Skip to main content

பெண்கள் இப்படித்தான் நினைக்கிறார்களா? (விமர்சனம்)


Image result for பெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா
   
பெண்களை பற்றி  எழுத்தாளர் ஆர்.அபிலாஷ் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது.சினிமா,வேலையிடம், சமூகம் என நவீன வாழ்க்கையில் பெண்கள் எவ்வாறாக இருக்கிறார்கள்,பெண்ணுடல் சந்திக்கும் சிக்கல்கள்,உயர்பதவியில் இருக்கும் பெண்களின் சர்வாதிகாரம் என பல்வேறு தளங்களை தொட்டு பேசுகிறது.

" ஆடை ஒழுக்கம் "என்ற தலைப்பில் எழுதபட்ட கட்டுரை ஒன்றில் "ஆடை என்பது பெண்ணழகை கற்பனை செய்வதற்கான ஒரு வெளியை உருவாக்குகிறது."எந்தளவுக்கு உடலை மறைக்கிறோமோ ,எந்தளவு தொலைவில் வைக்கிறோமோ அந்தளவுக்கு அதன் முக்கியத்துவம் அதிகமாகிறது".குறைந்த ஆடைகளுக்கும், பாலியல் கிளர்ச்சிக்கும் சம்பந்தம் இல்லை.சமீபத்தில் நண்பர்களுடன் கோவாவிற்கு பயணம் சென்று போது இதை உணர்ந்தேன்.
மாமியார் மருமகள் உறவு என்ற இருமை மட்டும்தான் பொதுபுத்திக்குள் இருக்கிறது.ஆனால் மாமியார்-மருமகன் பற்றி கண்ணுக்கு புலனாக கண்ணிகள் நிறைய இருப்பதை  இளவரசன் -திவ்யா காதலை வைத்து எழுதப்பட்டிருக்கும இக்கட்டுரை இத்தொகுதியில் எனக்கு பிடித்த கட்டுரைகளில் ஒன்று.
எங்கள்  ஊரில் திருவிழாக்களின் போது  பெண்கள் பட்டுப்புடவையுடுத்தி விசேஷ அழகுடன் தெரிவார்கள்.ஆண்கள் அதற்கு பாலியல் கோணம் சூட்டி பின் தொடர்வார்கள்.பெண்ணுடலின் சிக்கல் என்ற கட்டுரை  அது "அழைப்பல்ல"  உரையாடல் அதுவும் தகுதியான ஆண்களுடனான உரையாடல்  என்கிறது.
பள்ளி ,கல்லூரிகளில் மாணவிகள் ஆசிரியர் மீது கொள்ளும் ஈர்ப்பை அணுகுவது எப்படி என்பதுநேரடி அனுபவமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.அந்த ஈர்ப்பு ஆசிரியரின் ஆளுமையினால் உருவாகிறது என்பதில்  எனக்கு மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் இது முக்கியமான கட்டுரை.
  
பெண்களின் உளவியல் பற்றிய ஒரு குறிப்பிடதகுந்த பார்வையை இந்த புத்தகம் நமக்கு உருவாக்குகிறது.
     
                   பா.  ஜானகிராமன்,
        
                    வேதாரண்யம்.
நன்றி திரு.ஜானகிராமன். மகிழ்ச்சி. ஆழமான நுணுக்கமான வாசிப்பு.
அன்புடன்
ஆர்.அபிலாஷ்
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...