Skip to main content

நிர்மலா தேவியின் காவல்துறை வாக்குமூலத்தில் ஏன் ஆளுநர் பெயர் இல்லை?


Image result for நிர்மலா தேவி

நிர்மலா தேவி ஆரம்பத்தில் மீடியாவிடம் அளித்த வாக்குமூலத்தில் இருந்து இப்போது சி.பி.சிஐடியிடம் அறித்துள்ள வாக்குமூலமும் பெருமளவில் மாறுபடுவது வெளிப்படை. கவர்னர், கவர்னரின் உதவியாளர், பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், சில அதிமுக பிரமுகர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் விடப்பட்டுள்ளன. தான் பொய்யாக அத்தகையோரின் பெயரை செல்வாக்குக்காக பயன்படுத்தியதாக இப்போது சொல்கிறார் நிர்மலா தேவி. தன் செல்வாக்கை காட்டும் பொருட்டு அதை மாணவிகளிடம் சொல்லியிருக்கலாம், மீடியாவிடம் ஏன் அத்தகைய பெயர்கள் வர வேண்டும்? இந்த முரண் முக்கியம்.
மீடியாவிடம் தன் செல்வாக்கை காட்டும் பொருட்டு பெயர்களை உதிர்த்தாரா? எனில், சம்மந்தமே இல்லாமல், மீடியாவிடம் ஆளுநர், ஆளுநரின் செயலர் ஆகியோரின் பெயரை சொல்லி இருப்பாரா? இடையில், அவர் சிறையில் கொல்லப்படலாம் எனும் சேதி ஏன் பரவியது?
இது சி.பி.சி.ஐடி பொய்யாக சமைத்த, வடிகட்டப்பட்ட வாக்குமூலம் தான். இதில் பழியை மொத்தமாய் இடைத்தரகர்களான நிர்மலா தேவி, கருப்பசாமி மற்றும் முருகன் மீது போட்டு விட்டு, எல்லா விபச்சார குற்ற விசாரணைகளிலும் நிகழ்வது போல குற்றத்தில் பலன் அனுபவித்த பெரும் தலைகள் தப்ப விடப்படுகின்றன. இதில் ஒரு சுவாரஸயம் மனித மேம்பாட்டு அதிகாரி ஒருவருடனான தன் செக்ஸ் அனுபவங்களை  நிர்மலா தேவி வெளிப்படையாகவே பேசி இருப்பது. இப்போதைக்கு இவருக்கு மட்டும் காவல் துறையின் அருளாசி இல்லை எனத் தெரிகிறது. இந்த குழப்பங்களுக்கு நடுவில் அவரை மட்டும் கடா வெட்டலாம் என அதிகார வர்க்கம் விரும்புகிறது.
தன்னுடன் உறவில் இருந்த சில வக்கீல்கள், சில ஆட்களுடன அவர் இருந்த விடுதியின் பெயர் ஆகியவை வாக்குமூலத்தில் மறைக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் 1) அந்த விடுதி / ஆட்களின் மீது தேவையற்ற பழி வரக் கூடாது என்பதோ 2) சிலரது அடையாளங்கள் மறைக்கப்பட வேண்டும் எனும் காவல் துறையின் விருப்பமாகவோ இருக்கலாம்.
எனக்கு இதில் மற்றொரு கேள்வி இருக்கிறது. நிர்மலா தன் முதல் வாக்குமூலத்தில் நூற்றுக்கணக்கான மாணவிகளை தான் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாய் கூறினார். இப்போதைய வாக்குமூலத்தில் குற்றம் சாட்டிய நான்கு மாணவிகளை மட்டுமே தூண்டியதாகவும் அவர்கள் மறுத்ததாகவும் சொல்கிறார். இது உண்மையெனில் அவர் மீதான வழக்கு நீர்த்துப் போய் விபச்சாரத்துக்கு தூண்டிய ஒன்றாய் மாறுகிறது. அவருக்கு பல்கலைக்கழக ஆட்கள் சிலருடன் இருந்த பாலியல் உறவை குற்றமாய் பார்க்க முடியாது. ஆக, நிர்மலா கவர்னர் உள்ளிட்டோரை தற்போது காப்பாற்றுவதற்கு பதிலீடாக இப்போது சி.பி.சி.ஐடி இப்போது வழக்கை பலவீனமாக்கி நிர்மலாவை காப்பாற்றி உள்ளது எனலாம்.
