Skip to main content

“90களின் தமிழ் சினிமா” பேட்டி (3)


(எனது 90களின் தமிழ் சினிமா” நூலை ஒட்டி World of Appu இணையதளத்தில் வெளியான பேட்டி இது.)

Image result for sivakarthikeyan

4. காதலை லட்சியமாகச் சித்தரிக்கும் புள்ளியில் இருந்து காதலைக் கொண்டாட்டமாகச் சித்தரிக்கும் புள்ளிக்குத் தமிழ் சினிமா வந்துள்ளது. இந்த மாற்றம் சமூக அளவிலும் நிகழ்ந்துள்ளதா?

ஆர். அபிலாஷ்: ஆம். நிகழ்ந்துள்ளதால் இப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன. காதலை ஒன்று மிகவும் உணர்ச்சிகரமாய் சித்தரித்து, அதற்காய் வெம்பி வெதும்பி நிலையற்று தவிக்கும் பாணியிலான படங்கள் எடுக்கப்படுகின்றன (கௌதம் மேனனின் படங்கள்). இன்னொரு பக்கம் வெங்கட் பிரபு பாணி உள்ளது. காதலில் நிகழும் போராட்டங்களையும் விளையாட்டாய் லேசாய் எடுத்துக் கொண்டு வாழ்க்கையை கொண்டாடுவது இப்போக்கு. இரண்டுமே ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பது என் பார்வை.


 இன்று நான் கவனிக்கும் காதலர்கள் எப்படியானவர்கள்? ஒன்று, காதலுக்குள் ஒரு அருவிக்குள் குதிப்பது போல் பாய்ந்து விடுகிறார்கள். வெறித்தனமான உன்மத்தனமான காதல் இது. ஆனால் இது அவர்களின் நாள் முழுவதையும் ஆக்கிரமிப்பது இல்லை. சொந்த வாழ்க்கையின் பல்வேறு பிரச்சனைகளை அழுத்தங்களை (18 வயதிலேயே கடும் அழுத்தங்கள் இவர்களுக்கு) சற்று நேரம் கடந்து செல்வதற்கான பாலமாய் காதலை காண்கிறார்கள் இவர்கள். ஆகையால் காதலிக்கும் பொழுதில் பரஸ்பரம் கேள்வி கேட்டும் சோதித்தும் நோகடிக்காமல் ஜாலியாக குதூகலமாய் இருக்க முயல்கிறார்கள். காதலன் அல்லது காதலி தம்முடன் இல்லாத வேளையில் சகஜ வாழ்வுக்கு மீள்கிறார்கள். சினிமாவில் காதல் ஜோடியின் நினைவிலே 24 மணிநேரமும் வாழ்ந்த முரளியின் காலம் முடிந்து விட்டது. உன்மத்தமான காதல் ஒரு பக்கம், அது இருந்தும் மீளாத தனிமை இன்னொரு பக்கம்இதுவே இன்றைய காதல் உலகம். இவர்களின் வாழ்வை சொல்லும் சினிமாவில் காதல் மிகை உணர்வுகளும் கொண்டாட்டமும் இருப்பதில் எனக்கு ஆச்சரியமில்லை.

5. மற்றொரு புறம் சிவகார்த்திகேயன் போன்றவர்கள் நடித்தத் திரைப்படங்களில், காதலை ஏற்றுக்கொள்ளாத பெண்களைத் திட்டித் தீர்த்தார்கள். இப்பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதன் மூலம் பெண்களை உடைமைகளாகக் கருதும் ஆபத்தான சிந்தனை இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக நினைக்கிறீர்களா?

ஆர். அபிலாஷ்: பெண்களை உடைமையாய் கருதுவதல்ல இந்த இளைஞர்களின் பிரச்சனை. இன்றைய காலகட்டத்து பெண்கள் தாம் அப்படி உடைமையாக்கப்படுவதை சுலபத்தில் அனுமதிப்பதில்லை; அதே நேரம் அவர்கள் அதை முழுக்க மறுப்பதும் இல்லை. இது ஆண்களுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இந்த பெண்களை எப்படி சமாளிப்பது என புரியாத இளைஞர்களின் தவிப்பு இந்த பெண்களை ஏசும் சிவகார்த்திகேயன் பாணி படங்கள் மற்றும் பாடல்களில் வெளிப்படுகிறது.

 நாம் இன்றும் முழுமையாக நிலவுடைமை காலத்தை விட்டு வெளிவர இல்லை என்பதே சிக்கல். நாம் பாதி அங்கும் மீதி இன்றைய கார்ப்பரேட் நகரமயமாக்கல் முற்போக்கு சமூகத்திலும் வாழ்கிறோம். இது இன்றைய ஆண்-பெண் உறவுகளில் கணிசமான சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. ஆண்களைப் பற்றி புலம்ப பெண்களுக்கு வாய்ப்பிருந்தால் இதை விட மோசமாய் ஆண்களை வையும் பாடல்கள் தமிழில் தோன்றும் என நினைக்கிறேன். உண்மையில், நம் நிலைமை இன்று ரொம்ப அவலமாய் உள்ளது.
 பெண்களை உடைமையாய் கருதுவது நியாயமா? நிச்சயமாய் இல்லை தான். உண்மையான காதலில் ஆண்களும் பெண்களின் உடைமையாய் இருப்பார்கள். அங்கு ஏற்பும் மறுப்பும் இல்லை. அங்கு ஆக்கிரமிப்பும் உரிமை கொண்டாடலும் இல்லை. அங்கு பரஸ்பர அத்துமீறலும் அதன் திளைப்புமே உள்ளது. இதை நாம் கௌதம் மேனனின் படங்களிலும் தொண்ணூறுகளில் இருந்து இன்று வரை மணிரத்னத்தின் படங்களிலும் காண்கிறோம்.


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...