Skip to main content

நிர்மலா தேவி வழக்கில் உண்மைக் குற்றவாளிகள் ஏன் தப்பிக்கிறார்கள்?


Image result for நிர்மலா தேவி
அதிகார வர்க்கத்துக்காக நிர்மலாதேவி செய்தது போன்ற குற்றங்களில் சம்மந்தப்பட்ட பிரமுகர்கள், ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து காப்பாற்றப்படுவது வாடிக்கை. யாரும் இதைத் தடுக்க முடியாது. இதற்கு முழுப்பொறுப்பை நம் அரசியல் சட்ட அமைப்பை எழுதினவர்கள் தாம் சுமக்க வேண்டும். நீதியை நிலை நாட்ட வேண்டும் என்பதை விட அதிகார ஓரிடத்தில் குவிய வேண்டும், ஆளும் கட்சி நிலையாக இருக்க வேண்டும், மாநிலங்கள் ஒற்றைப் புள்ளியில் திரள வேண்டும், அவர்களுக்குள் அதிகாரப் போட்டி ஏற்படக் கூடாது, பிரிவினை எண்ணம் வரக் கூடாது என்பதே நம் சட்டத் தந்தைகளின் நோக்கமாய் இருந்தது. ஆகையால் அதிகார பரவலாக்கத்தை ரத்து செய்து அதிகார குவிப்பை அவர்கள் ஆதரித்தார்கள்.

 முழுக்க முழுக்க அதிகார வர்க்கத்துக்கு சாதகமான, பொதுமக்களுக்கு விரோதமான அரசியல் சட்டம் நமது. மக்களுக்கு தண்டிக்க கிடைக்கும் ஒரே வாய்ப்பு தேர்தலே. அப்போதும் எதிர்க்கட்சி வந்து முந்தின ஆட்சியாளர்களை தண்டிப்பார்கள் என்பதில் எந்த உறுதியும் இல்லை. அது மட்டுமல்ல, ஊழல்களில் சரிபங்கை வகிக்கும் நம் அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க முடியாது. அதிகாரிகளே தம்மைத் தாமே விசாரித்து நடவடிக்கை எடுக்க முடியாதில்லையா?
இந்த அவல நிலைக்கு ஒரு தீர்வு, இத்தகைய ஆளும் வர்க்கத்துக்கு எதிரான வழக்குகள் வரும் போது நீதிமன்றத்தின் கீழ் சமூக ஆர்வலர், எதிர்க் கட்சி தலைவர், நிபுணர் ஆகியோர் கொண்ட ஒரு குழுவை நிர்மாணித்து அதன் கீழ் வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐடி போன்ற அமைப்புகளை கொண்டு வருவது; இந்த அமைப்பில் உள்ள விசாரணை அதிகாரிகளை பதவி நீக்கம் செய்யவும் அவர்களின் பதவி உயர்வுக்கு தடை விதிப்பதற்குமான அதிகாரத்தை இந்த நீதிமன்றக் குழுவுக்கு கொடுப்பது – சுருக்கமாய் ஆளும் கட்சியின் கையை சற்றே கட்டிப் போடுவது.
அதுவரை நீதி என்பதே சாத்தியமில்லை.


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...