ஒரு புதுத் தலைவர் தோன்றி மக்கள் மனதை வெல்ல, பழைய தலைவர் தனக்கென ஒரு வாரிசைக் கட்டமைத்து, தன் வாரிசுக்கெனக் கட்சியைத் தயார்படுத்தி வைக்காமல் இருக்க வேண்டும். அதாவது, வாரிசுகள் இல்லாத வெற்றிடமே புதுத் தலைமைகள் தோன்ற, கட்சிக்கு உள்ளும் புறமும் ஜனநாயகப் போட்டி நிலவ, உதவும். அதுவே அண்ணாவுக்கும் கலைஞருக்கும் நிகழ்ந்தது. ஆக, இந்திரா காந்தி காங்கிரஸ் கட்சியில் உள்ள கலகத் தலைமைகளை ஓரங்கட்டிப் பிரதமரானார் என்பதை இப்படியும் புரிந்துகொள்ளலாம்: இந்திரா எனும் வாரிசே இல்லை எனில் ஒருவேளை ஒரு வலுவான தலைமை காங்கிரஸில் தோன்றி இருக்கலாம் (அண்ணாவுக்குப் பின் கலைஞரைப்போல). ஆக, வாரிசு வழியான தலைமை என்பதே ஜனநாயகத் தலைமை தோன்றுவதற்குத் தடையாக அமைகிறது. தமிழகத்தில் எப்போதெல்லாம் வாரிசுத் தலைமை இல்லையோ அப்போதெல்லாம் புதுத் தலைமை தோன்றியிருக்கிறது (உடனடியாய் அல்லாவிட்டாலும்).
மேலும் படிக்க...
மேலும் படிக்க...