Skip to main content

பெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா?


பெண் உளவியல் பற்றி நான் எழுதின கட்டுரைகளின் தொகுப்பு இது, எனது ஒன்பதாவது நூல். உயிர்மை வெளியீடு. இம்மாதம் 30ஆம் தேதி வெளியாகிறது.
அனுபவம், குடும்பம், வேலையிடம், சமூகம், பெண்ணுரிமை, மனநலம், சினிமா, ஆடை ஒழுக்கம், உடல், பேச்சு, திருமணம் என வெவ்வேறு தளங்களில் பெண் மனம் எப்படி செயல்படுகிறது என இந்நூல் பேசுகிறது.
இது ஒரு கராறான உளவியல் நூல் அல்ல. ஒரு எழுத்தாளனாய், சாமான்யனாய் பெண்களை அணுகி அவர்களை புரிந்து கொள்ள நான் செய்த முயற்சிகளே இது. கடந்த பத்து வருடங்களில் என் அணுகுமுறையில் நேர்ந்துள்ள மாற்றங்களையும் இது பிரதிபலிக்கிறது.



இந்நூலின் தனிச்சிறப்புகளில் ஒன்று சந்தோஷ் நாராயணனின் முகப்பு அட்டை வடிவமைப்பு. சந்தோஷ் நம் புத்தகத்துக்கு அட்டை வடிவமைப்பது என்பது சாலையில் நோக்கமற்று திரியும் ஒருவனை ஒரு பேரழகி நிறுத்தி கையை பற்றி சில நிமிடங்கள் பேசுவது போன்ற காரியம். அவள் சென்ற பின் இது நம் கையே தானா என நீண்ட நேரம் யோசித்தவாறு நிற்போமே, அதைப் போன்றே இது என் புத்தகம் தானா எனும் உற்சாகமான திகைப்பை அவர் ஒரு அற்புதமான அட்டை மூலம் தந்திருக்கிறார். இந்நூலின் ஆதாரமான தொனியை, மையமான விவாதப் போக்கை, கருவை அவர் தன் வடிவமைப்பில் வெளிக்கொணர்ந்திருக்கிறார். அந்த ஊக்கு நவீன வாழ்க்கைக்கு நகர்ந்திருக்கும் ஒரு மரபான பெண்ணின் குறியீடு. அது மூடியிருக்கும் போது அதனுள் அவள் ஒரு அமைதியான அழகியாய் தெரிகிறாள். ஆனால் திறந்து கொண்டதும் அவள் ஒரு கூரிய ஆயுதமாகி விடுகிறாள். அவள் ஏன் இப்படி இருக்கிறாள் என்பது தான் நான் பல்வேறு தளங்களில் வைத்து மீள மீள கேட்கும் கேள்வி. அதை ஒரே பிம்பம் கொண்டு சந்தோஷ் நிறுவி விட்டார். நீர் ஒரு மேதை ஐயா

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...