Skip to main content

முணுக்கென்றால் நிகழும் விவாகரத்துகள் (2)


 Image result for divorce
இன்று நான் காணும் கணிசமான மணமுறிவுகள் இப்படி தெளிவற்ற காரணங்களால் தான் நிகழ்கின்றன.
 ஒன்று, இன்று முன்னளவுக்கு யாரும் மண உறவுகளை நம்பி இல்லை. தனியாக வாழ்வது இன்று பெரும் சவால் அல்ல. அடுத்து முக்கியமாய், இன்று பலரையும் சொல்லொண்ணா துக்கம், சோர்வு, அவநம்பிக்கை, கசப்பு ஆட்கொள்கிறது. இதன் காரணம் என்னவென துல்லியமாய் தெரியாத நிலையில் ஒவ்வொரு எளிய இலக்குகளையாய் பலி கொடுக்கிறார்கள்.

பேஸ்புக்கை டீ அக்டிவேட் செய்வார்கள், வாட் ஆப்பை, மெஸஞ்சரை போனில் இருந்து அன் இன்ஸ்டால் செய்வார்கள், சிலர் இந்த நடவடிக்கைகளை அடுத்து ஒரு சிறிய திருப்தியை உணர்வார்கள்; ஆனால் இதுவும் தற்காலிகமே. வருத்தமும் சோர்வும் மீண்டும் அவர்களை ஆட்கொள்ளும். இப்போது அவர்கள் நட்புறவுகளை துண்டிப்பார்கள். அடுத்து, வேலையில் இருந்து அடிக்கடி லீவ் எடுப்பார்கள். சிலர் நேர்மறையாக, புகைப்படக் கலை, இசை, ஓவியம் என எதிலாவது புதிதாக ஈடுபடுவார்கள். இதற்கு நடுவில் சிக்கி விபத்தாவது திருமண வாழ்வு.
பேஸ்புக் நண்பர்கள், வாட்ஸ் ஆப் அரட்டைகள், மற்றும் நடைமுறை வாழ்வு நண்பர்களை விட்டு விலகிய பின்னரும் மனம் நிம்மதி கொள்ளவில்லை எனில் நிச்சயம் பிரச்சனை கணவன் / மனைவிடத்து தான் என நம்புவார்கள்.
திருமணத்தில் ஆண்களுக்கு பொதுவாய் அழுத்தம் குறைவு. ஆகையால் அவர்கள் வேலை முடித்து வீட்டுக்கு தாமதமாய் திரும்புவார்கள். மனைவியுடன் உரையாடுவதை குறைத்துக் கொள்வார்கள். செக்ஸில் ஈடுபாடு இழப்பார்கள். ஒருவேளை புதிய பெண்ணுடல்களை நாடினால் செக்ஸில் கூடுதல் திருப்தி கிடைத்து அதனால் வாழ்வில் மகிழ்ச்சி மீளும் என நம்புவார்கள். பெண்களும் இப்படி முயற்சிக்கலாம், என்றாலும் அவர்கள் அதிகமாய் உறவை முறிப்பதிலேயே முனைப்பு கொள்கிறார்கள் என்பது என் கணிப்பு; ஏனெனில் குடும்ப வாழ்வில் பெண்களுக்கு நெருக்கடி அதிகம்.
சமீப காலங்களில் இந்தியாவில் விவாகரத்துகள் அதிகரித்து வருகின்றன. தில்லியில் தினமும் நூறு விவாகரத்து வழக்குகளாவது தொடுக்கப்படுகின்றன என்கிறார்கள். 2003இல் இருந்து 2011 வரை கொல்கொத்தாவில் விவாகரத்தில் 350% அதிகரித்துள்ளன. 2010-14க்கு இடையிலான காலத்தில் மும்பையில் விவாகரத்துகள் இரட்டிப்பாயுள்ளன. இதற்கு பல நியாயமான காரணங்கள் உண்டு தாம். ஒரு நியாயமற்ற காரணம் நான் மேலே சுட்டிக் காட்டி உள்ளது.
இனிவரும் காலங்களில் நம் வாழ்வில் விளக்க இயலாத அதிருப்தியும் நிம்மதியின்மையும் கசப்பும் அதிகமாகப் போகிறது. இதைப் போக்க நாம் கீழ்வரும் அபத்த தீர்வுகளையே அதிகம் கையாளப் போகிறோம்.
(1)  பேஸ்புக் டீஆக்டிவேஷன்
(2)  வாட்ஸ் ஆப்பை விட்டு நீங்குதல்
(3)  ஒவ்வொரு சமூக உறவாடலாக கைவிடுதல்
(4)  பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் மூழ்குதல்
(5)  உளவியல் ஆலோசகரை அணுகுதல்
(6)  விவாகரத்துக்கு விண்ணப்பித்தல்

மேலும், இனிமேல் ஆண் பெண் உறவுகளில் எந்த நிலையான தன்மையும் இராது. தனிநபர்கள் உள்ளுக்குள் திருப்தியாக இருந்தால் ஒழிய திருமண / காதல் உறவுகள் இனி தப்பிக்காது. அதாவது, இனிமேல் உறவின் நன்மை மட்டுமே அதைக் காப்பாற்றாது.
இதற்கு சரியான தீர்வு?
நமது மனச்சோர்வுக்கு அடிப்படை காரணத்தை நமக்குள்ளே தான் தேட வேண்டும், அடுத்தவரிடம் அல்ல எனும் தெளிவு இருந்தாலே பாதி விவாகரத்துகளை தவிர்க்கலாம்.




Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...