Skip to main content

தனிமனிதன் எனும் பிரமை (4)

Image result for sewage workers

நான் அனுதினமும் இடஒதுக்கீட்டை கடுமையாய் எதிர்க்கும் மேற்தட்டு மாணவர்களிடம் உரையாடுகிறேன். அவர்கள் அப்படியே மேற்சொன்ன தனிமனித வாதத்தை பேசுகிறார்கள். மனிதனின் ஆதாரமான திறமையின் அடிப்படையிலே அவனுக்கான வாய்ப்புகள் அமைய வேண்டும் என்கிறார்கள். ஆனால் ஆதாரமான திறமை என ஒன்று இல்லை; அது கட்டமைக்கப்பட்டது என அவர்களுக்கு புரிவதில்லை.

நாம் ரேண்டின் உதாரணத்துக்கு மீண்டும் வருவோம். ஒரு இலை பச்சை என எப்படி அறிகிறோம்? இலை “பச்சையாக இருப்பதே” அதை பச்சையாக்கிறது என்பார் ரேண்ட். ஆனால் உலகம் மொத்தமும், காற்றும், மழையும், மேகங்களும், சூரியனும் “பச்சையாக” இல்லை என்பதாலே இலையின் பச்சை நமக்கு துலங்குகிறது என்பது என் பார்வை. அதாவது, இலையை சூழ்ந்துள்ளவை அதைப் போல பழுப்பாக இல்லை என்பதே இலையை பச்சை ஆக்குகிறது. A = A, ஏனென்றால் A × B.
 இந்த முரணியக்கத்தின் அடிப்படையிலே மனிதனின் பகுத்தறிவு செயலடுகிறது. மற்றமை தான் ஒன்றின் தனித்தன்மையை (அப்படி ஒன்று உண்டெனில்) தீர்மானிக்கிறது. உயர்சாதிகள் தாம் தலித்துகளை உருவாக்குகிறார்கள். முன்னவர் இன்றி பின்னவரை நாம் விளக்கவே இயலாது. முரணியக்கத்தை கருத்திற் கொள்ளாமை ரேண்டின் சிந்தனையின் ஒரு அடிப்படை பிழை. 
 இன்றைய இளம் தலைமுறையினரில் சிலர் இடஒதுக்கீட்டை இவ்வாறு பார்க்கிறார்கள்: இந்தியாவில் தன்னை தனியாக, முக்கியமாக உணரும், தன்னளவுக்கு திறமையற்ற மந்தையினர் (இட ஒதுக்கீடு, சமூகநல திட்டங்களின் பெயரில்) அடுத்தவரை உறிஞ்சி வாழ்கிறார்கள். இதை வெறுக்கும் இந்த மேற்தட்டு / மேல்சாதி இளையதலைமுறையினர் இயல்பாகவே ஐயன் ரேண்டினால் ஈர்க்கப்படுகிறார்கள்.
 இங்கு வலதுசாரிகள், தாராளவாத கருத்தியலாளர்கள், முதலாளித்துவாதிகள், இடதுசாரி எதிர்ப்பாளர்கள், இடஒதுக்கீடு மறுப்பாளர்கள் என பலரும் ரேண்டின் தத்துவம் சரி என நம்புகிறார்கள். பொதுப்போக்குக்கு வளைந்து போக விரும்பாதவர்களும் இந்த கட்சியில் சேர்கிறார்கள்.
நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட மாணவர் ஆதர்ஷ் இறுதி வகையை சேர்ந்தவர். ஆதர்ஷ் என்னிடம் இரண்டு கேள்விகளைக் கேட்டார்:
1)   ஒரு தனிமனிதனாக நான் ஏன் பிறரின் போக்குகளால் அலைகழிக்கப்பட வேண்டும்? நான் ஏன் பொதுப்போக்குக்கு வளைய வேண்டும் எனும் நெருக்கடிக்கு ஆளாகிறேன்? நான் ஏன் “நானாகவே” இருக்கக் கூடாது?
2)   என் உடல் முழுக்க என் கட்டுப்பாட்டில் இருக்கிறது. என்னை மீறி யாரும் என் உடலை கையாள இயலாது. ஆனால் இதே உறுதிப்பாடு ஏன் என் மனதுக்கு இருப்பதில்லை? நான் எதை சிந்திக்க வேண்டும், நம்ப வேண்டும் என்பதை தீர்மானிக்க பிறர் ஏன் முனைகிறார்கள்? என் மனதுக்கு ஏன் கடிவாளம் போடுகிறார்கள்?
ஆதர்ஷின் கேள்விகள் எனக்கு எனது பதின்பருவ குரலை நினைவுபடுத்தின. நானும் இப்படியே தான் ஒருகாலத்தில் யோசித்தேன்; என்னை பிறரில் இருந்து விலக்கி வைக்கவும், தனியாய் காட்டிக் கொள்ள தவித்தேன் ஆனால் ஒரு எழுத்தாளனாய் மாறியதும் எனக்கு இதைப் பற்றி ஒரு முற்றிலும் புதிய பார்வை கிடைத்தது.

(தொடரும்)

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...