Skip to main content

நீலத் தீவண்டிகளுடே கறுத்த பாட்டுகாரி

அஸீஸ் இப்ராஹிம் ஒரு சமகால மலையாள கவிஞர். எனது சக ஆசிரியரின் நண்பர். அவர் மூலமாய் ” நீலத் தீவண்டிகளுடே கறுத்த பாட்டுகாரி” தொகுப்பு எனக்கு கிடைத்தது. எனக்கு மலையாளம் வாசிக்கத் தெரியாது. ஆனால் கேட்டால் புரியும். சில மலையாளி நண்பர்கள் வாசித்துக் காட்ட ரசித்துக் கேட்டேன். வழக்கமான மலையாள கவிதைகளின் இசை ஒழுக்கு, தேன் சொட்டும் அனுபவம். அது, போக இக்கவிதைகளின் தொனி, அது வெளிக்காட்டும் இழப்புணர்வு, எனக்கு பிடித்திருந்தது. ஆஸிஸின் தொனி அச்சுதன் தீக்குன்னியை நினைவுபடுத்துகின்றன (என்.டி ராஜ்குமார் தமிழில் மொழியாக்கியிருக்கிறார்.).

ஆஸிஸின் நீண்ட கதைக் கவிதைகள் எனக்கு அதிகம் பிடித்திருந்தன. ”நீலக்குறிஞ்ஞி” என்றொரு கவிதை காதலின் வீரியத்தை, ஆழத்தை அறிய அதை இழக்க வேண்டும். பின் நீண்ட காலம் அதைப் பிரிந்து பாலைவனங்களில் அலைய வேண்டும். நீலக்குறிஞ்சி பூப்பதற்கான கால அளவு காத்திருக்க வேண்டும் என்கிறார். இக்கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜெயமோகனின் “காடு” நாவலில் குறிஞ்சிப் பூவை தேடி மலையேறிச் செல்லும் காதலர்களின் சித்தரிப்பு வரும். அதில் காதலின் மகத்துவம், அதன் சாதாரணத் தன்மை இரண்டையும் சுட்டியிருப்பார். இக்கவிதை குறிஞ்சி எனும் உருவகத்தை நேர்மாறாய் கையாள்கிறது. காதலையும் குறிஞ்சியின் மலர்ச்சியையும் ஆன்மீக தளத்துக்கு நகர்த்துகிறது.
“சக்க” (பலாப்பழம்) என்று இன்னொரு கவிதையும் என்னைக் கவர்ந்தது. கவிதைசொல்லி ஒரு பள்ளி மாணவனாய் இருந்து தன் ஆசிரியரிடம் நல்ல பெயர் வாங்கப் போராடும் காலகட்டத்தில் கவிதை துவங்குகிறது. எப்படி முயன்றாலும் எப்போதும் அவன் ஒரு படி பின்னாலே இருக்கிறான். அவனைத் தாண்டி பிறர் ஏறிச் சென்றபடி இருக்கிறார்கள். ஆசிரியரும் அவனைப் பாராட்டி ஏற்பதில்லை. சிறுவயதில் அவன் நோட்டு புத்தகத்தை ஆசிரியர் திருத்தி முட்டை மதிப்பெண் அளிக்கிறார். இது அவனுக்கு தன் பக்கத்து வீட்டு மரங்களில் தொங்கும் பலாப்பழத்தை நினைவூட்டுகிறது. அதை திருடி வேகவைத்து தின்றே அவன் பசி அடங்குகிறது. சில நாட்கள் பசித்த வயிற்றுடன் வகுப்பில் இருக்கும் அவனால் கவனம் செலுத்த முடிவதில்லை. அதனாலே அவன் முட்டை (சக்க) வாங்குகிறான். என்றாவது ஒருநாள் ஆசிரியரின் தோப்பிலுள்ள சுவையான நல்ல சக்கையை தான் சுவைக்க வேண்டும் என ஏங்குகிறான் (இங்கு பலாப்பழம் சமமாய் நடத்தப்படுவதன் குறியீடு). அவன் வளர்ந்து பல்கலைக்கழகம் செல்கிறான். அப்போது ஆசிரியர் தன் மகளுக்கு இடம் வாங்க அங்கு வருகிறார். அப்போது அவர் முதன்முதலாய் தன் தோப்பில் விளைந்த பலாத் துண்டு ஒன்றை அவனுக்கு அளிக்கிறார். ஆசிரியர் கையால் பிரியத்தை சுவைக்க வேண்டும், ஏற்கப்பட வேண்டும் என அவனது ஏக்கம் எதேச்சையாய் நிறைவேறுகிறது.
இக்கவிதையில் எனக்கு பிடித்தது இரண்டு விசயங்கள். பலாப்பழத்தை ஒரு சமூக மேல்நிலையாக்க குறியீடாய் பயன்படுத்தி உள்ள விதம். வாழ்க்கையில் நம்மில் மேலாய் உள்ள மனிதர்கள் சட்டென ஒருநாள் நமக்கு இணையாக ஆகும் விசித்திரம், அதன் அபத்தம்.
இத்தொகுப்பின் குறைகள் இவை எனத் தோன்றுகின்றன:
1)   நிறைய குட்டிக் கவிதைகள் வருகின்றன. அவை கவிதையாகவில்லை.
2)   அரசியல் கவிதைகள் பேஸ்புக் ஸ்டேட்டஸ் போல் உள்ளன.

3)   இஸ்லாமிய பின்புலம், அதன் கலாச்சார நுணுக்கங்கள் இல்லை. கவிதைகள் ரொம்ப “மதசார்பற்றவையாய்” உள்ளன.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...