Skip to main content

கவிதையில் மிகைச்சொற்களின் தேவை (3)


Image result for மனுஷ்யபுத்திரன்

இந்த நகரத்தில்
நம் வழிகள்
ஒவ்வொரு நாளும்
வேறுவேறு இடங்களில் பிரிகின்றன

நமக்கிடையே மூடும் கதவுகள்
நமக்கிடையே வளரும் சுவர்கள்
நம் நீங்குதலின் நடுவில் மின்சார ரயில்
நமக்கு நாம் இல்லாமலாகும் அந்தியின் இருள்


நாம் அமர்ந்திருந்து எழுந்து வந்துவிட்ட
நிலங்களின் மீது
நிலவொளி இந்நேரம்
பெரும்தனிமையில் படர்ந்திருக்கும்

திரும்பும் வழியில்
நான் என் பொறுப்புகளை நினைத்துக் கொள்கிறேன்
நீ நிச்சயமற்ற உன் நாளையை நினைத்துக் கொள்கிறாய்
நம் வாழ்விடங்களுக்கு
அவரவர் வழியில் மீளும் துயரங்களெங்கும்
ஒரு சிறிய துயரம்
நம்முடன் ஒரு வார்த்தை பேசாமல்
மௌனமாக கூடவே நடந்து வருகிறது

மனுஷ்ய புத்திரனின் இக்கவிதையில் இசையொழுங்கு இயல்பாக உள்ளது; வானம்பாடிகளுக்கும் தேவதேவன், மனுஷ்யபுத்திரன்களுக்குமான வேறுபாடு இதுஅதாவது வலிந்து திணிக்கப்படாத இசைத்தன்மை.
 உதாரணத்திற்கு, இக்கவிதையில் இரண்டாவது பத்தியில் சொற்களின் முதலெழுத்துக்கள் ஒன்றி வருகின்றன (மோனைநமக்கிடையே, நம், நீங்குதலின், நமக்கு, நாம்); அதற்கு அடுத்த பத்தியில் மோனை சில முறை தான் வருகிறது (நாம், நிலங்களின், நிலவொளி). இந்த ஒழுங்கின்மையை நான் கவனிக்க வேண்டியது அவசியம்.
 மனுஷ்யபுத்திரனுக்கு ஓசை லயம் வேண்டும்; ஆனால் அது கவிதை முழுக்க ஒரே சீரான தாள லயமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதாவது ஓசை நயத்துக்காக சொற்கோர்வை இல்லை; வெற்று ஓசையின் அழகுக்காக சொல்லின் இசைத்தன்மையை அவர் கிலுக்கிப் பார்ப்பதில்லை. அர்த்தத்தை கட்டியெழுப்ப மாட்டுமே சொற்களின் இசை நயத்தை அவர் பயன்படுத்துகிறார். ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக அவர்ஓசையை சில இடங்களில் இங்கு சீராக கொண்டு வருகிறார். அது என்ன?
இக்கவிதையின் முக்கிய சொல்நாம்” – இருவர் இணைந்து நாம் ஆனாலும் அவர்கள் தனித்தே இருக்கிறார்கள். அவர்கள் இருவழிகளிலாய் பிரிந்து செல்லப் போகிறார்கள். அவர்கள் பரஸ்பரம் அன்பு பாராட்டும் போதும் உள்ளுக்குள் தத்தமது உலகத்துக்குள் மீள்வதற்கான தயாரிப்புகளை மேற்கொள்கிறார்கள். இது தான் இக்கவிதையில் மென்கசப்பை, கழிவிரக்க தொனியை, நகைமுரணைஒட்டுமொத்தமாய் ஒரு அவல தொனியை - தோற்றுவிக்கிறது. மனுஷ்யபுத்திரன் இந்த நகைமுரணை கவிதையின் ஒலி ஒழுக்கு மூலம் உணர்த்த முயல்கிறார். அதற்காக அவர் என்ன செய்கிறார்?
நான், நாம், நீ, நம், நமக்குஆகிய சொற்கள் 11 தடவைகள் இச்சிறு கவிதையில் வருகின்றன. இந்த சுட்டுப்பெயர்கள் (pronouns) இல்லாது கூட இக்கவிதையை அவர் எழுதியிருக்க முடியும்.
உதாரணமாய்,
நமக்கிடையே மூடும் கதவுகள்
நமக்கிடையே வளரும் சுவர்கள்
நம் நீங்குதலின் நடுவில் மின்சார ரயில்
நமக்கு நாம் இல்லாமலாகும் அந்தியின் இருள்

என்பதை
இடையே மூடும் கதவுகள்
வளரும் சுவர்கள்
நம் நீங்குதலின்
நடுவில் மின்சார ரயில்
இல்லாமலாகும் அந்தியின் இருள்

இப்படியும் எழுதலாம். (எண்பதுகளில் இந்த பாணியே பிரசித்தமாய் இருந்ததுஉதாரணமாய் எஸ். வைத்தீஸ்வரனின் கவிதைகள்.) இரண்டு பத்திகளுக்கும் என்ன வித்தியாசம்? முதல் வடிவில் உறவு கொள்ளும் தரப்புகளின் இடம் முக்கியமாய் அழுத்தம் கொள்கிறது. இரண்டாவதில், அவர்கள் இடையிலான இன்மை வலியுறுத்தப்படுகிறது. முதல் வடிவம் உணர்ச்சிகரமாய், ஓசை நயம் கொண்டு, உரையாடல்தன்மையுடன்அதனாலே மனிதக்குரலாய், சதைப்பற்றுடன் - உள்ளது. இரண்டாவதோ அரூபமாய் (ஒரு சர்ரியலிய ஓவியம் போல்) உள்ளது.
ஆக, அழுத்தம் கொடுப்பதற்காக மட்டுமே மனுஷ்யபுத்திரன் இங்கு சுட்டுப்பெயர்களை மீள மீள பயன்படுத்துகிறார். ஏன்?
நாம், “நமது, “நமக்கானது என திரும்ப திரும்ப அவர் உச்சாடனம் செய்யும் போது கவிதையில் வரும் காதலர் இருவரும் இணைந்தே ஈருடல் ஓருயிராய் இருப்பதான ஒரு பிரமை நமக்கு ஏற்படுகிறது. ஆனால் கவிதைக்குள் அவர் அவர்கள் பிரியப்போகிறார்கள்; பிரிவதற்கு முன்பான அந்த நிமிடங்களிலும் மனதளவில் வெகுவாய் விலகிக் கொண்டிருக்கிறார்கள் எனப் பேசுகிறார். ஒன்றை உணர்த்தி விட்டு, முற்றிலும் முரணான ஒன்றை சொல்கிறார். இதுவே கவிதையின் அதிர்ச்சி மற்றும் நகைமுரண். இதில் இருந்து தான் அந்த அவல உணர்வு தோன்றுகிறது.
இது போதாதென்று கூடுதலாய் (ஏற்கனவே குறிப்பிட்டது போல) “நாம்என்பதன் ஒலிமயக்கத்தை ஏற்படுத்தஒலியில் துவங்கும் சொற்களை 11 முறை பயன்படுத்துகிறார்.
 ஒவ்வொரு தினமும்என எழுதலாம்; ஆனால் அவர்ஒவ்வொரு நாளும்என்கிறார்.
பிரிதலுக்கு இடையேஇன்னும் இயல்பாய் இருந்திருக்கும்; ஆனால் அவர்நீங்குதலின் நடுவில்என எழுதுகிறார்.


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...