Skip to main content

Posts

Showing posts from May, 2018

எழுதும் முன்பான அந்த தயக்கம்…

  இருப்பதிலேயே ரொம்ப எளிதான காரியம் எழுதுவதே. இருப்பதிலேயே ரொம்ப கடினமான விசயமும் அது தான். காரணம் நம் மனம். நான் என்ன எழுதப் போகிறோம் என்பது முழுக்க நம் கட்டுப்பாட்டில் இல்லை. குறிப்பாய் நீங்கள் புனைவு எழுதும் போது. அதுவும் நாவல் எழுதும் போது. எழுதும் நம் விரல்களை அது நடுங்க செய்கின்றது. எழுத ஆரம்பிக்கும் முன்னரே மனதை இருளில் பதுங்கச் செய்கிறது. அல்லது எழுதுவதை ஒத்திப் போட வைக்கிறது.

இருவர்: ஒளிப்பதிவு காட்டும் உளப்பாங்கு (5)

 "தளபதி ” படத்துக்கும் ஒளிப்பதிவு சந்தோஷ் சிவனே . அதில் ஆட்சியர் அரவிந்த் சாமி மம்முட்டி மற்றும் ரஜினியை ஒரு பேச்சுவார்த்தைக்கு அழைப்பார் . எந்த சுமூக முடிவுக்கும் வராமல் பேச்சு தடித்தபடி இருக்கும் . அரவிந்த் சாமிக்கு அந்த ரௌடிகள் மீது ஒரு பூடகமான வெறுப்பு இருக்கும் . ஆனால் இன்னாரை இதனால் வெறுக்கிறேன் என அவரால் உறுதியாய் சொல்ல இயலாது . ஆகையால் ரௌடிகள் ஏன் சட்டத்துக்கு உடன்பட வேண்டும் என்பதை பட்டும்படாமல் சொல்லிக் கொண்டு போவார் . அப்போது அவரது மனம் ஒரு குழப்பத்தில் இருப்பதை சொல்ல சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு கருவி சுழன்றபடி இருக்க செய்வார் . அரவிந்த சாமியின் கோணத்தில் இருந்து அவரது மேஜையை சுற்றி இருக்கும் ஒவ்வொருவரையாவது காட்டி வருவார்கள் . சட்டென ரஜினி குறுக்கிட்டு கத்துவார் . “ உங்களுக்கு எங்களைப் போன்ற ஏழைகளைக் கண்டால் பிடிக்கவில்லை . நீங்கள் காக்கி சட்டையும் வெள்ளை சொள்ளை ஆடையும் அணிந்து செய்வதை நாங்கள் அழுக்கான தோற்றத்துடன் செய்தால் பிடிக்கவில்லை ” என்பார் . உடனே அரவிந்த சாமியும் வன்மம் ...

இருவர் - ஒளிப்பதிவு காட்டும் உளப்பாங்கு (4)

அடுத்து இதே ஒளிப்பதிவு உத்தி எப்படி காதல் காட்சிகளின் போது ஆண் பெண் இடையிலான அதிகார ஏற்ற இறக்கங்களை சித்தரிக்க பயன்படுகிறது என காண்போம் . இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் இரட்டை வேடங்களில் வருகிறார் . ஒன்று ஆனந்தனின் முதல் மனைவி புஷ்பா . அடுத்து , புஷ்பா இறந்த பின் ஆனந்தனின் வாழ்க்கையில் இளம் நடிகையாக நுழையும் கல்பனா . கல்பனா பாடல் காட்சிகளில் பெரும்பாலும் மையப்படுத்தப்பட்டு தாழ் கோணத்தில் மிகுந்த அதிகார பாவனையுடன் காட்டப்படுகிறார் . அவளது படமொன்றின் பிரிவியூவின் போது தான் ஆனந்தன் அவளை காண்கிறான் . அப்போது அவள் மேலே திரையில் நடனமாட அவன் கீழே இருந்து காண்கிறான் . ஆனந்தன் தாழ் கோணத்தில் காட்டப்பட்டாலும் அவருக்கு மேலே கல்பனா தெரிகிறாள் எனும் உணர்வு உள்ளது ( இது அவனை பலவீனப்படுத்துகிறது ) . மேலும் ஆனந்தன் அவளைக் கண்டு , உருவ ஒற்றுமை ஏற்படுத்தும் அதிர்ச்சியில் , தடுமாறிப் போகிறான் .

ராஜன் குருக்கள்

ராஜன் குருக்கள் ஒரு முக்கியமான வரலாற்றாசிரியர்; ஆய்வாளர்; சமூக விஞ்ஞானி. ராஜன் குருக்கள் சன்னமாய் புன்னகைத்தபடி மிக மென்மையாய், அதிராமல் பேசும் பேச்சாளர். புதியவர்களுடன் சட்டென ஸ்நேகம் பாராட்டும் ஆசிரியரின் குணநலன் கொண்டவர். எங்கள் (கிறைஸ்ட்) பல்கலையில் பேராசிரியர்களுக்கான ஒரு கலந்துரையாடல் மூன்று-நாள் நிகழ்ச்சி கடந்த வாரம் நிகழ்ந்தது. அதன் இறுதி நாள் சிறப்புரை வழங்கவே ராஜன் குருக்கள் வருகை புரிந்தார்.