Skip to main content

2019 உலகக்கோப்பை அணிகள் ஒரு பார்வை: ஆஸ்திரேலியா


இம்மாதம் 30ஆம் தேதி, ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடர் தொடங்க உள்ளது. முதல் ஆட்டமே இங்கிலாந்துக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும்  இடையே. செமையாக களைகட்டப் போகும் ஆட்டம் இது. அதற்கு முன் நாம் சிறந்த ஐந்து அணிகளின் முன்னோட்டம் ஒன்றைப் பார்போம். எந்த அணிகள் வலிமையானவை, இங்கிலாந்தின் ஆட்டச்சூழலுக்கு தோதானவை. நல்ல ஆட்டநிலையில் உள்ளவை. இந்த அணிகளின் பலவீனம் என்னென்ன ஆகிய விசயங்களை இந்த முன்னோட்டத் தொடரில் பார்க்கலாம். முதலில் ஆஸ்திரேலியா.

அணி வீரர்கள்:

  1. ஆரோன் பிஞ்ச் (தலைவர்)
  2. கேரி (கீப்பர்)
  3. பேட் கம்மின்ஸ்
  4. ஜேஸன் பெர்ரண்டர்ப்
  5. நேதன் கூல்ட்டர்நைல்
  6. உஸ்மான் கவாஜா
  7. நேதன் லயன்
  8. ஷான் மார்ஷ்
  9. கிளென் மேக்ஸ்வெல்
  10. கேன் ரிச்சர்ட்ஸன்
  11. ஸ்டீவ் ஸ்மித்
  12. மிட்சல் ஸ்டார்க்
  13. மார்க்கஸ் ஸ்டாயினிஸ்
  14. டேவிட் வார்னர்
  15. ஆடம் ஸாம்பா

ஆஸ்திரேலிய அணி இப்படி இருக்க வேண்டியதல்ல. ஆரோன் பிஞ்ச் தலைவர் என்பது சற்று ஆச்சரியமாக உள்ளதா? ஆம், அவர் நமது தொன்மக் கதைகளில் யானை பூமாலையை போட்டதால் பரதேசி மன்னனானது போல, தலைவர் ஆனவர். அவருக்கு முன்பு ஸ்டீவ் ஸ்மித்தே தலைவர். அவர் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகவும் வெற்றிகரமான தலைவராகவும் இருந்தார். துணைத்தலைவரான வார்னர் உலகின் மிக ஆபத்தான துவக்க மட்டையாளர்; ஒருநாள், டெஸ்ட் மாற்றும் டி-20 போட்டிகளில் கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் ஆடுதளங்களிலும் ஜொலித்தார். இந்த இருவரும் எதேச்சையான ஒரு சிக்கலில் மாட்டி அது மிகப்பெரிய சர்ச்சையாகி பின்னர் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டையே புரட்டிப் போட்டது.

மேலும் படிக்க: https://tamil.asiavillenews.com/article/2019-world-cup-teams-review-5993


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...