Skip to main content

நம் காலத்தின் பாசிசம் எது?




எஸ்.வி சேகர் பிரச்சனையை ஒட்டி ராஜன் குறை எழுதிய ஒரு பதிவின் மீதான என் எதிர்வினை இது.
அணி சேர்ந்து அரசியல் போராட்டம் செய்யும் போது எப்படி முரண்களை கையாள்வது என்பதே ராஜன் குறையின் குறிப்பின் மையம். தெளிவும் சித்தாந்த ஒழுங்கும் கொண்டு விவாதித்து முரண்களை கையாள வேண்டும் என அவர் சொல்வதாய் நான் புரிந்து கொள்கிறேன். எனக்கு அவரது தரப்பில் உள்ள மாறுபட்ட கருத்து இது: அணி அமைத்து செய்யப்படும் அரசியலின் அடிப்படையில் சில சிக்கல்கள் இல்லையா? ஒரு மக்களாட்சி அமைப்பில் பிரதிநுத்துவ அரசியலுக்கு குழு செயல்பாடு தேவையே. ஆனாலும் இக்குழு செயல்பாடுகள் மானுட அறத்தை மறுக்கும் எல்லைக்கும் போகலாமே? அப்போது என்ன செய்வது?
குழு அரசியலில் சுயசிந்தனை, ஒருவரது அற உணர்வுக்கு அங்கு இடம் என்ன? என் குழு ஒரு பொதுநல நோக்குக்காக ஒரு தப்பான காரியத்தை ஆதரித்தால் நான் என்ன செய்ய வேண்டும்?

தேர்தலின் போது எப்படி செயல்பட வேண்டும்? அணியாகவா தனித்தா? அணியாக எனில் அது ஜனநாயக விரோதம் அல்லவா? அப்போது தனித்தென்றால் இப்போது நாம் கூட்டுமனப்பான்மையை கேள்வியின்றி ஏற்கலாமா?
நமது அரசியலமைப்பு அணி செயல்பாட்டை ஏற்கிறது. அதேவேளை நமது சுதந்திரத்தை, தேர்வுகளை, முடிவுகளை நாம் தனிமனிதர்களாகவே முன்னெடுக்க வேண்டும் என்கிறது.


உதாரணமாய் நீங்கள் ஒரு தனிமனிதராக ஒரு அணியின் சார்பில் வாக்கு அளிக்க முடியாது. ஒரு அணியின் தவறுகளுக்கு பொறுப்பாகி ஒரு தனிமனிதர் சிறை செல்ல முடியாது. சாதி, மதத்தின் அடிப்படையில் தொகுதி சாத்தியமில்லை. தமிழ் தேசியர்கள் எங்கள் தொகுதியில் தமிழ் தேசியர் மட்டுமே போட்டியிட வேண்டும் என கோர முடியாது. ஆக நமது மக்களாட்சி அமைப்பு தனிமனிதருக்கும் அணிகளுக்கும் இடையில் ஒரு சமரசத்தை கோருகிறது. இங்கு தான் பிரச்சனையே எழுகிறது:


ராஜன் குறை இந்துத்துவாவுக்கு எதிரான அணிகள் முழுக்க தீவிரவாதத்தை ஆதரிக்கவோ அனைவரையும் பாசிஸ்டுகள் என முத்திரை குத்தக் கூடாது என்கிறார். இது ஒரு முக்கியமான பார்வை இதை நான் ஏற்கிறேன். ஆனால் ஒரு மக்கள் திரள் கூட்டாக செயல்படும் போது இடதுசாரி கட்சியினரைப் போல சித்தாந்த தெளிவுடன், தர்க்க ஒழுங்குடன், நிதானத்துடன், பிசிறின்றி இயங்குவது சாத்தியமா? அப்படியே அது சாத்தியப்பட்டாலும் ஒழுங்கு, ஒற்றுமை, கட்சிக்கட்டுப்பாடு ஆகிய தேவைகளின் பொருட்டு நியாயம், அறம், உண்மை ஆகியவற்றை கைவிடும் நிலைக்கு நாம் தள்ளப்பட மாட்டோமா? இது நம் வரலாற்றில் இடது அமைப்புகளில் தொடர்ந்து நிகழ வில்லையா? நக்சல்பாரி அமைப்பை இடதுகட்சிகள் மிகக்கொடூரமாய் அழித்தது குறித்த பதிவுகள் இல்லையா? அதற்கு எதிராய் கட்சிக்காரர்கள் அமைதி காத்தது நியாயமா?
பாசிசத்துக்கு எதிரான குரல்களைத் தொகுக்கும் போது நாம் ஆதரிக்கும் மக்களிடையே பாசிசம் தென்பட்டால் என்ன செய்ய? சிங்கூரில் நடந்தது போல் நிகழ்ந்தால் இடதுசாரி தோழர்கள் மௌனம் காத்தது போல் மௌனிக்க வேண்டுமா? பாசிசத்துக்கு எதிரான அணி ஒற்றுமையை பாதுகாப்பது முக்கியமெனில் மௌனிக்கத் தானே வேண்டும்? அப்படியான மௌனம் நம்மை அழிவை நோக்கி இட்டுச் செல்லும்.
என் தீர்வு: இனி வரும் காலத்தில் அறவழியிலான அரசியல் என்பது சிதைவின் அரசியலாக இருக்கும். அணி சேர்க்க வேண்டும். ஆனால் எப்போது வேண்டுமெனிலும் அந்த அணியை சந்தேகிக்கவும் ஆய்வு செய்யவும் தேவைப்பட்டால் உடைத்து எறியவும் தயாராக வேண்டும். அணிகள் தொடர்ந்து தோன்றி உடைகிறவையாய் இருக்கட்டும். அவற்றுக்கு என உறுதியான கட்டுக்கோப்பான சித்தாந்தங்கள் வேண்டாம். மக்களின் எழுச்சியும் மனசாட்சியும் உள்ளுணர்வும் கோரும் நியாயங்களை ஒட்டி அரசியல் உருவாகட்டும். அவற்றின் தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போது அந்த அமைப்புகள் சிதையட்டும். சிதைவுற்ற இடத்தில் புது அமைப்புகள் பிறக்கட்டும்.
இனி பாசிசம் என்பது வலதுசாரிகள் கட்டமைப்பது மட்டுமாக இருக்காது. பெரிய கட்டுறுதியான அமைப்புகளை யாரெல்லாம் உருவாக்கி வளர்த்தாலும் அது பாசிசத்தை நோக்கி இட்டுச் செல்லும். கேள்விக்குட்படுத்த தகாத சித்தாந்தங்களை யார் முன்வைத்தாலும் அவை அழிவு சக்திகளாய் உருமாறும். இடதோ வலதோ எந்த சாரிகளையும் நான் சந்தேகத்துடனே பார்ப்பேன். வேறு வழியே இல்லை.


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...