Skip to main content

மோடியிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது


Image result for stalin dmk
தலைவர் பதவி ஏற்ற ஸ்டாலினின் உரையில் நான் கவனித்த ஒன்று தடம் பிறழ்ந்து எதையும் கூறி விடக் கூடாதே எனும் அந்த மெல்லிய பதற்றம். இது தேவையற்ற ஒன்று. மக்களின் உணர்வு ஓட்டத்தைப் புரிந்து அதற்கு ஏற்ப பேசுவதே இன்றைய அரசியலின் தேவை. இன்றைய அரசியல் ஒரு பகற்கனவு அரசியல்.

மோடி இதற்கு நல்ல உதாரணம். அவர் ஆட்சிக்கு வந்த பின் எவ்வளவோ விசயங்களை சொல்லி உள்ளார். அவற்றுக்கு நடைமுறையில் எந்த மதிப்பும் இல்லை (கறுப்புப் பணத்தை ஒழித்தேன் என்பது போல). ஆனால் மக்கள் மத்தியில் அவரது மதிப்பு இதனால் உயர்ந்துள்ளது. இன்றைய வாக்காளர்கள் ஒரு பக்கம் உங்கள் பேச்சின் தர்க்க நியாயங்களை, முரண்களை குறிப்பிட்டு சர்ச்சை செய்வார்கள். ஆனால் அவர்கள் ஒரு சிறு தரப்பே. பெரும் தரப்பு இந்த வாக்கியங்களின் உள்முரணை பொருட்படுத்தாது ஏற்கிறது; உணர்வுவயப்பட்டு பாராட்டுகிறது. என்னதான் ஜி.எஸ்.டி வரி, டிமானிடைசேஷன், மதவாதம் போன்ற பிரச்சனைகளால் பாஜக அரசு கடும் விமர்சனத்தை எதிர்கொண்டாலும் மோடியின் மதிப்பு குறைந்ததாய் தெரியவில்லை. இதற்குக் காரணம் அவர் ஒரு கனவு வியாபாரி என்பது. அவர் எந்த ஆதாரங்களையும் கொடுக்காமலே அனைத்தையும் சாதித்ததாய் வண்ண வண்ண பலூனாய் ஊதுவார். மக்களும் உற்சாகமாய் அந்த பலூன்களை வாங்கிக் கொண்டு விளையாடி மகிழ்வார்கள். பறக்க விடுவார்கள்.
இன்றைய அரசியலில் பேச்சும் உண்மையும் ஒன்றாய் இருக்க அவசியம் இல்லை.
கலைஞரின் பேச்சு இதற்கு நேர்மாறானது. அவர் ஆதாரத்துடன் பெரும்பாலும் முரண்பாடின்றித் தான் பேசுவார். அந்த பிசிறற்ற உரைகளின் காலம் முடிந்து விட்டது. இன்றைய வாக்காளர்களுக்கு உண்மையை விட கனவுகளே முக்கியம்.
நான் திரு. ஸ்டாலினிடம் சொல்ல விரும்புவது இது:
நீங்கள் இன்னும் துணிச்சலாய் ஆணித்தரமாய் பேசுங்கள். கற்பனையாய் பேசுங்கள். நாடகீயமாய் பேசுங்கள். நீங்கள் ஒன்றை சொல்லியதுமே அதை நடத்தி விட்டதாய் ஒரு பாவனையை அதில் கொண்டு வாருங்கள். உதாரணமாய், நீங்கள் உங்கள் தலைமையின் கீழ் குடும்ப அரசியல் இனிமேல் இராது என அந்த தலைமையேற்கும் உரையில் குறிப்பிட்டிருக்கலாம். “நான் நீண்ட கால அரசியல் செயல்பாட்டின் மூலமே கட்சியின் தலைமையை அடைந்தேன். தலைவரின் மகனாக அல்ல. என்னைப் போன்று உழைப்பவர்கள் மட்டுமே இனி கட்சியில் பொறுப்புகளை அடைய முடியும். வாரிசுகள் என்பதாலே கட்சியில் யாருக்கும் தனி இடம் இருக்காது.” என சொல்லுங்கள்.
1)   இது உங்கள் பிம்பத்தை உயர்த்த உதவும். பின்னர் நீங்கள் ஆட்சிக்கு வந்த பின் உங்கள் மகனோ மனைவியோ கட்சியில் முன்னிலைப்பட்டாலும் பிரச்சனை இல்லை. மக்கள் இந்த முரண்பாட்டையெல்லாம் பொருட்படுத்த மாட்டார்கள். சொற்களே முக்கியம்.
2)   கட்சிக்குள் சகோதர யுத்தத்தை ஒழிக்க இந்த கோரலை நீங்கள் பயன்படுத்தலாம். “நான் என் சகோதரிக்கே கட்சியில் இடம் அளிக்கவில்லை” எனச் சொல்லி திமுகவில் குடும்ப அரசியலே இல்லை என நீங்கள் நிறுவலாம். சொல்லிக் கொண்டே கனிமொழி, அழகிரி, மாறன்களை ஒழித்துக் கட்டலாம். உங்கள் பெருமையையும் நிறுவலாம். இதில் உங்களுக்கு இரட்டிப்பு அனுகூலம்.
பேச்சு பேச்சு பேச்சு … இதுவே உங்களை உயர்த்தும் ஸ்டாலின். "செயல்" தலைவரின் காலம் முடிந்து விட்டது.
வாழ்த்துக்கள்.


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...