Skip to main content

கருத்து மோதல்களும் அறிவுஜீவியும் (4): தனியர்களின் அவசியம்



இங்கு மேலும் ஒரு கேள்வி எழுகிறது?
1)   ஏன் சமகாலத்தில் முன்பு போல பெரும் இலக்கிய சண்டைகள் நடப்பதில்லை? ஏன் திடீரென எல்லாரும் காந்தியாகி விட்டார்கள்?

முகநூல் தோன்றிய புதிதில் தினமும் ஒரு வம்பு, அடிதடி என படைப்பாளிகள் பிஸியாக இருந்தார்கள். ஆனால் காலம் போக போக முகநூலின் நோக்கம் அதுவல்ல என அவர்கள் புரிந்து கொண்டார்கள். எல்லாரும் ஸ்நேகமாய் அரவணைத்துப் போக வேண்டும் என்பதே ஸுக்கர்பெர்க்கின் கொள்கை. சமூகமாக்கலின் உச்சாணிக் கொம்பில் நாம் இப்போது வாலைத் தொங்கப் போட்டு அமர்ந்திருக்கிறோம். சமீபத்தில் எனது நண்பர் ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் சேர்ந்தார். சில மாதங்களுக்குப் பிறகு என்னிடம் வந்து சொன்னார், “மச்சான் நான் சொன்னால் நீ நம்ப மாட்டே. அங்கே எல்லாரும் அவ்வளவு நட்பா இருக்காங்க.”
நான் கேட்டேன், “எப்படிடா எல்லாருமே நல்லவங்களா இருக்க முடியும்?”
“அப்படி இல்ல. நம்மை பிடிக்காதவங்க தான் அங்க பலரும். ஆனால் காட்டிக்க மாட்டாங்க. நம்மை பிடிக்காதவங்க தான் பார்த்ததும் கட்டித் தழுவி பாராட்டுவாங்க, நலம் விசாரிப்பாங்க.”
“ஏன் அப்படி போலியா இருக்காங்க?”
“அதான் வசதி. பரஸ்பரம் எல்லாரும் உதவியா இருக்கலாம். ஈகோ உரசல் இன்றி சேர்ந்து வேலை செய்யலாம்.”
ஜெயமோகன் தன் அமைப்பின் உறுதிமொழியாய் முன்வைப்பது இந்த கார்ப்பரேட் தத்துவத்திற்கு எவ்வளவு இணக்கமாய் உள்ளது பாருங்கள். நானும் நீங்களும் இன்று இந்த நிலைப்பாட்டுக்குத் தான் நகர்ந்திருக்கிறோம்: நானும் இப்போதெல்லாம் யாருடனும் அதிகம் முரண்படுவதில்லை; எல்லாரையும் கனிவாய் அன்பாய் நடத்துகிறேன். கூட்டங்களில் பிடிக்காதவர்களைக் கண்டால் உடனடியாய் அரவணைத்து நலம் விசாரிக்கிறேன். பேஸ்புக்கில் அவர்களுக்கு லைக் போடுகிறேன். விரும்பியோ விரும்பாமலோ நாம் அனைவரும் இன்று ஒரு கார்ப்பரேட் சித்தாந்தத்துக்கு நகர்ந்து விட்டோம்!
ஆனால் இந்த சூழலிலும் நாம் தனியர்களாய் தொடர்கிறோம் என்பதே முக்கியம். அதுவே நம்மை இலக்கிய வாசகர்களாய், எழுத்தாளர்களாய் வைத்திருக்கிறது. இல்லையென்றால் தமிழகமே முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆகி விடும்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...