Skip to main content

பிறந்தநாள் கட்டுரை: கமலுக்கு ஒரு திருஷ்டிப் பொட்டு!



அண்மையில் ஒரு நண்பருடன் பேசும்போது கமலின் காதல் காட்சி நடிப்பைப் பற்றிக் குறிப்பிட்டார். அப்படி ஒரு குழைவு, கெஞ்சல், அணுக்கம், அக்கறை, சட்டென ஆதிக்கம், மூர்க்கம் என அவரது காதல் நடிப்பின் நுணுக்கங்கள் ஏராளம். அத்தனையும் பத்து நொடிக் காதல் காட்சிக்குள் வந்துவிடும் (உதா: வளையோசை கலகலகலவென; பூவாசம் புறப்படும்). “அப்படியே நிஜமாகவே லவ் பண்ற மாதிரி தெரியும்” என்றார் நண்பர் புன்னகைத்தபடி.



இந்த நடிப்பினாலும், அவரது பல காதல் சர்ச்சைகளாலும், உண்மையிலேயே காதல் பண்ணுகிறார் எனும் தோற்றம் ஏற்பட்டுவிட்டது. ரஜினியிலிருந்து விஜய் சேதுபதி வரை பலரும் காதல் காட்சிகளில் சிலாகிப்பாய் நடிக்கக் கூடியவர்களே. ஆனால் அந்த நடிப்பில் ஒரு கறார்த்தனம் இருக்கும்; ஒரு வரையறைக்குள் நின்று நடிப்பார்கள். கமலிடம் நாம் பிரக்ஞையற்ற, முழுக்கத் தன்னை அர்ப்பணிக்கும் காதல் நடிப்பைப் பார்க்கிறோம். ஒரு குழந்தையைக் கொஞ்சுவதைப் போல காதலியின் முகத்தைக் கைகளில் மெத்தென ஏந்தி ரசிக்க, மூக்கால் உரச இன்னொருவரால் முடியாது என்றே நினைக்கிறேன். இந்திய சினிமாவில் கமலைப் போல வேறு யாரையும் நான் அப்படிப் பார்த்ததில்லை. “சேர்ந்நிருந்நால் திரு ஓணம்” என்கையில் என்னவொரு பிரியம் வெளிப்படுகிறது! (சுந்நரி நீயும் சுந்நரன் ஞானும்)

கமலுக்குள் இருக்கும் பெண்மை

இதற்கு முக்கியக் காரணமாய் நான் நினைப்பது கமலின் ஆளுமை. அது பெண்களுக்கான ஆளுமை. பெண்களின் தழுதழுப்பு, எதிலும் முழுக்கக் கரைந்து இன்னொன்றாகும் குணம், சட்டென உணர்ச்சிவயப்படுகிற இயல்பு, சீராய் தர்க்கரீதியாய் தன்னை ஒருங்கிணைக்காமல் முன்னுக்குப் பின் முரணாய் சிந்திக்கும் போக்கு, தன்னை அனைவரும் ரசிக்கும்படியாய், தொடர்ந்து கவனிக்கும்படியாய் வைத்துக்கொள்ளும் (attention-seeking) முனைப்பு, தான் எவ்வளவு கொண்டாடப்பட்டாலும் அது போதாது எனும் உணர்வு, கூடுதலாய் கவனிக்கப்படும் பொருட்டு புதிது புதிதாய் எதையாவது செய்யும் தவிப்பு, பல காரியங்களை ஒரே சமயத்தில் செய்து முடிக்கும் பாங்கு, சதா பேசிக்கொண்டிருக்கும் விருப்பம் – இவையெல்லாம் கமலிடம் உள்ளன.


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...