Skip to main content

கோமதி மாரிமுத்து சர்ச்சை: இரண்டு தேசியவாதங்களின் மோதல் (2)

Image result for pt usha and other athletesImage result for indian army
ஜார்ஜ் ஆர்வல் சொன்னது போல விளையாட்டு என்பது ஒரு தேசியவாத பெருமித குறியீடு. பெருமாள் முருகனின் நாவல்கள் இன்று உலகம் முழுக்க படிக்கப்படுகின்றன. ஆனால் யாரும் அவரது எழுத்தை தேச பிரதிநுத்துவமாய் பார்க்க மாட்டார்கள். ஆனால் விளையாட்டு வீரன் தனது விருப்பத்துக்காக, பெருமைக்காக ஆடி சாதித்தால் அது தேசத்தின் சாதனையாய் பார்க்கப்படும். ஏன் என்பதை ஆர்வல் விளக்குகிறார். 

முந்தைய காலத்தில் ஒரு தேசத்தை பிரநித்துவபடுத்தியது அதன் ராணுவம். ஆனால் ஜனநாயக யுகத்தில், இரண்டு உலகப்போர்களுக்குப் பிறகு, நிலைமையே வேறு. ஓர் அளவுக்கு மேலாக நீங்கள் ராணுவத்தை முன்னிறுத்த முடியாது. ஆக இரண்டு தேசங்கள் குறியீட்டு ரீதியாய் மோதி தமது முன்னிலையை சித்தரிக்க விளையாட்டுப் போட்டிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. பெரிய ஆட்ட அரங்குகள் நிர்மாணிக்கப்பட்டு அங்கு மக்கள் குழுமி தங்கள் தேசத்துக்காக கூவி கூச்சலிட்டு ஆதரவு தெரிவிக்க வசதிகள் பண்ணப்படுகின்றன. இப்படித் தான் ஜனநாயக நாடுகளில் தேசியம் கட்ட்டமைக்கப்படுகிறது. ராணுவத்துக்கு அடுத்தபடியாய் விளையாட்டு வீரர்கள் அரசின் ஏஜெண்டுகளாய் காணப்படுகிறார்கள். ஆகையால் சர்வதேச அரங்கில் ஆடப்படும் ஒரு விளையாட்டில் பங்கேற்கும் ஒருவர் புறக்கணிக்கப்படுகிறார் எனும் வாதமே அபத்தமானது. அவர்கள் சற்று குறைவாக பாதுகாக்கப்படலாம், ஆனால் அரசு ஒருபோதும் தன் ஏஜெண்டுகளை முழுக்க கைவிடாது. புதுமைப்பித்தனை அரசாங்கம் சாக விட்டது போல பி.டி உஷாவையோ கர்ணம் மல்லேஸ்வரியையோ சாக விடாது. அரசு மட்டுமல்ல நாமும் கூட நமது தேசியவாத உணர்வின் வடிகாலாகத் தான் விளையாட்டு வீரர்களைக் காண்கிறோம். இந்தியா கோமதியை கண்டுகொள்ளவில்லை என்று சொல்லும் போதே ஒருவித எதிர் உணர்வின் வழி நாம் முன்னெடுப்பது நமக்கான ஒருவித தேசியவாதத்தையே.
 இதை ஏன் சொல்கிறேன் என்றால், அசோகமித்திரன் அனுபவித்த பசிக்கொடுமைகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்றாவது ஊடகத்தில் இந்தளவுக்கு சர்ச்சிக்கப்பட்டதுண்டா? அவரைப் போன்ற கலைஞர்கள் இதே தேசத்தின் பண்பாட்டு வளர்ச்சிக்காகத் தானே தம்மை தாரை வார்த்திருக்கிறார்கள்? ஆனால் ராணுவத்தின் பதிலியாக விளையாட்டை பார்ப்பது போல நம்மால் கலையை பார்க்க முடியாது. ஏனென்றால் கலை என்றுமே அதிகாரத்துக்கு, தேசியவாத இறுமாப்புக்கு எதிரானது. கலை கலகம் செய்யும். விளையாட்டு வீரர் யாருக்கு எதிராகவும் கலகம் பண்ண மாட்டார். விராத் கோலியோ சச்சினோ பி.வி சிந்துவோ ஒருநாளும் மோடியையோ இந்துத்துவாவையோ விமர்சிக்க மாட்டார்கள். கோமதியும் பண்ண மாட்டார்.  
கடைசியில் கோமதிக்கு செருப்பு வாங்கித் தரவில்லையே என்ற அத்தனை ஒப்பாரிகளுக்கும் பொருள் இதுவே –சச்சின், கோலி, மல்லேஸ்வரி, சிந்து, சானியா, பி.டி உஷா, மேரி கோம் என ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு தேசிய பிரதிநிதி உள்ளது போல தமிழகத்துக்கு இதுவரை இல்லை, இப்போது ஒருவர் வந்து விட்டார், அவரை விட்டு விட மாட்டோம். மத்தியின் வடக்கை ஒட்டிய அரசியலுக்கு எதிரான ஒரு தமிழ் தேசியவாதமாய் இக்கதையாடல் ஆரம்பத்தில் தோன்றினாலும் அடிப்படையில் “எங்களையும் உங்களோடு சேர்த்துக் கொள்ளுங்கள்” எனும் இறைஞ்சலாகவே இது படுகிறது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...