Skip to main content

லக்கான் பற்றி ஒரு நூல்




கிரைஸ்ட் பல்கலையில் நான் கோட்பாடுகள் கற்பிக்கும் இரண்டாம் வருட இளங்கலை மாணவர்கள் (PS Eng [Psychology, Sociology, English]) கொண்டு வரும் புத்தகம் இது. முக்கியமான பிரஞ்சு உளவியலாளர் லக்கானின் கோட்பாடுகளின் அடிப்படையில் கடந்த ஐநூறு வருடங்களில் ஐரோப்பாவில் தோன்றின பல முக்கியமான படைப்பாளிகளை (ஷேக்ஸ்பியர், ஆல்பர்ட் காமு, பாப்லோ நெருடா, ஈ.ஈ கம்மிங்ஸ்) அலசி இருக்கிறார்கள். இந்த சிறிய தொகுப்பு நுட்பமான ஆழமான விவாதங்கள் அடங்கியது.

சமூக உறவாடல்கள் வழி எப்படி நமது மனம், நமது சுயம், உருவாகிறது என்பதை லக்கான் வியப்பூட்ட்டும் வகையில் பேசியிருக்கிறார். உதாரணமாய், நமது இச்சை எப்படி செயல்படுகிறது என பேசும் அவர் நாம் அசலான ஒன்றை விட நகல்களைத் தான் அதிகம் விழைகிறோம். ஒரு நகல் மீதான இச்சை நம்மை இன்னொரு நகலை நோக்கி இட்டு செல்கிறது. அசல் எப்போதுமே நம் கையருகே வராது என்பதால் நகல்களின் உலகில் மாட்டிக் கொள்கிறோம். இதனால் நகல்கள் எப்படி நம்மை தொடர்ந்து அதிருப்தி நிலையில் வைக்கின்றன என விளக்குகிறார் லக்கான். இந்த விசயம் எப்படி காதலில் தத்தளிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை ஷேக்ஸ்பியர் மற்றும் நெருடாவை முன்வைத்து சில கட்டுரைகள் இத்தொகுப்பில் பேசுகின்றன.


இதே சிக்கல் எப்படி சேமுவல் பெக்கெட், ஆல்பர்ட் காமு ஆகியோரின் நாடகம் (Waiting for Godot) மற்றும் நாவலில் (The Stranger) அபத்தச் சூழல்களை தோற்றுவிக்கிறது என்பதை வேறு சில கட்டுரைகள் பேசுகின்றன. குறிப்பாக காமு பற்றின கட்டுரைகள் தமிழ் வாசகர்கள் நிச்சயம் படிக்க வேண்டியவை.


அர்த்தங்களின் தளைகளை அறுத்து நமது அதர்க்க மனம் நோக்கி கவிதையை நகர்த்த ஈ.ஈ கமிங்ஸ் எப்படி கவிதை வடிவை ஒரு உத்தியாய் பயன்படுத்துகிறார் என விவாதிக்கும் கட்டுரையும் முக்கியமானது.


இத்தொகுப்பில் நான் இரு கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். இன்னொரு கட்டுரையை இணைந்து எழுதியிருக்கிறேன்.


இன்னும் சில நாட்களில் நூல் வெளியாகி விடும். விலை 35 ரூபாய்க்குள் தான் இருக்கும் (விரைவில் உறுதி செய்கிறேன்). வாங்க விரும்பும் நண்பர்கள் என்னை இன்பாக்ஸிலோ abilashchandran70@gmail.com மெயிலிலோ தொடர்பு கொள்ளலாம்.


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...