Skip to main content

பர்வீனின் கிழங்கும் ரதியின் தொடுகையும்


Image result for ரசிகன் நாவல்

“ரசிகன்” நாவலுக்கு வந்துள்ள ஒரு எதிர்வினை:

வணக்கம் எழுத்தாளரே ..
நலம்.  நலம் வேண்டுகிறேன்.
ஐந்து நாட்களாக சாதிக்குடன் பயணித்துக்கொண்டிருந்தேன் ( என் பெயர்தான் கதைசொல்லிக்கும்! ). தீவிர இலக்கியத்தில் நான் வாசித்து முடித்த இரண்டாவது நாவல் " ரசிகன் " .  பல வகைகளிலும் என்னைப் பாதித்த கதாப்பாத்திரங்கள் நாவல் முழுவதுமே இருக்கிறார்கள். 

இந்த நாவலைப் படிக்கும்பொழுது நான் கதைப்போக்குடன் கட்டுண்டிருந்தேன்.  பர்வீணுடைய கிழங்கையும் ரதியின்  தொடுகையையும் நானும் உணர்ந்தேன்.  எனினும்,  என்னுடைய  போதுமான வாசிப்பின்மை காரணமாக இதில் விவாதிக்கப்பட்டிருக்கும் பல அரசியல் சார்ந்த கருத்துகள் எனக்குப் புரியவில்லை.  
இவற்றைச் சார்ந்து நான் படிக்க சில புத்தகங்களைப் பரிந்துரை செய்வீர்களா ? 
க. சங்கர் 
48, Jawahar Street,
Nagarpalayam,
Gobichettipalayam,
Erode - 638 452.
அன்புள்ள க. சங்கர்
நாவலை நீங்கள் ரசித்துப் படித்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி கொள்கிறேன். ஒரு எழுத்தாளனுக்கு வேறென்ன வேண்டும்?
அந்நாவலில் தமிழ் சிறு பத்திரிகை உலகம் குறித்த ஒரு சித்திரம் வருகிறது. மேலும் சாதிக்கின் உரையாடல்களில் எண்பது, தொண்ணூறுகளில் தமிழ்ச் சூழலில் பேசப்பட்ட கோட்பாடுகள் பற்றின குறிப்புகளும் வருகின்றன.
சிறு பத்திரிகை உலகம் பற்றி அறிய வேண்டுமானால் ராஜமார்த்தாண்டனின் “புதுக்கவிதை வரலாறு” நூல் உதவும். உடனடியாய் படிப்பதானால் இந்த கட்டுரையை பாருங்கள் (https://azhiyasudargal.wordpress.com/2012/05/01/எழுத்து-முதல்-கொல்லிப்ப/).
கோட்பாடுகளை எளிதாய் விளக்கும் நூல்கள் தமிழில் கிட்டத்தட்ட இல்லை எனலாம். ஆனாலும் கொஞ்சம் போராடி வாசிப்பதானால் தமிழவன், எம்.ஜி சுரேஷ் ஆகியோரின் கோட்பாட்டு நூல்களை தேடி வாசிக்கலாம். ஆனாலும் கோட்பாடுகளை எளிதாய் வாசித்தறிய ஆங்கில நூல்களே சிறப்பானவை.
நன்றி!


 “ரசிகன்” நாவலை இணையம் வழி வாங்க:

உடுமலை.காம்

nammabooks.com

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...