Skip to main content

இருவர்: ஒளிப்பதிவு காட்டும் உளப்பாங்கு (5)



 "தளபதிபடத்துக்கும் ஒளிப்பதிவு சந்தோஷ் சிவனே. அதில் ஆட்சியர் அரவிந்த் சாமி மம்முட்டி மற்றும் ரஜினியை ஒரு பேச்சுவார்த்தைக்கு அழைப்பார். எந்த சுமூக முடிவுக்கும் வராமல் பேச்சு தடித்தபடி இருக்கும். அரவிந்த் சாமிக்கு அந்த ரௌடிகள் மீது ஒரு பூடகமான வெறுப்பு இருக்கும். ஆனால் இன்னாரை இதனால் வெறுக்கிறேன் என அவரால் உறுதியாய் சொல்ல இயலாது. ஆகையால் ரௌடிகள் ஏன் சட்டத்துக்கு உடன்பட வேண்டும் என்பதை பட்டும்படாமல் சொல்லிக் கொண்டு போவார். அப்போது அவரது மனம் ஒரு குழப்பத்தில் இருப்பதை சொல்ல சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு கருவி சுழன்றபடி இருக்க செய்வார். அரவிந்த சாமியின் கோணத்தில் இருந்து அவரது மேஜையை சுற்றி இருக்கும் ஒவ்வொருவரையாவது காட்டி வருவார்கள். சட்டென ரஜினி குறுக்கிட்டு கத்துவார். “உங்களுக்கு எங்களைப் போன்ற ஏழைகளைக் கண்டால் பிடிக்கவில்லை. நீங்கள் காக்கி சட்டையும் வெள்ளை சொள்ளை ஆடையும் அணிந்து செய்வதை நாங்கள் அழுக்கான தோற்றத்துடன் செய்தால் பிடிக்கவில்லைஎன்பார். உடனே அரவிந்த சாமியும் வன்மம் பெற்றுஉன்னைப் போன்ற பொறுக்கிகளை தான் நான் வெறுக்கிறேன். அது உண்மை தான்என ஒத்துக் கொள்வார். அந்த கணம் அரவிந்த் சாமியின் மனம் நிலைப்பெறும். அவரது குழப்பம் மறைந்து விடும். அதுவரை சுழன்று கொண்டிருந்த ஒளிக்கருவி சட்டென நின்று நிலையாக பதிவு செய்யும்.


மனம் நிலையின்றி தவிப்பதை இப்படி ஒளிக்கருவியை சுழல விட்டு காட்டும் பாணியை சந்தோஷ் சிவன்இருவரிலும்பயன்படுத்துகிறார்.
ஒன்று தமிழ்ச்செல்வனும் செந்தாமரையும் படுக்கையில் சுழலும் பித்தான காதல் காட்சி.



இன்னொன்று தமிழ்ச்செல்வனிடம் தனக்கு அமைச்சர் பதவி வேண்டி ஆனந்தன் வரும் போது தமிழ்ச்செல்வன் தன் சுழல்நாற்காலியில் அசைந்தாடியபடி ஆனந்தனை நோக்கும் காட்சி. “தளபதியில்அரவிந்த் சாமியைப் போன்றே இங்கு தமிழ்ச்செல்வனுக்கும் மனம் நிலையாக இல்லை. அவனால் தெளிவாக தன் நண்பன் மீதான அசூயையை, கோபத்தை, பயத்தை காட்ட முடியவில்லை. தமிழ்ச்செல்வன் இடம் வலமாய் அசைந்தபடி பூடகமாய் பேச ஆனந்தன் நிலையாக அவனைப் பார்க்கிறான். அவனுக்கு தன் நண்பனின் தவிப்பு புரிகிறது. அவன் புன்னகைத்தபடி கேட்கிறான்: “அப்படீன்னா செல்வம் எனக்கு மந்திரிப் பதவி தர மாட்டீங்க தானே?”. அந்த கேள்வியுடன் தமிழ்ச்செல்வன் நாற்காலியில் சுழன்றாடுவதும் நிற்கிறது. அவன் நிலைப்பெற்று ஆனந்தனை நேராக நோக்கி தன் நிலைப்பாட்டை விளக்குகிறான். ஆனந்தன் இனிமேல் தன் எதிரி என்பதை உறுதிப்பட உணர்த்துகிறான். இனிமேல் அவனால் முன்னோ பின்னோ போக முடியாது. வரலாறு நிலைப்பெற்று விட்டது.



இதை அடுத்து கட்சி நிறுவனர் வேலுத்தம்பியின் மரணம் நிகழ, இரங்கலின் போது மேடை ஏறும் ஆனந்தன் தன் கட்சி மீது குற்றச்சாட்டுகளை அடுக்குகிறான். அமைச்சர்கள் சொத்துக்கணக்கை வெளியிட வேண்டும் என கோருகிறான். இந்த சமயத்தில் ஆனந்தன் நிலையற்று தவிக்கிறான். தன் தாய்க்கட்சியை விமர்சித்து அதை விட்டு விலகுவது அவனுக்கு எளிதாக இல்லை. ஆக அவன் எதிர்மறையாக பேச பேச மையம் கொள்ளாமல் அவன் பேச்சு சுழன்று சுழன்று வருகிறது. இதைக் காட்டதளபதிபாணியில் படக்கருவி சுழல்கிறது. ஆனந்தன்சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும்என கோருகிற வரையில் அது சுழல்கிறது.


 அறுதியாக அவன் குற்றச்சாட்டை வலுவாக வைத்த பின்னர் படக்கருவி நிற்கிறது. ஏனெனில் அவனால் இனி திரும்பி செல்ல முடியாது. இனி தான் இறைத்த சொற்களை அவனால் அள்ளி எடுக்க இயலாது. தமிழ்ச்செல்வன் அவனுக்கு இனி தீர்க்கமான எதிரி. இந்த தீர்மானமான நிலையை எட்டிய பின் ஆனந்தனின் மனம் அமைதியாகிறது. அதனாலே படக்கருவி நிலைப்படுகிறது.
பிரதான பாத்திரங்களின் மனம் கொள்ளும் பல்வேறு உணர்வுநிலைகளை, உள்ளத்தின் தடுமாற்றங்களை, மானிட உறவாடலில் நிகழும் அதிகார நிலைமாற்றங்களை கதை, வசனம், உணர்ச்சிப்பெருக்கு வழியாக அன்றி படக்கருவியின் கோணம் மூலமாகவே இவ்வளவு அழுத்தமாய் சொல்ல முடிந்ததேஇருவர்படத்தை தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு சாதனை என நிறுவி விடுகிறது. அதற்காய் அந்தஇருவரையும்எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நன்றி: உயிர்மை, 2018

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...