யோசித்துப் பாருங்கள்: நூற்றுக்கணக்கான மாணவிகளை குற்றத்தில் ஈடுபடுத்தினார் என்பது எங்கிருக்கிறது, நான்கு மாணவிகளை குற்றத்தில் ஈடுபடுவதற்காய் தூண்டி தோல்வி அடைந்தார் என்பது எங்கிருக்கிறது? மாணவிகளை ஈடுபடுத்தி அதிகார வர்க்கத்திடம் அனுகூலம் அடைந்தார், அதன் மூலம் தன் கல்லூரிக்கு அனுகூலங்களைப் பெற்றுத் தந்தார் எனும் குற்றங்கள் ஊழல் குற்றங்கள். இப்போது ஊழல் கறை முழுக்க துடைத்து அகற்றப்படுகிறது.
ஒருவேளை இப்படி நீர்மோர் அக்கப்படாமல் இருந்திருந்தால் அந்த நூற்றுக்கணக்கான மாணவிகள் மீதும் வழக்கு பாய்ந்திருக்குமா? அவர்கள் பலியாகப்பட்டிருப்பார்களா? அவர்களும் சுயவிருப்பத்துடன், பணத்துக்காக பாலுறவில் ஈடுபட்டார்கள் தானே? இதைக் குறித்து ஒரு சட்டநிபுணர் நண்பரிடம் விசாரித்தேன். அவர் என்ன சொன்னாரெனில் அந்த மாணவிகளை இவ்வழக்கில் அடையாளம் காட்டாமலே சேர்த்துக் கொள்ள முடியும் (பாலியல் வழக்குகளில் பெண்களின் அடையாளம் தெரியப்படுத்த வேண்டாம் என சமீபத்தில் சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ளது). ஒருவேளை இப்பெண்கள் தம் விருப்பப்படி செய்தார்கள் என்றாலும் 2017இல் குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பொன்றின்படி இது குற்றமாகாது. பெண்ணை வற்புறுத்தி ஈடுபடுத்துவது மட்டுமே குற்றம், தாமாகவே ஒரு பெண் பணத்துக்காக ஈடுபடுவது குற்றமாகாது. ஈடுபடும் ஆணையும் குற்றவாளி ஆக்க முடியாது.
ஆகையால் இவ்வழக்கை வலுவாக்கும் ஒரே வழி இதன் பின்னணியில் உள்ள ஊழலை (பணத்துக்குப் பதிலாய் பெண்ணுடலை அளிக்கும் ஊழல்) வெளிச்சத்துக்கு கொண்டு வருவது மட்டுமே. அதை விசாரணை அதிகாரிகள் செய்யாதது அவர்களின் நோக்கத்தை பட்டவர்த்தமாக்குகிறது.
இது போன்ற வழக்கு விசாரணைகள் அடிப்படையிலேயே பிழையானவை.
சி.பி.சி.ஐடி மாநில அரசின் கீழ் வருகிறது. மாநில அரசு மத்திய அரசின் கீழ் வருகிறது. மத்திய அரசின் பிரதிநிதி கவர்னர். ஆக சி.பி.சி.ஐடி கவர்னரின் கீழே இருக்கிறது. உங்கள் குடுமி யார் கையில் இருக்கிறதோ அவர்களுக்கு எதிராக எப்படி உங்களால் விசாரணை நடத்தி நிரூபிக்க முடியும்?

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...