Skip to main content

டென்னிஸ் 3


 Image result for tennis paintings
உட்கார இடம் இன்றி நான் வெளியே வந்தேன்அப்படித் தான் நான் அவனைப் பார்த்தேன்எங்கேடென்னிஸ் ஆடுகளத்தில். அது உதைப்பந்து மைதானத்தை ஒட்டிய பூங்காவுக்குப் பின்னால் இருந்தது. அதனை ஒட்டிய வழியே சென்றால் சுலபத்தில் நூலகமும், நான் அடிக்கடி ஹாட் சாக்லேட் அருந்தும் கடையும் வந்து விடும். நூலகத்துக்கு முன்னால் மேலாண்மை, சட்டம் ஆகிய துறை மாணவர்களின் வகுப்பறைகள் இருந்தன. ஆகையால் அவர்களில் கணிசமானோர் ஓய்வு வேளைகளில் அந்த கடை வாயிலிலோ அல்லது ஆடுகளத்திலோ தான் இருப்பார்கள். அவர்களுடையது ஒரு தனி உலகம். நான் அதிகம் அங்கே செல்வதில்லை.

ஆனால் அன்று பிரதான அரங்கத்தில் இசைப் போட்டிகள் நடந்ததால் ஆடுகளம் நடமாட்டம் குறைவாய், சற்றே அமைதியாய் இருந்தது. டொப் தப் எனும் பந்துகள் இதமாய் தட்டுப்படும் ஒலி மட்டுமே. இடையிடையே பையன்கள் இந்தியில் பேசி சிரித்தார்கள். நான் ஹாட் சாக்லேட் வாங்கிக் கொண்டு காலி சிமிண்ட் இருக்கையில் அமர்ந்து, கால் மேல் கால் போட்டு புத்தகம் படிக்க ஆரம்பித்தேன். மரங்களில் இருந்து மென்காற்று என் காதுமடல்களைத் தொட்டு மறைத்த மயிர்க்கற்றையை அசைத்து குறுகுறுக்க வைத்தது. பின்னங்கழுத்து சிலிர்த்தது. நாவலின் கதையில் ஒரு திகிலூட்டும் திருப்பம். நாயகி அலறுகிறாள். அவள் கண்முன் திட்டுத்திட்டாய் குருதிப் பூக்கள். யாரோ அழைக்கும் உணர்வு. நிமிர்ந்து பார்த்த போது அவன் சர்வீஸுக்கு தயாராவதைப் பார்த்தேன்.
 நீளமான சுருள் மயிரை பானி டெயிலாக கட்டி இருந்தான். கோலிக்குண்டு போல் அசையும் தொண்டைக்குழி. நீள மூக்கு. அழகான நீண்ட கண்கள். என்னைக் கண்டு அவன் புன்னகைப்பது போல் தோன்றியது. மீண்டும் பார்த்தேன். ஆமாம், இல்லை என ரெண்டுமே தோன்றியது. அந்த கம்பீரத்தின் மத்தியிலும் அவனது அசைவுகளில் ஒரு வேடிக்கைத் தன்மை இருந்தது. திருகாணிகள் பாதி கழன்று கைகால்கள் ஆட்டம் காணும் ஒரு எந்திர பொம்மை போல் அசைந்தான். நெளியும் தழல் போல் ஒரு உருவம்.
 என்னை அவன் நேரடியாய் கவனிக்காவிடிலும் அவன் ஏனோ பதற்றமாகிக் கொண்டே வந்தான். முதல் செர்வில் அவன் கையில் இருந்து ரேக்கெட் நழுவியது. அவனை கலாய்த்தபடி ஓரமாய் இருந்த அவன் நண்பர்கள் இப்போது எதையோ எதிர்பார்த்து சிரித்தபடி மெல்ல கைத்தட்ட துவங்கினர். அவன் அவர்களை நோக்கி வெட்கத்துடன் சிரித்து விட்டு ரேக்கெட்டை உறுதியாய் பற்றிக் கொண்டு லேசாய் முதுகை பின்னால் வளைத்து ஸ்டைலாய் பந்தை அடித்தான். அந்த வெட்கச் சிரிப்பை பார்த்த நொடி எனக்கு அவனது நெற்றியில் வருடி, முடிக்கற்றைகளை கோதி ஒதுக்கி, உச்சந்தலையில் விரல்களால் நீவி விட வேண்டும் எனத் தோன்றியது. உடனே கண்களை தாழ்த்திக் கொண்டு வாசிப்பது போல் பாவனை செய்தேன்.
