Skip to main content

பிக்பாஸில் தாக்குப்பிடிப்பது எப்படி? (1)


 Image result for ramya bigg boss
பிக்பாஸை நான் இந்த இரண்டாம் பருவத்தில் கூடுதல் ஆர்வமாய் பார்ப்பதற்கு ஒரு காரணம் உண்டு: நான் இதுவரை எதிர்கொண்டுள்ள பல கார்ப்பரேட் அனுபவங்களுக்கு அது நெருக்கமாக உள்ளது.
 இன்று நம் வாழ்வே கார்ப்பரேட் மயமாகி விட்ட நிலையில், ஒரு நெருக்கடியான சூழலில் நம்மை எப்படியெல்லாம் படுத்துவார்கள், எப்படியெல்லாம் கண்காணிப்பார்கள், நாம் எந்தமாதிரி அபத்தங்களை எல்லாம் சந்திக்க வேண்டும் என்பதை இந்த ஷோ சித்தரிக்கிறது. இது விளையாட்டு தான்; ஆனால் நம் கார்ப்பரேட் போட்டி உலகை அணுக்கமாய் பிரதிபலிக்கும் விளையாட்டு. வரும் பதிவுகளில் இதைப் பற்றி கூடுதலாய் எழுதுகிறேன். முதலில் இவ்வாரம் என்னை அதிர்ச்சியூட்டிய ஒரு விசயம்: ரம்யாவின் வெளியேற்றம்!

பிக்பாஸில் நான் முதலில் நம்பிய ஒன்று ஒரு வன்மமான, மோதல்கள் நிறைந்த சூழலில் ஒருவர் அதிக பாதிப்பில்லாமல் தாக்குப்பிடித்தால் வெளியேறாமல் இறுதி வாரம் வரை நகர முடியும் என்பது. பரஸ்பரம் ஒத்துப் போகாதவர்கள் அதிகம் குற்றம் சாட்டப்படுகிறார்கள்; அவர்களை அதிகம் மற்றவர் பழிக்கிறார்கள். பிக்பாஸ் அவர்களை குறுக்குவிசாரணை செய்கிறார். பொன்னம்பலம் போன்றவர்கள் ஐஷ்வர்யாவை ஒழுக்க விமர்சனம் செய்ததற்கு (வரம்பு மீற்யதற்காக) சிறையில் அடைக்கப்படுகிறார். கெட்டவார்த்தை பேசுவதற்காக பாலாஜி கண்டிக்கப்படுகிறார். அதிகம் புறம் பேசுவதாய் விமர்சிக்கப்படும் வைஷ்ணவின் அதற்காகவே பிக்பாஸ் வீட்டிற்குள் அதிகம் வெறுக்கப்படுபவராய் இருக்கிறார். நான் நினைத்தேன்: வைஷ்ணவி நிச்சயம் ரெண்டு வாரம் கூட தாக்குப்பிடிக்க மாட்டார். ஆனால் நடந்ததோ வேறு: வெளியேறும் நிலையில் அவர் தக்க வைக்கப்பட்டார். இப்போதோ வீட்டுக்குள் மிக அதிகமாய் வெறுக்கப்படுபவராய் இருந்தும், மக்கள் மத்தியில் அதிக ஆதரவு இன்றியும், வைஷ்ணவி வெளியேறும் ஆபத்தில் இல்லை; பாலாஜியும் பொன்னம்பலமும் தொடர்ந்து பல வாரங்களாய் காப்பாற்றப்படுகிறார்கள்; ஆனால் அனைவராலும் மிக அதிகமாய் நேசிக்கப்படும், யாராலும் எந்த புகாரும் தெரிவிக்கப்படாத ரம்யாவோ இந்த வாரம் வெளியேற்றப்படுகிறார். இது என்ன நகைமுரண்! அபத்தம்!
 இதைப் பார்த்த போது தான் எனக்கு ஒரு விசயம் விளங்கியது: பிக்பாஸ் வீட்டுக்குள் நிலைக்க தேவைப்படுவது அனைவரோடும் சுமூகமாய் செல்லும் சுபாவம் அல்ல.
ரம்யாவுடன் இறுதியாய் உரையாடும் போதும் கமல் ஒன்று சொல்கிறார்: உங்களது பட்டும்படாத குணம் வாழ்க்கையில் உங்களை சிறக்க உதவும்; ஆனால் இந்த போட்டியில் அது எடுபடாது. இதை எளிமையாக இப்படி புரிந்து கொள்ளலாம் – ரம்யாவின் தவறு அவர் யாருடனும் முரண்பட்டு வம்புக்கிழுத்து குடுமிப்பிடி சண்டை போடாதது. வம்படிக்கு போகும் ஆட்கள் இந்த ஷோவை சுவாரஸ்யமாக்குகிறார்கள். ஒருவித பரபரப்பு, நாடகீயம், உணர்ச்சி வேகம் மோதல்களினால் மட்டுமே வருகிறது. இதுவரை இப்படி ரத்தம் கொட்டி, கண்ணீர் சிந்தி, வசைமாரி பொழிந்து, யாருக்கும் கேட்காதபடி உச்சஸ்தாயில் கத்தி இந்த ஷோவை குழாயடி ஜாலி பொழுதுபோக்காக மாற்றியவர்கள் பொன்னம்பலம், பாலாஜி, நித்யா, மஹத், செண்டிராயன், மும்தாஜ் ஆகியோர்.
 இவர்களில் நித்யா மட்டுமே ஒரே சண்டையை திரும்ப திரும்ப போட்டவர். அவர் அலுப்பூட்டவே வெளியேற்றப்பட்டார். யாஷிகா, ஐஷ்வர்யா போன்றோர் தம் குழுக்குள்ளே கும்மியடித்தாலும் அவர்களால் எதிர்குழுவினருக்கு எரிச்சல் ஏற்பட்டது; அவர்களின் உற்சாகம், அத்துமீறல், ஆட்டம் பாட்டம் போன்றவை ஒரு பக்கம் நல்ல பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது; அவர்களை வைத்து பொன்னம்பலம் அடிக்கும் கூத்தும், வைக்கும் ஒழுக்கமீறல் ஒப்பாரிகளும் ஷோவின் ரேட்டிங் ஏற நிச்சயம் உதவியிருக்கும்.
இவர்களில் ரம்யாவுக்கு அடுத்தபடியாய் அஹிம்சைவாதிகள் என்றால் ரித்விகா, ஜனனி ஆகியோர். ஜனனி ஒரு திரை பிரபலம் என்பதால் சில வாரங்கள் தப்பித்து விடுவார். (மும்தாஜையும் அவரது திரை புகழும் பிம்பமுமே காப்பாற்றுகிறது.) அனைவரையும் சமாளித்துப் போகும் சாமர்த்தியசாலி டானியல் இந்த ஷோவின் தேவையை உணர்ந்து அடிக்கடி வம்புகளிலும் ஈடுபடுகிறார். அவரும் இறுதி இரு வாரங்கள் வரை இருப்பார் என நினைக்கிறேன்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...