Skip to main content

“90களின் தமிழ் சினிமா” பேட்டி (4)


(எனது 90களின் தமிழ் சினிமா” நூலை ஒட்டி World of Appu இணையதளத்தில் வெளியான பேட்டி இது.)

Image result for kadhal movie
 “காதல்”

6. ஒரு பேராசிரியராகத் தமிழக இளைஞர்களுக்கு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்துங்கள். ஒருவரை ஒருவர் காதலிக்கும் இரண்டு தனிமனிதர்கள் வாழ்க்கையில் ஒன்றிணைய முடியாமல் இருப்பது காதல் தோல்வியா? அல்லது, ஒருவரின் காதலை இன்னொருவர் ஏற்றுக் கொள்ளாதது காதல் தோல்வியா?

ஆர். அபிலாஷ்: காதலர்கள் தம் விருப்பத்தையும் கடந்து இணைய முடியாமல் போவது காதல் தோல்வி அல்ல; அது சமூக அவலம். அதனால் தான் பாலாஜி சக்திவேலின்காதல்உள்ளிட்ட படங்கள் சாதியைப் போன்ற சமூக அவலங்களை சாடுகின்றன. ராமின்கற்றது தமிழ்”, “தரமணிஆகிய படங்கள் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உருவாக்கும் தடைகள், அகச்சிக்கல்கள் எப்படி காதலர்களை பிரிக்கின்றன என்பதைப் பேசுகின்றன.

மணிரத்னம், கௌதம் மேனன் ஆகியோர் காதல் தோல்வியை அகவயமாய் பார்க்கிறார்கள்; சூழல் எப்படி காதலர்களை அகற்றி வைக்கிறது, தவிக்க விடுகிறது, பரஸ்பரம் வெறுத்து புண்படுத்த வைக்கிறது என அவர்களின் படங்கள் பேசுகின்றனஇதுவே நிஜமான காதல் தோல்வி. ஆனால் இதுவும் கூட காதல் தோல்வி அல்ல, காதலர்களின் தோல்வி தான். காதல் என்றும் தோற்பதில்லை.

7. காதலைப் பற்றிப் பேசுவதால் கேட்கிறேன். 90களில் வெளிவந்த பிரசித்தி பெற்ற காதல் திரைப்படமான "காதலுக்கு மரியாதை" படத்துடனான உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஆர். அபிலாஷ்: காதலுக்கு மரியாதை" என்னை பெரிதும் கவரவில்லை. மலையாளத்திலும் அதன் மூலமானஅனியத்தி பிறாவுபார்த்திருக்கிறேன்.
இப்படம் காதல் கதையின் பாவனையில் மரபான திருமணத்தை ஆதரிக்கும் ஒன்று. எல்லா காதல் திருமணங்களிலும் ஒரு சுயநலம் உள்ளது. காதலுக்குப் பின் இச்சுயநலத்தை ஜோடிகள் உணர்வார்கள். பெற்றோர்களை தவிக்க விட்டு விட்டோமே எனும் கவலை குற்றவுணர்வாகி அவர்களை அரிக்கும். தாம்பதிய பிரியமும் ஆசையும் ஒரு பக்கம், பெற்றோரை எதிர்த்து பிரிந்த தனிமை இன்னொரு பக்கம். இதனிடையிலான மோதலில் தான் காதல் திருமணம் பரிணமிக்கும்.
 "காதலுக்கு மரியாதை" படத்தில் திருமண ஜோடியின் இத்தவிப்பை திருமணத்துக்கு முன்பே நிகழ்வதாய், காதலர்கள் பெற்றோரிடமே மீள்வதாய் காட்டி இருப்பார்கள். காதலில் இருக்கும் பலரும் இதை உணர்ந்ததால், இப்படம் அவர்களது இம்மன உணர்வுகளை கற்பனை செய்து திளைக்க உதவியதால் வெற்றி பெற்றது. படத்தில் காதலுக்கு மரியாதை அளிக்கும் விதம் பெற்றோரே கடைசியில் காதலர்களை சேர்த்து வைப்பார்கள். இதன் மூலம் காதல் ஜோடிகள் நிஜத்தில் அனுபவிக்கும் அகப்போராட்ட்த்திற்கு ஒரு சுலப தீர்வையும் பாஸில் அளித்தார். அகப்போராட்டத்தை கடந்து வாழ்க்கைஎளிய தீர்வுகளின்றிஎப்படி நகர்கிறது என்று காட்டியிருந்தால் இது மேலும் சிறப்பான படமாக இருந்திருக்கும். “அலை பாயுதேஇதே அகச்சிக்கலை இதை விட அபாரமாய் கையாண்ட படம்.
 பாஸிலின் ஆரம்ப கால படங்களில் ஒன்றானவருஷம் பதினாறுஇதே காதலுக்கான குடும்ப எதிர்ப்பு சிக்கலை வேறு வகையில் கையாண்டிருக்கும். இப்படத்தின் மலையாள மூலமானஎந்நெந்நும் கண்ணேட்டென்றேஇன்னும் சிறப்பானது.


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...