Skip to main content

கேரளாவில் ஏன் அரசியல் கொலைகள் அதிகம் நடக்கின்றன?

Image result for dmk aiadmk cadre
தமிழகத்தில் அதிமுக செயல்பாட்டாளர்களிடம் உரையாடும்போது திமுக மீது ஒருவித பொறாமையான விருப்பத்தை அவர்கள் வெளிப்படுத்துவதை நான் கண்டிருக்கிறேன். அதிமுககாரர் ஒருவர் திமுககாரரைப் பற்றிப் பேசும்போது அவர்கள் குரலிலே மரியாதை தொற்றிக்கொள்ளும். திமுகவினர் அதிமுகவினர் மீது விமர்சனம் கொண்டிருந்தாலும் அவர்களின் கார்ப்பரேட் கட்டமைப்பு, ஒருங்கிணைப்பு, தனிமனிதர்கள் தமது பணியின் பொருட்டே படிநிலையில் ஏறி விரைவில் உச்சாணியை அடையும் சாத்தியம் அதிமுகவில் போல திமுகவில் இல்லாமை பற்றி எல்லாம் கொஞ்சம் புகைச்சலுடனும் மரியாதையுடனும் பேசுவார்கள். ஆகையால் இருவரும் பரஸ்பரம் ஆழமாக வெறுப்பதில்லை.


இது மட்டுமல்ல. நான் பல டிவி விவாத நிகழ்ச்சிகளில் முரண்படும் கட்சிக்காரர்கள் நிகழ்ச்சி முடிந்ததும் பரஸ்பர நட்புணர்வுடன், பண்புடன் உரையாடுவதைக் கண்டிருக்கிறேன். மிக அபத்தமாய் கிறுக்குத்தனமாய் பேசி என்னை கடுப்பேற்றும் பாஜககாரர்கள்கூட நிகழ்ச்சிக்குப் பிறகு என்னிடம் பேசும்போது இயல்பாய் நியாயமாய் தெரிவார்கள்.
தமிழக அரசியலில் லட்சியம், கொள்கை, கோட்பாடு எல்லாம் உண்டுதான். ஆனால் அவை பெயருக்குத்தான். கிட்டத்தட்ட எல்லாக் கோட்பாடுகளும் அடிப்படையில் தமிழ் தேசியக் கதையாடலை, உணர்வைக் கொண்டிருப்பவை. தமிழ், தமிழர் எனும் புள்ளியில் நமது கொள்கைகள் ஒன்றுபடுகின்றன. பாஜகவும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதில் விதிவிலக்காக இருந்தாலும் அவர்களும் தத்துவத்தை வைத்து ஆழமான வெறுப்பைப் பிற கட்சிகளிடம் காட்டுவதில்லை.

பொதுவாகத் தமிழகக் கட்சிகளின் தமிழுணர்வு என்பது கம்யூனிஸம் போல அரூபமானது அல்ல. இந்துத்துவா போல கற்பனாதீதமானது அல்ல. இது பௌதீகமானது. தமிழ் பேசுபவன், தமிழை நேசிப்பவன் தமிழன். தமிழ் மண்ணில் வசிப்பவன், அதைத் தனது மண்ணாய் நினைப்பவன் தமிழன். தமிழ் உடலும் தமிழ் நிலமும் பௌதீகமான தமிழ் தேசியக் கட்டமைப்பின் ரூபங்கள். ஆகையால் யாரும் இக்கொள்கையை கற்க வேண்டியதில்லை. தத்துவ நூல்களைப் படிக்க வேண்டியதில்லை. இங்கு மக்களின் இதயத்துடன் உரையாடுபவர் எவருமே ‘தமிழ் தேசியவாதி’. தமிழை இதயபூர்வமாய் கொண்டாடுபவர் எவரும் ‘தமிழ் தேசியவாதி’. இந்த தேசிய உணர்வு நமது மண் சார்ந்த இனக்குழுவாதத்திலிருந்து, நமது திணைக் கோட்பாட்டிலிருந்து ஆதி காலத்திலிருந்தே இருந்துவருகிறது. ஆகையால் தமிழகத்தில் அரசியல் மற்றமை என்பது ஆழமானதல்ல.

கேரளத்தில் இத்தகைய மண் சார்ந்த அரசியல் உணர்வு குறைவு என்பதால் அவர்களின் லட்சியவாதம் அரூபமான சொற்களாலான ஒன்றாய் இருக்கிறது. அது கம்யூனிஸமாக, காங்கிரஸின் மாநிலம் கடந்த தேசியவாதமாக, பாஜகவின் இந்து தேசியமாக உள்ளது (இதே கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் அப்படிச் செயல்படுவதில்லை). இந்த வகையான அபௌதீக லட்சியவாதம் மற்றமையைக் கட்டமைப்பது. இது ஆபத்தானது; இதுவே கொலைக் குற்றங்கள், கொடூரங்களை இழைக்க மக்களைத் தூண்டுகிறது.
கேரளத்தின் அரசியல் குற்றங்களுக்கு இது மட்டுமே காரணமாக இருக்க முடியாதுதான். ஆனால், இது ஒரு பிரதான காரணம்.

மேலும் படிக்க: https://minnambalam.com/k/2019/02/23/13

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...