Skip to main content

டென்னிஸ் (2)


Image result for tennis paintings

நான் பின் தொடர்ந்த இன்னொரு சம்பவம் என் அப்பா சம்மந்தப்பட்டது. “நீ தினமும் கல்லூரிக்குப் போகிறாயா? இல்லை ஊர் சுற்றுகிறாயா?” என காலையில் அப்பா முகம் கறுக்க கடுகடுப்பாய் கேட்டார். நான் முனகியபடி தலையாட்டி விட்டு வந்து விட்டேன். ஆனால் அன்று அப்பாவைப் பின் தொடர முடிவெடுத்து அவர் பின்னால் பேருந்து நிறுத்தம் வரை சென்றேன்.

அவர் முதல் பேருந்தில் இருந்து வெகுவாய் சிரமப்பட்டு இறங்கி எடுக்கப் போகும் கூட்டமான மற்றொரு பேருந்தில் மூச்சிரைக்க ஏறி வாசல் படியில் தொங்கியபடி வந்தார். நான் சுலபமாய் ஏறி உள்ளே சென்று விட்டேன். எனக்கு உட்கார இடமும் கிடைத்தது. முதல் நிறுத்தம் வந்ததும் கூட்டம் சற்றே குறைந்தது. அடுத்த நிறுத்தத்தில் இறங்கி பத்து நிமிடம் நடந்தால் அவரது அலுவலகம். அங்கு அவர் நுழையும் போது எதேச்சையாய் என்பது போல் அவர் பார்வையில் பட வேண்டும், அப்போது அவர் கேட்பார்இப்படி நான் யோசித்துக் கொண்டிருந்த போது நின்று கொண்டிருந்தவர்களை விலக்கிபடி அப்பா என் இருக்கை அருகே வந்தார். நான் ஜன்னல் அருகே இருந்ததால் முதலில் அவர் என்னை கவனிக்கவில்லை. அவர் என்னருகே இருந்த முதியவரை தள்ளி இருக்க கேட்டார். நான் தோள்களைத் தாழ்த்தி துப்பட்டாவால் தலையை மூடி ஒடுங்கிக் கொண்டேன். என் இதயம் எகிறித் துடித்தது.
 அப்பா இருக்கை விளிம்பில் அமர்ந்து எதிர் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டு வந்தார். அவர் முகமெங்கும் வியர்வை பூத்துள்ளதை, ஆழமாய் அவர் மூச்சு விடுவதை, தொப்பை ஏறி இறங்குவதை அரைக்கண்ணால் பார்த்தேன். தன் கையில் இருந்த பையை இன்னொரு கைக்கு மாற்றிக் கொண்டார். தன் கண்ணாடியை உருவி முகத்தை துடைத்துக் கொண்டார். இந்த இடைவெளியில் நான் சட்டென முடிவெடுத்துஅப்பாஎன மெல்ல அழைத்தேன். அவர் அதிர்ந்து திரும்பிப் பார்த்தார்.
 நீங்க எப்போ ஏறுனீங்க?”
அவர் அதிர்ச்சி விலகாது நோக்கினார்: “நீயா? நான் வேறே ஏதோ பொண்ணுன்னு நினைச்சேன்.”
புன்னகைத்தேன்.
 தலையில என்ன துப்பட்டாவால மூடியிருக்க?”
ஆமாம்
உன் கண்ணாடி எங்கே?”
வெளியே வந்தால் போட்டுக்கிறதில்ல?”
ஏன்?”
“….”
வேறே யாரோன்னு நினைச்சேன்.”
அவர் மீண்டும் ஒருமுறை என் முகத்தில் உற்று நோக்கினார். தன் பின்னங்கழுத்தை தொட்டுக் காட்டி சொன்னார், “முடி வெட்டினியா? இதென்ன பாய்கட்டா?”
ஆமாப்பாஇல்லப்பா, லைட்டா டிரிம் பண்ணினேன். முடியை இப்படி சீவியிருக்கிறதுனால இப்போ உங்களுக்கு வித்தியாசமா தெரியுது. காலையில் கூட பார்த்தீங்களே
நான் பார்க்கவே இல்லியே?”
அவர் தன்னையே மறுப்பது போல் தலையை அசைத்தார்.
மாலை வீடு திரும்பிய போது அப்பா என்னை பேருந்தில் பார்த்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை. நான் அவருக்கு தேநீர் கொண்டு கொடுத்த போது என் கண்களை சந்திக்கவே தயங்கினார்.
சரி, நான் இனி சொல்ல வந்த கதைக்கு வருகிறேன்.
இப்போதெல்லாம் நான் நூலகத்துக்குப் போவதில்லை. ஒருவித ஒவ்வாமை. நான் மாலை வேளைகளில் கூடைப்பந்து விளையாட்டரங்கின் படிக்கட்டில் அமர்ந்து படிப்பேன். அல்லது படிக்கிற பாவனையில் யாராவது ஒரு நபரை மட்டுமே தொடர்ந்து கவனிப்பேன். அவர் யார் என்பதெல்லாம் முக்கியமில்லை. அவரை மையமாக்கி அந்த சூழலை ஒரு திரைப்படம் போல் உள்வாங்குவேன்.
 ஆனால் அப்போதெல்லாம் பின்னிருந்து மூச்சுக்காற்று என் கழுத்தைத் தீண்டும். அந்த அபூர்வமான வாசனை என்னை மரங்கள் அடர்ந்த பகுதியை நோக்கி இழுக்கும். அரங்கு காலியாக இருக்கும் போது சின்ன காலடிகள் சுற்றிச் சுற்றி ஓடும் ஒலிகண்ணை மூடிக் கொள்வேன்.
 ஒருநாள் அரங்கில் கடுமையான கூட்டம். அப்போது கல்லூரிகள் இடையிலான போட்டி ஒன்று நடந்து கொண்டிருந்தது. உட்கார இடம் இன்றி நான் வெளியே வந்தேன். அப்படித் தான் நான் அவனைப் பார்த்தேன். எங்கே?

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...