 இந்த அரைநொடியில் பந்து எங்கே போயிற்று என்பதை நான் கவனிக்க வில்லை. பந்து வலையைத் தாண்டி என் காலடியருகே ஒரு பூனைக்குட்டி போல் வந்து பதுங்கிக் கொண்டது. நான் தொடர்ந்து ஒன்றுமே நடக்காதது போல் பாவித்தபடி கால்களை உள்ளிழுத்தேன். பந்து மேலும் உருண்டு தன் சொரசொர கன்னத்தால் என் கணுக்காலில் தேய்த்தது. புத்தகத்தில் பார்வையை பதித்து அது வழுக்கி வழுக்கி செல்ல பிடித்து வைத்துக் கொண்டிருந்தேன். அவன் நடந்து வரும் போது கழுத்து, தோள்கள், முழங்கை, மணிக்கட்டு என தனித்தனியாய் அசைந்தன; மெல்ல நடனமாடி வருவது போன்ற நடை. ஒரு நொடி குழம்பி நின்று விட்டு என் காலடியை நோக்கி குனிந்தான். அவன் நண்பர்களின் சிரிப்பொலி கேட்ட்து.
 நான் தன்னிச்சையாய் எம்பி எழுந்தேன். தாவி தள்ளிச் சென்று நின்றேன். அவன்சாரி சாரிஎன்றபடி பந்தைப் பொறுக்கிக் கொண்டான். நான் என்னையறியாது சிரித்து விட்டேன். அவன் மீண்டும் லஜ்ஜையாய் புன்னகைத்து விட்டு தோளை பின்னால் சாய்த்து நடந்து அகன்றான். தன்னிடத்துக்கு மீண்டும் சென்று செர்வ் செய்ய ஆரம்பித்தான்.
 துல்லியமான அமைதி. நான் இம்முறை அவனை கவனித்தேன். அடித்தான். பந்து இம்முறையும் வெளியே தெறித்து உருண்டோடி சரியாக என் காலருகே வந்து கணுக்காலை சன்னமாய் முத்தமிட்டது. நான் பந்தைப் பொறுக்கி அவனை நோக்கிப் போட்டேன். கௌரவமாய் அதைப் பெற்று ஒன்றுமே நடக்காதது போல் மீண்டும் சர்வீஸ் ஆரம்பித்தான். இம்முறை நான் வலையருகே சென்று நின்றேன். பந்து துள்ளி வந்து என் இடுப்பைத் தொட்டு இன்னும் கொஞ்சம் எம்பவா எனக் கேட்டது. கையில் சுலபமாய் பற்றி திரும்ப வீசினேன். அவன் நண்பர்கள் விளையாட்டை எங்கள் இருவருக்கானதாய் கருதி ரசிக்கத் துவங்கினர்.
சற்று நேரத்தில் இருள் கவிந்தது. லேசான தூறல். என் இமையில் ஒரு சின்ன துளி தங்கி ஏழு வர்ணங்களை ஜொலித்தது. துப்பட்டாவால் முகத்தை துடைத்தபடி அவனைத் தேடினேன். எங்கும் இல்லை.
அடுத்தடுத்த நாட்களும் நான் அங்கே வரத் தொடங்கினேன். அவன் சில நேரம் பார்வையாளர்களில் ஒருவனாய் இருப்பான், சில நேரம் பயிற்சியில் ஈடுபடுவான். ஓரிரு முறை நாங்கள் தேநீர்க் கடையில் எதிர்கொண்ட போது புன்னகை பரிமாறிக் கொள்ளவில்லை. என்னை பரிச்சயமே இல்லை என்பது போல் காட்டிக் கொண்டான்.


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...