Skip to main content

ரசிகன் - வீழ்ச்சியைப் பற்றின நாவல் - குலசேகரன் பாண்டியன்

ஆர். அபிலாஷ் எழுதிய ரசிகன் என்கிற நாவலை நடுவில் வேறெதையும் படிக்காமல் சமீபத்தில் வாசித்தேன். எனக்கே ஆச்சரியம். நாவல் சுவாரசியமாயிருந்தது. ஆனால் எல்லாவற்றையுமே கொஞ்சம் தாண்டிவிட்டால் மீதியை கடப்பது கடினமில்லை.
  பள்ளி மாணவனின், வளர்ந்த பின் புலானாய்வு பத்திரிகையாளனின் தன்னிலையில் நாவல் சொல்லப்படுகிறது. தேசிய ஊழலில் தொடர்புள்ள பெண் தலைவரின் பாலியல் பேச்சை வெளிப்படுத்துவதால் அவன் தலைமறைவானவன். இப்போதும் முன்பு பள்ளி பருவத்திலும் நண்பனாயிருக்கும் சாதிக் என்பவனை பற்றிதான் இந்த நாவல். ஏனோ தன்னைப்பற்றிய எழுத்தாயில்லை. சாதிக் அறிவுஜீவி, பத்திரிகையாளன்,  கம்யூனிஸ்ட், இலக்கியவாதி,  விமர்சகன் , பெண்கள் விரும்புக்கூடியவன், வினோதன், அன்னியன் மெர்சோ போல் அபத்தமாக இயங்குவன் என எல்லாமே.  பின்னால் அவன் ரஜினி ரசிகர் மன்றத்தி்ன் பெரிய தலைவன்.
அவன் எப்படி தீவீர ரசிகனான் என்பதை நாவல் முட்டி உடைக்காமல் பெரும்பாலும் வாசிப்பின் யூகத்துக்கே விடுகிறது. இது விலகல் எழுத்துமுறையாயிருக்கிறது. மற்றையபாணி இதை விளங்கிக்கொள்ளவே முயலும்.
மேலும் நம்பகத்தன்மை எல்லாவற்றுக்கும் அடிப்படையானது. அதுவுமில்லாமல் கதைசொல்லி கதைக்காகவே ஒட்டுண்ணியாயிருக்கிறான். உம்மாவும் பர்வீனும் நாலு நாள் பட்டினி கிடந்தாலும் இயங்காமல்,  போய் மூட்டை கூட தூக்க மாட்டென்கிறான். வேண்டுன்றே தன்னை முட்டாளாக காட்டுகிறான். பிறகு பல பக்கங்களுக்கு அரசியல் இலக்கிய உரையாடல்களை வைக்கிறான். வேண்டுமென்றே சினிமாவில் போல் ரத்த அடிபட்டாலும் உடனே எழுந்துகொள்கிறார்கள்.

நேரடியான ஒரு வீழ்ச்சியை ஆயிரம் விதமாக வாசகன் அர்த்தம்கொண்டாலும் பிரதி என்னவாக புரிந்துகொள்கிறதென்பதே முக்கியம்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...