Skip to main content

கவிதையில் மிகைச்சொற்களின் தேவை (2)


Image result for குட்டி ரேவதி
குட்டிரேவதியின் கவிதைகளில் பெண் இச்சையுடன் ஒருவித ஆண் நோக்கும் (male gaze) சட்டென தென்படும். அதாவது, அவர் பெண்ணியவாதி என்றாலும், தனக்கான வலுவான கருத்தியல் நிலைப்பாடு கொண்டவர் என்றாலும், அவரையும் மீறி கவிதையில் பல சங்கதிகள் வரும்அவர் நம்புவதற்கு நேர்மாறான சேதிகள் வரும். .தா., அவரது காதல் கவிதைகளில் வரும் ஆண் நோக்கு. ஒரே சமயம் ஒரு பெண்ணியவாதியும் பெண்ணியத்தை பொருட்படுத்தாத இச்சையில் தவிக்கும் ஒரு எளிய பெண்ணும் அவர் கவிதைக்குள் குரலெழுப்புவார்கள் (“முலைகள்தொகுப்பு). இப்படியாக (ஒரே சமயம் ஆண் ஆதிக்கத்தை மறுக்கும் அதற்கு இணங்கிப் போகும் முரண் போக்குகளை வெளிப்படுத்தும்) உடைந்த சிதறுண்ட பெண் மனத்தை நாம் மாலதி மைத்ரியின் கவிதைகளிலும் காணலாம். இந்த கட்டற்ற பாய்ச்சல் இவ்விரு கவிகளின் மொழியின் ஒரு தனிச்சிறப்பு. மாலதி மைத்ரி பின்நவீனத்துவத்தில் இருந்து இந்த சிதறுண்ட போக்கை பெற்றிருக்கலாம். தேவதேவனில் இருந்து இதை குட்டிரேவதி பெற்றிருக்கலாம் (அல்லது தன்னியல்பாகவும் தோன்றியிருக்கலாம்).

முக்கியமாய் இங்கு குறிப்பிட வேண்டிய சேதி இந்த பெண் கவிகள் மொழியை தர்க்க ஒழுங்குடன், கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த எத்தனிக்கவில்லை என்பது. தாபத்திலும் சினத்திலும் ஆவேசத்திலும் நிலைகொள்ளாது தவிக்கும் உடலைப் போன்றே இவர்களின் மொழியும் நொதிக்கிறது.
ஆனால் ஆண் கவிகள் இதே நீர்மையை, தர்க்கத்தை கடந்த பாய்ச்சலை கவிதையில் அடைய இசைத்தன்மையை, மிகையான சொற்களை பயன்படுத்தினர். ஒரே நோக்கம், ஆனால் இருவேறு பாதைகள்.
 இவர்களுடன் குறிப்பிட வேண்டிய மற்றொருவர் என்.டி ராஜ்குமார்தமிழில் இசைப்பாடல் போக்கு கொண்ட நவீன கவிஞர்களில் அப்பட்டமானவர் இவர். நாட்டார் மக்கள் கலை வடிவங்களின் மொழியும் தாளலயமும் இவரது கவிதைகளில் நர்த்தனமிடும்.
இசைப்பாடல் மரபின் மற்றொரு நவீன கிளையாக இருப்பவர் மனுஷ்ய புத்திரன். அவரது சிறந்த கவிதைகள் அறிவார்த்தம் குறைவாகவும் உணர்ச்சித்தளும்பல் மிகுதியாகவும் இருக்கும். அதாவது, அவரிடம் தர்க்க கட்டமைப்பு கொண்ட இறுக்கமான கவிதைகளும், இப்படி முந்தானையை அடிக்கடி பத்திரப்படுத்தி இடுப்பில் சொருகாத அபாரமான கவிதைகளும் உண்டு. குறிப்பாக அவரது காதல் கவிதைகள். இசையொழுங்கு, சொற்களின் அமைப்பு, மீளமீள ஒலிக்கும் சொற்றொடர்கள், முன்பின் முரணான கூற்றுகள் ஆகியவற்றின் உதவியுடன் வெற்றி பெறும் கொதிப்பான கவிதைகள் இவை. இவற்றில் சில கவிதைகளில் பித்தின் உச்சத்திற்கு லகுவாய் போய் திரும்புவார் மனுஷ்யபுத்திரன்.
இதற்கு உதாரணமாய் மனுஷ்ய புத்திரனின் பல சிறப்பான கவிதைகளை சொல்லலாம். ஆனால் என்னை இந்த கட்டுரையை எழுதத் தூண்டிய கவிதையையே இங்கு குறிப்பிடலாம் என நினைக்கிறேன். அக்கவிதையின் தலைப்புபிரியும் இடங்கள்” (”நூறு பௌர்ணமிகளின் வெளிச்சம்தொகுப்பிலிருந்து).


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...