கள் காலை உணவை 5 இட்லி / தோசைகளில் இருந்து இரண்டு ஆம்லேட் அல்லது ஒரு பெரிய வாழைப்பழமாய் மாற்றி விட்டால்அதுவே பழகிப் போனால் (மீதி வேளைகளில் உண்ணும் உணவுகளிலும் கட்டுப்பாடு இருக்கும் பட்சத்தில்) 170 கலோரிகளுக்கு மேலாகவே தினமும் குறைக்கலாம்இதை விட எளிது தினமும் 16 மணிநேர உண்ணாநோன்பு இருப்பது (இரவுணவுக்குப் பிறகு நேரடியாய் மதிய உணவு அருந்தும் வரை சாப்பிடாமல் இருப்பது).

இன்னொரு முக்கியமான விசயம் தொடர்ந்து உடலுக்கு சவால்கள் அளிப்பதுஉதாரணமாய்நீங்கள் இடைப்பட்ட உண்ணாநோன்பை தினமும் பின்பற்றுகிறவர் என்றால் சில நாட்கள் நீடித்த நோன்பை பின்பற்றுவதுதானிய உணவை பின்பற்றுகிறவர் சில மாதங்கள் பேலியோவுக்கு இடம்பெயர்ந்து பார்ப்பதுசவால்கள் தோன்றத் தோன்ற உடல் அதற்கு ஈடுகொடுக்க போராடும்இந்த போராட்டம் உடலை வலுப்படுத்தும்நான் பிறந்ததில் இருந்தே காலையில் ஒரு தட்டு பொங்கல்சட்னி சாப்பிடுகிறேன்சாகும் வரை அதை மாற்ற மாட்டேன் என அடம் பிடிக்கக் கூடாதுஇன்னொரு பக்கம் இதுவே உடற்பயிற்சிக்கும் பொருந்தும்தினமும் நடைபயில்கிறவர் மராத்தான் ஓட பார்க்கலாம்மராத்தான் ஓடுகிறவர் strength training பண்ணலாம்கும் பூகராத்தேயோகா கற்கலாம்ஜிம்மில் எடைப்பயிற்சி செய்பவர் எடையை மெல்ல மெல்ல கூட்டலாம்.தா., நீங்கள் பத்து கிலோ எடையைத் தூக்கி ஆறு மாதங்கள் பழகி விட்டால் உடலுக்கு அது சுலபமாகும்அப்போது நீங்கள் 15 கிலோ டம்பெல் எடுத்து பயில வேண்டும்தசைகளுக்கு அவ்வப்போது “அதிர்ச்சிகளை” இப்படி அளிக்க வேண்டும்நிர்ணயிக்கப்பட்ட எடையை நம் விருப்பப்படி தக்க வைக்க இவை உதவும்
சரியான நிர்ணயிக்கப்பட்ட எடையை அடைய  லெப்டின்டெஸ்டோஸ்டெரான் போன்ற ஹார்மோன்களும் சரியான அளவில் சுரப்பது அவசியம்இதற்கும் உடற்பயிற்சிகாய்கனிகள் மற்றும் புரத சத்து அதிகமான உணவுகள் உதவும் என்கிறார்கள்.


எந்த ஒரு நல்ல விசயத்துக்கும் குறுக்குவழிகள் உதவாது என்பதே இதில் இருந்து நான் கற்றுக் கொண்ட எளிய முக்கியமான பாடம்எடை குறைப்பு மற்றும் ஆரோக்கியத்துக்கு நீடித்த கராறான வாழ்க்கை முறையையும் கொஞ்சம் பிடிவாதமும் அவசியம். 3-6 ஆறு மாதங்களில் உடனடியாக ஒரு பழக்கம் பலன் தருகிறதென்றால் அது அடுத்து ஒரு முட்டுக்கட்டையை போடப் போகிறது என நாம் எதிர்பார்த்திருக்க வேண்டும்அப்போது அத்தடையை மீற நாம் தயாராக இருக்க வேண்டும்ஒருநாள் இந்த தடையையே (set point)  நாம் நமக்கு சாதகமாய் மாற்றிக் கொள்ள முடியும்.   

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...