Skip to main content

“அசல்” ஹைக்கூ கவிதை எழுத சில குறிப்புகள் (4)

Image result for albert camus
ஆல்பர்ட் காம்யு


ஹைக்கூவும் புலன் மயக்கமும்

 புலன் மயக்கத்தின் அபத்தம் இக்கவிதைகளுக்கு அபாரமான களிப்பு, மனத்திளைப்பை, வெகுளித்தனமான குதூகலிப்பை தருகிறது.
அதென்ன புலன் மயக்கம்?

ஜென் நமது தர்க்கரீதியான புரிதல்கள் புலன்மயக்கத்தின் விளைவு தான் என சொல்கிறது. உதாரணமாய், ஒரு இழப்பு நேர்கையில் நாம் ஏன் துக்கிக்கிறோம்? அதற்கு முன், துக்கம் என்பது ஒரு தன்னியல்பான உணர்வா (பசி, காமம் போல)? இல்லை. பிறகு துக்கம் எப்படி உருக்கொள்கிறது?

காலம் மற்றும் வெளி சார்ந்த கட்டமைப்புகள் நமது துக்கத்தை சாத்தியமாக்குகின்றன. துக்கத்திற்கு ஒரு கால அளவு உண்டு. இடம் சார்ந்த நினைவுகளும் உண்டு. காம்யுவின் அந்நியன்நாவலில் மெர்சால்ட்டுக்கு ஒரு கடிதம் வருகிறது. அம்மா இறந்து விட்டாள் என அது சொல்கிறது. மெர்சால்ட்டுக்கு துக்கம் கொள்ளவா வேண்டாமா என குழப்பமாகிறது. ஏனெனில் அம்மா எப்போது இறந்தாள் என அக்கடிதம் சொல்லவில்லை. காலம் துல்லியமாய் தெரியவில்லை என்றால் மரணத்தின் மதிப்பை எப்படி அளவிடுவது? மரணத்தின் மீதான நமது உணர்வுத்தாக்கம் என்பது காலம் போகப் போக குறைவது. அம்மா நேற்று இறந்தாள் என்றால் கதறி அழலாம், போன மாதம் இறந்தாள் என்றால் அந்தளவுக்கு மனம் உடைந்து அழ முடியுமா? இந்த கேள்வி தான் மெர்சால்டை அலைகழிக்கிறது. இன்று அழுகிற ஒருவன் அதே போல் ஒரு வருடம் கழித்தும் சாப்பிடாமல் குளிக்காமல் வேலை செய்யாமல் அம்மாவுக்காக அழுது துக்கம் அனுசரித்தால் உலகம் அவனை பைத்தியம் எனச் சொல்லும். அப்படி எனில், இவ்வளவு காலம் மட்டுமே இந்தளவு துக்கம் காட்டலாம் என சமூகம் தீர்மானித்து வைத்துள்ளதா? அப்படி எனில் துக்கத்தை நாம் சமூக விதிமுறைகளின் படி நடிக்கிறோமா?
இறந்த காலம் எனும் இலக்கண பகுப்பு இன்றி மரணத்தைப் பற்றி நாம் பேச முடியுமா? ஒருவேளை நம் இலக்கணத்தில் கடந்த காலம் இல்லையெனில் ஒருவர் இறந்து போக இயலுமா? (”காலமாகி விட்டார்எனும் நிகழ்காலமும் கூட கடந்த காலத்தின் பினாமி காலம் தானே. அதன் பொருள் காலமானார்”)
ஒருவர் இறந்து போனார் என்பதை உறுதிப்படுத்த காலத்தை அடுத்து இடமும் அவசியம். எங்கு இறந்தார் என்பது தெரியாவிட்டால் நம்மால் நிம்மதியாய் கண்ணீர் சிந்த இயலாது. அவரைப் பற்றி துக்கத்தில் நம் மனம் உலையும் போது அவருடன் இருந்த நினைவுகள் நம்மை மூச்சுத்திணறச் செய்கின்றன. ஒவ்வொரு நினைவும் ஒரு இடத்துடன் சம்மந்தப்பட்டிருக்கிறது. அந்த இடங்களை அழித்து விட்டு அவரை நீங்கள் நினைத்துப் பார்க்க இயலுமா? இயலாது.
காலமும் வெளியும் நமது கற்பிதங்கள் என ஒருவர் நிரூபித்தார் மரணம் கூட கற்பிதம் ஆகாதா? ஆகலாம். ஆகாமலும் போகலாம். ஆனால் நமது கவலைகள், மகிழ்ச்சி, துக்கம், உற்சாகம் ஆகியவை நமது மனம் நிகழ்த்தும் மயக்கத்தின் விளைவுகள் தாம் என்பதை மேற்சொன்ன விசயம் காட்டுகிறது.
 இதை உணரும் ஒருவர் குழந்தைத்தனமாய் இவ்வுலகை காணத் துவங்குகிறார். அவர் அபாரமான சுதந்திரத்தை பெறுகிறார். எல்லா எல்லைகளையும் கடக்கிறார். இதைத் தான் ஜென் நமக்கு உணர்த்த முயல்கிறது. ஒவ்வொரு ஹைக்கூ கவிதையின் பின்னும் இந்த ஆன்மீக மனநிலை உள்ளது.


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...