Skip to main content

சிகரெட் புடிங்க மாமா!

Image result for rasi ajith smokes

அஜித் மற்றும் ரம்பா நடித்த ராசிடிவியில் ஓடிக் கொண்டிருந்தது. தாய் மாமன்அவரை உயிருக்குயிராய் நேசிக்கும் மாமா மகள்குடும்பத் தகராறு, ஈகோ என பாரதிராஜா பாணியிலான படம். ஒரு காட்சியில் அஜித்தை அவரது ரம்பாவின் அப்பா அவமதித்து விட, அஜித் துண்டை உதறி வீட்டை விட்டு வெளியேற அவருக்குப் பின்னால் ஓடிப் போய் அமைதிப்படுத்த முயல்கிறார் ரம்பா. ஆற்றுப்படுத்தும் நோக்கில் ரம்பா அவருக்கு சிகரெட்டுகள் நீட்டுகிறார். சிகரெட் புகைப்பது உடல் நலத்துக்கு கேடு என அஜித் மறுக்கிறார். உடனே ரம்பாஇல்லை மாமா ஆம்பளைன்னா ஒரு நாளைக்கு நான்கு சிக்ரெட்டாவது புகைக்கணும்என்று கெஞ்சுகிறார். அஜித்தும் நெகிழ்ந்து சிகரெட்டை வாங்கி பற்ற வைத்து ஊத முயன்று இருமி சிரமப்படுகிறார். அடுத்து ஒரு அழகான பிம்பம் வருகிறது. அஜித் தன் வாயில் இருந்து புகையை ரம்பாவின் முகத்தில் ஊதுகிறார். ரம்பா சிலித்து கிளர்ந்து நெளிகிறார். தமிழின் ஆக செக்ஸியான காட்சிகளில் ஒன்று இது எனத் தோன்றுகிறது.


Image result for rasi ajith movie

இதற்கு முன் இத்தகைய ஒரு ஆண்மையை வெளிப்படுத்திய நாயகன் எம்.ஜி.ஆர் ஒருவர் தான். அது போகட்டும்ரம்பா ஏன் ஆம்பளைன்னா சிகரெட் புகைக்கணும் என்கிறார்?
சிகரெட்டுக்கும் ஆண்மைக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதாவது அறிவியல் ரீதியாய். ஆனால் சிகரெட் நிறுவனங்கள் ஆரம்பத்தில் இருந்தே சிகரெட்டை ஆண்மையின் குறியீடாகத் தான் விளம்பரங்கள் வழி கட்டமைத்தார்கள். அதுவும் சமூகத்தில் ஊருக்கு அடங்காத காளையாக திரியும் முரட்டு ஆண் தான் சிகரெட் புகைப்பான் எனும் சித்திரத்தை வெற்றிகரமாய் நிறுவினார்கள். சிகரெட் ஒரு எதிர்க்கலாச்சார சின்னமாகியது. அவ்வாறு தான் அது மைய நீரோட்ட கலாச்சாரத்தில் ஒரு முக்கிய இடம் பிடித்தது.
இப்படத்தில் அஜித் ஒரு அழகான ஆனால் களங்கமற்ற ஆண். அவரை சிகரெட் மூலம் ஆண்மை மிக்கவராக்க முயல்கிறார். பொதுவாக பெண்களுக்கு சிகரெட் வாசம் பிடிக்காது என்பார்கள், இப்படத்தில் ரம்பா தன்னை சிகரெட் வாசனை கிளர்ச்சி அடைய வைக்கிறது என சொல்கிறார்

ரம்பா இப்படி சிந்திப்பதற்கு மற்றொரு காரணம் உள்ளதுஅஜித்துடன் சதா முறைக்கும் ரம்பாவின் அப்பா ஒரு காட்சியில் சுருட்டுப் பிடிக்கிறார். சுருட்டு ஒரு மிகு ஆண்மைக் குறியீடு. தனக்கு வாய்க்கும் காதலன் தன் அப்பாவைப் போன்றே ஆண்மையாய், ஆனால் சற்றே மிதமாய் இருக்க வேண்டும் என ரம்பா விரும்புகிறார். அதனாலே சுருட்டு கொடுக்காமல் சிகரெட் கொடுக்கிறார்.
இந்த பெண்மை சித்தரிப்பு எவ்வளவு பாசாங்கற்றதாய், ரத்தமும் நிணமுமாய் உள்ளது பாருங்கள். இப்போதெல்லாம் இப்படியான பெண் பாத்திரங்கள் நம் சினிமாவில் வருவதில்லை. இப்போது அரசியல் சரித்தன்மையை இயக்குநர்கள் மிக முக்கியமாய் நினைக்கிறார்கள். ஆக, நம் படங்களைப் பார்க்கும் பெண்கள், தலித்துகள், ஊனமுற்றவர்கள், இஸ்லாமியர், ஆண்கள், அப்பா, தாத்தா, முதியோர், அம்மா, அத்தை, பாட்டி என யாருமே 'அசௌகரியமாய்' உணராதபடி, காயப்படாதபடி பார்த்துக் கொள்கிறார்கள். விளைவாக இப்போது வரும் மனிதர்கள் சுதந்திர தின ராணுவ அணிவகுப்பில் மிடுக்காய் வரும் சிப்பாய்கள் போல் இருக்கிறார்கள். இன்றைய படங்களில் நாயகன் பதற்றமாய் இருந்தால் மட்டும் சிகரெட் பிடிக்கிறான். காதலி ஏமாற்றினால் மட்டும் தண்ணி அடிக்கிறான். சிகரெட்டையும் மதுவையும் ஒருவித உதிரி தேவைகளாய் இன்றைய படங்கள் சித்தரிக்கின்றன

ஆனால் “ராசிமாதிரியான அந்த கால படங்களில் ஒரு கலப்படமில்லாத தமிழ் மனம் தெரிகிறது. இம்மாதிரி படங்களை இப்போது மிஸ் பண்ணுகிறேன்!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...