அஸீஸ் இப்ராஹிம் ஒரு சமகால மலையாள கவிஞர். எனது சக ஆசிரியரின் நண்பர். அவர் மூலமாய் ” நீலத் தீவண்டிகளுடே கறுத்த பாட்டுகாரி” தொகுப்பு எனக்கு கிடைத்தது. எனக்கு மலையாளம் வாசிக்கத் தெரியாது. ஆனால் கேட்டால் புரியும். சில மலையாளி நண்பர்கள் வாசித்துக் காட்ட ரசித்துக் கேட்டேன். வழக்கமான மலையாள கவிதைகளின் இசை ஒழுக்கு, தேன் சொட்டும் அனுபவம். அது, போக இக்கவிதைகளின் தொனி, அது வெளிக்காட்டும் இழப்புணர்வு, எனக்கு பிடித்திருந்தது. ஆஸிஸின் தொனி அச்சுதன் தீக்குன்னியை நினைவுபடுத்துகின்றன (என்.டி ராஜ்குமார் தமிழில் மொழியாக்கியிருக்கிறார்.).