Skip to main content

மணிரத்னத்தின் திரைமொழியை விவாதிக்கும் தொடர் - 2

அர்ஜுன் (அரவிந்த் சாமி) மாவட்ட ஆட்சியாளர். மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்குத் தினம் தினம் தீர்வு காணும் ஒருவர் - மக்களோடு நெருங்கிப் பணி செய்ய வேண்டியவர். அவரை இன்னும் ஹீரோயிக்காக நிறுவியிருக்கலாமே மணிரத்னம், ஏன் இப்படி போர்வெல் போட்டு தண்ணீர் வரவழைக்கும் ஒரு அற்ப விஷயத்தைச் சாதிப்பவராய் காட்டுகிறார் என நான் இளவயதில் இந்தப் படத்தைப் பார்த்தபோது யோசித்திருக்கிறேன் (தண்ணீரைக் கொண்டுவருவது ஒரு சாதாரண விஷயம் என்றில்லை – ஒரு பேரழிவின்போது மக்களைக் காப்பாற்றும் அளவுக்கு சக்தி வாய்ந்த ஒரு சந்தர்ப்பம் அல்ல இது என்கிற அளவில் சொல்கிறேன்). ஆனால், சமீபத்தில் இக்காட்சியைக் கண்டபோது எவ்வளவு கவித்துவமான நுண்ணிய காட்சி அமைப்பு இது என விளங்கியது. அர்ஜுன் என்ன மாதிரியான மனிதன் என சுலபத்தில் இந்தக் காட்சிகள் நிறுவுகின்றன - அதாவது உருவக ரீதியாய்.

ஒரு மலைப்பாங்கான இடத்திலிருந்து அர்ஜுன், தண்ணீர் இருக்கும் இடத்தைக் கணிக்கும் நிபுணர், பொதுமக்கள் ஆகியோர் இறங்கி ஒரு சமநிலத்துக்கு வருகிறார்கள். இதற்கு ஒரு low angle ஷாட். பொதுவாக இத்தகைய ஷாட்கள் பாத்திரங்களை கம்பீரமாய் காட்ட உதவும். அகிரா குரசாவோ தன் செவன் சாமுராய் படத்தில் இந்த பாணி காட்சியமைப்பைப் பயன்படுத்திய விதம் பிரசித்தமானது. அந்த உத்தியிலே அர்ஜுனைக் கம்பீரமாய் வலுவான ஓர் ஆளாய் மணிரத்னம் இக்காட்சி வழியே அறிமுகப்படுத்துகிறார்.
அடுத்து அர்ஜுனின் ஆளுமை. அர்ஜுனும் அந்த போர் போடும் எந்திரமும் ஒன்றுதான். அவன் அந்த எந்திரத்தைப் போன்றே துல்லியமாய் கச்சிதமாய் செயல்படுவான். தன் முடிவுகளில் உணர்ச்சிகள் தலையிட அனுமதிக்க மாட்டான். அர்ஜுனை வலது பக்கம் வைத்து எந்திரத்தை இடப்பக்கமாய் வைத்துச் சட்டகமாக்கும் ஷாட் இதை அபாரமாய்ச் சித்திரிக்கிறது. அர்ஜுன் அரசு இயந்திரத்தின் ஒரு செயல்திறன் மிக்க உறுப்பு. அவனது இந்த இயந்திரத்தனம் அவனை வெற்றிகரமான மனிதனாக்குகிறது; மக்கள் அவனைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் இந்த குணமே அவனை வாழ்வை அதன் சிக்கல்களுடன் கவனிக்க அனுமதிக்காமல் இருக்கிறது. அவனால் சூர்யா எனும் போதாமைகளால் ஆன மனிதனை புரிந்துகொள்ள முடிவதில்லை. இது வெறுப்பாய் உருவெடுக்கிறது; அவனது வெறுப்பு அழிவுக்கு வித்திடுகிறது. எளிய மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் தேவராஜையும் அவனது அடியாட்களையும் அவன் அழிக்கிறான். தேவராஜின் மனைவியின் கரு கலைய மறைமுக காரணமாகிறான். மேலும் அவனது இயந்திரத்தனமான ஆவேசம் மறைமுகமாய் மற்றொரு டானான கலிவர்தனுக்கு தேவராஜைப் பழிவாங்கும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது. இப்படி அர்ஜுனின் இந்த அடிப்படையான இயல்பு நன்மையாகவும் தீமையாகவும் பல ஜாலங்கள் காட்டத்தக்கது. இந்தச் சிக்கல்களின் விதை இந்த establishment ஷாட்களில் தெளிவாகிறது.

(மேலும் படிக்க https://www.minnambalam.com/k/2019/02/18/3)

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...