Skip to main content

கவிதையில் மிகைச்சொற்களின் தேவை (4)


Image result for மனுஷ்யபுத்திரன்

நமக்கிடையே மூடும் கதவுகள்
நமக்கிடையே வளரும் சுவர்கள்

என்பதில் உள்ள மீள்கூறல் மனுஷ்யபுத்திரனின் வாசகர்களுக்கு வெகுவாய் பரிச்சயமானது. பாப்லோ நெருடாவை நினைவுபடுத்துவது. (தமிழில் பெரும்பாலான நவீன கவிஞர்கள் இந்த மீள்கூறல் உத்தியை தவிர்க்கிறார்கள்; ஆனால் வைரமுத்து, அப்துல் ரகுமான், தமிழன்பன் போன்ற வானம்பாடிகள் இதை தாராளமாய் எடுத்தாண்டிருக்கிறார்கள்.) ஒரு பெரும் மக்கள் திரளை நோக்கி ஒருவன் உரையாற்றும் தொனியை இது மனுஷ்யபுத்திரன் கவிதைகளுக்கு தருகிறது என்கிறார் ஜெயமோகன் (“கடவுளற்றவனின் பக்திக் கதைகள்: மனுஷ்யபுத்திரன் கவியுலகு”). இங்கே வெகு அந்தரங்கமான ஒரு துயர கவிதையில் தனிமையை இன்னும் உக்கிரமாக்கவும் மனுஷ்யபுத்திரன் இந்த உத்தியை பிரயோகிக்கிறார்.  
அடுத்து அவரது சொற்தேர்வை பார்ப்போம்.

ஒவ்வொரு நாளும்
வேறுவேறு இடங்களில் பிரிகின்றன
இங்கு அவர் எதுகையை கொண்டு வர நினைத்திருந்தால் வெவ்வேறுஎன எழுதியிருக்கலாம். இசை ஒழுங்கு மீது மனுஷ்யபுத்திரனுக்கு ஒவ்வாமை இல்லை. ஆனால் அவர் ஏன் செய்யவில்லை? இங்கு எதுகை அமையாமல் இடறுகிறது. அது சற்றே நிரடுகிறது. பிறகு ஏன் மனுஷ்யபுத்திரன் இச்சொல்லை தேர்கிறார்?
 வெவ்வேறுஎனும் சொல் சன்னமானது; வேகமாய் ஒழுங்கிச் செல்வது; மேலும் எதுகையானால் அச்சொல்லில் நாம் நின்று யோசிக்க மாட்டோம். இந்த இடத்தில் பிரிவின் கனம் கூடி வர வேண்டுமெனில் ஒரு கனத்த சொல் வேண்டும். ஆகையால்வேறுவேறுபொருத்தம். அச்சொல் சோற்றிடையே நாம் கடித்த சிறு கல்லைப் போல் உறுத்துகிறது.
அதே போல இக்கவிதையில்வாழ்விடங்களுக்கு, “துயரங்களெங்கும், “நீங்குதலின், “இல்லாமலாகும்போன்று 15 கனத்த ஓசை கொண்ட நீண்ட சொற்கள் வருகின்றன. தமிழுக்கே உரித்தான பெயர்ச்சொல் + வினையுரிச்சொல் ஜோடிச்சொற்களை நிறைய பயன்படுத்துகிறார் (.தா, “துயரங்களெங்கும், “நமக்கிடையே”). இதைப் போன்றே பன்மைச் சொற்களும் (”நிலங்களின், ”வாழ்விடங்களுக்கு”) வருகின்றன. ”அந்தி இருள்என எழுத முடிகிற இடத்தில்அந்தியின் இருள்என்கிறார். இவை எல்லாம் சேர்ந்து இக்கவிதையை நீங்கள் உரக்க படிக்கிறீர்கள் என்றால் வேகமாய், ஜிலுஜிலுவென வாசித்துப் போக முடியாது. உங்கள் வாசிப்பின் கால அளவு நீள்கிறது. நீண்டு செல்லும் உணர்ச்சி என்றுமே துயரம் தானே! இப்படி இக்கவிதையை சொற்தேர்வின் வழியே மட்டுமே, கனத்த தொனியை ஏற்படுத்தி, நம் மனதுக்குள் கசப்பேற செய்கிறார் மனுஷ்யபுத்திரன்.
இனி கவிதையின் இறுதி வரி.
ஒரு சிறிய துயரம்
நம்முடன் ஒரு வார்த்தை பேசாமல்
மௌனமாக கூடவே நடந்து வருகிறது
இது பிரிகிற அந்த காதல் ஜோடியின் கையைப் பற்றியபடி ஒரு குழந்தை நடந்து வருகிற தோற்றப்பிழையை உருவாக்குகிறது. அதுவும் குழந்தையாகிய சிறு துயரம் மிக அமைதியாய் நடந்து வருகிறது. உடைந்த குடும்பங்களில் தான் அப்படி நிகழும். இங்கே குடும்பமே இல்லை; ஆனாலும் கற்பனையில் ஒரு குடும்பம் இருக்கிறது. அது அவர்கள்தூக்கிய வளர்த்த துயரமாகஇருக்கிறது. இந்த நெகிழ்ச்சியான உருவகத்தில் என் கவனத்தை நெருடிய விசயம்ஒரு வார்த்தை பேசாமல் / மௌனமாக”.
ஒரு வார்த்தை பேசாமல் என்றாலே மௌனம் தானே? ஏன் மீள சொல்ல வேண்டும்? அதே போலநம்முடன்என்பதில்உடன்இருக்கிறதே; அதை திரும்பகூடவேஎன ஏன் அதே வாக்கியத்தில் சொல்ல வேண்டும்?
ஒரு காரணம் உள்ளது.
இவ்வாக்கியத்தை ஒருவேளைநம்முடன் /
மௌனமாக நடந்து வருகிறதுஎன திருத்தினால் (சலூனில் முடிவெட்டி வந்த குழந்தை போல) வாக்கியம் ஜீவனற்று போகிறது; ஏனெனில்
 ஒரு சிறிய துயரம்
நம்முடன் ஒரு வார்த்தை பேசாமல்
மௌனமாக கூடவே நடந்து வருகிறது

என்பதில் மீள ஒலிக்கும் அச்சொற்கள் நேர்பொருளுக்கு தேவையில்லை தான். ஆனாலும் கவிதையின் தனிமை தொனியை அடர்த்தியாக்க, நகைமுரணை தீவிரமாக்க, உங்கள் விழியோரம் துளிர்க்கும் அந்த ஒற்றைக் கண்ணீர்த் துளியை கனத்துப் போக செய்ய அச்சொற்கள் மிகையாய் தோன்றி மீள ஒலிப்பது அவசியமாகிறது.
ஆகையால் நண்பர்களே இதற்கு மேல் நான் சொற்களை இறைக்கப் போவதில்லை.  

நன்றி: தீராநதி

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...