Skip to main content

2ஜி வழக்கு தீர்ப்பும் பேரறிவாளனும்


2ஜி அலைக்கற்றை தீர்ப்பு சம்மந்தமான இரு விதமான முகநூல் பதிவுகளைப் படித்தேன். ஒருவகை - இது கார்ப்பரேட் அரசியல் மோதல்களில் நம் கண்ணுக்குத் தெரியும் சிறு முடிக்கற்றை மட்டுமே. அவர்களுக்குள் அடித்துக் கொண்டு சமரசமாகி விட்டார்கள். பரஸ்பரம் மிரட்ட இந்த வழக்கை பயன்படுத்திக் கொண்டார்கள். இவ்வழக்கில் குற்றம் நிச்சயம் நடந்திருக்க வேண்டும். ஆனால் குற்றவாளிகள் ஒன்று ராஜாவும் கனிமொழியும் அல்ல, அல்லது அவர்கள் மட்டும் அல்ல. பெருந்தலைகள் பலர் எந்த தொல்லையும் இன்றி ஜாலியாக தப்பித்து விட்டார்கள்.



இன்னொரு வகை - இந்த ஊழலே நடக்கலைங்க. ஏனென்றால் அதற்கு ஆதாரமே இல்லைங்க. ஏனென்றால்... இப்படிப் போகிறது அவர்களின் வாதம். தீர்ப்பின் ஆயிரக்கணக்கான பக்கங்களில் சிலவற்றை தெளிவாக ஊன்றிப் படித்து ராஜன் குறை எழுதிய பதிவும் இவ்வாதங்களில் ஒன்று. குற்றம் நடந்ததாய் ஒரு மாயை உருவானதே அன்றி, அது நடந்ததாய் எந்த ஆதாரமும் இல்லை. ஆகையால் இவ்வழக்கில் யாரையும் தண்டிக்க முடியாது. சொல்லப் போனால் நடந்த ஒரே குற்றம் குமாஸ்தாக்கள் 2ஜி சம்மந்தமான கோப்புகளை சரிவர தொகுத்து சேகரிக்காதது தான்.


ராஜன் குறையுடன் பல விசயங்களில் உடன்படும் என்னால் இவ்விசயத்தில் முடியவில்லை.
ஆதாரம் இல்லாமல் தண்டிக்க முடியாது என்றால் ராஜீவ் காந்தி வழக்கில் ஒரு பேட்டரி வாங்கிக் கொடுத்ததற்காக பேரறிவாளனை ஏன் இன்னும் சிறையில் வைத்திருக்கிறார்கள்? ராஜீவைக் கொல்ல சதியாலோசனை நடந்தது, இன்னின்னார் இங்கிங்கே வைத்து நடத்தினார்கள் என்பதற்கான தெளிவான தீர்க்கமான ஆதாரங்களை சி.பி.ஐ முன்வைக்கவில்லை. அவ்வழக்கில் காங்கிரசின் பெருந்தலைகளுக்கு இருந்த பங்கு என்ன என்பதும் விசாரிக்கப்படவில்லை. சதியாலோசனை நிரூபிக்கப்படாத போது, ஆலோசனையை நடத்தினர்கள் பிடிக்கப்பட்டு குற்றவாளிகள் என நிரூபிக்கப்படாத போது சதியாலோசனையே இல்லை என ஆகி விடாதா? அப்படி எனில் நிரூபிக்கப்படாத சதியாலோசனையை நிறைவேற்ற பேட்டரி வாங்கிக் கொடுத்த குற்றத்துக்காக எப்படி பேரறிவாளனை தண்டிக்க முடியும்? சதியாலோசனைக்கான ஆதாரம் இல்லை எனில் அதுவே ஒரு மாயை என கூற முடியாதா? அப்படி எனில் பேட்டரி மட்டும் எப்படி ஒரு ஆதாரம் ஆகும்?


இதில் இருந்து என்ன தெரிந்து கொள்கிறோம்? ஆதாரங்களை தேவையான போது உருவாக்குவதும், மறைப்பதும், ஆதாரம் இல்லையென்றாலும் யாரை வேண்டுமானாலும் உள்ளே வைக்கக் கூடியதே நம் நீதித்துறை என்றல்லவா?
உண்மையில் மன்னார்குடிக் கும்பலை விட ஆயிரம் மடங்கு ஆபத்தானவர்கள் விசாரணை அதிகாரிகளும் நீதித்துறையினரும்.


ஆகையால், நண்பர்களே இவ்விசயத்தில் குற்றமே நடக்கவில்லை எனும் தேங்காய் மூடி கச்சேரிக்கு நான் செவிசாய்க்க மாட்டேன். நான் முதல் தரப்பினருடனே உடன்படுகிறேன். 2ஜி எனும் பரப்பிரம்மத்தின் கால் நகங்களை மட்டுமே நாம் கண்டிருக்கிறோம். காணாதது நம் கற்பனையை மீறியது, ஆனாலும் அது அதே சமயம் நம் அனைவராலும் புரிந்து கொள்ளுமளவு எளிதானது. சட்டம், ஆதாரம் என யோசிப்பவர்கள் பிரம்மத்தின் கால் நகத்தைக் கண்டு வியந்து கொண்டிருக்க வேண்டியது தான்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...