Skip to main content

கவிஞர் மனுஷிக்கு வாழ்த்துக்கள்

Image result for மனுஷி பாரதி

இவ்வருடத்துக்கான சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது பெறும் கவிஞர் மனுஷிக்கு வாழ்த்துக்கள்.

சில வருடங்களுக்கு முன்பு, மனுஷியின் முதல் தொகுப்பு வெளியான சமயம், மதுரையில் கவிதைக்கான ஒரு கூட்டம் நடந்தது. அப்போது மேடையில் நானும் மனுஷ்யபுத்திரனும் பேசினோம். மனுஷியை அப்போது தான் முதன்முதலில் கேள்விப்படுகிறேன். அவரது கவிதைகளை வாசித்துக் கேட்ட போது அதில் ஒரு தனித்துவத்தை, தீவிரத்தை, புதிய மொழியை கவனித்தேன். அன்று அறிமுகமான சில கவிஞர்களில் மனுஷி மட்டுமே எனக்கு முக்கியமாய் பட்டார். நான் இதை மனுஷ்யபுத்திரனின் செவியில் குறிப்பிட, அவரும் உடனே தலையாட்டினார். “இவரிடம் தனியாக ஒரு பொறி தென்படுகிறது” என்றார். மனுஷியின் அடுத்த கட்ட வளர்ச்சி ஆச்சரியமான வேகத்துடன் இருந்தது. அவரது தொகுப்புகள் தொடர்ந்து உயிர்மையில் வெளியாகின. அவர் இலக்கிய கூட்டங்களில் தீவிரத்துடன் பங்கேற்றார். பலருக்கும் அவர் கவிதைகள் பிடித்திருந்தன. என் ஊகம் பலித்ததில் எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு தனி உவப்பு இருந்தது. நானும் அவரது தொகுப்புக்கு விமர்சனம் எழுதினேன். பின்னர் நான் நடத்தின இன்மை இணையதளத்திலும் மனுஷி பங்களித்தார். ஒரு எழுத்தாளனிடம் ஆவேசமும் தீவிரமும் உழைக்கும் ஆர்வமும் இருந்தால் அவரை யாராலும் தடுக்க முடியாது; உன்னதத்தை எட்டுவார் என்பதற்கு மனுஷி ஒரு சிறந்த உதாரணம். ஏனென்றால் அவருக்கு என்று இலக்கிய குழுக்களில் நாற்காலியோ, பதிப்பாளரின் முன்னெடுப்போ, எந்த ஒளிவட்டமோ இல்லை. எழுத்து தான் நமது ஒரே அடையாளம்; அது மட்டுமே போதும் என்பதை மனுஷி நிரூபித்திருக்கிறார்.

தமிழ் பெண்ணிய கவிதைகளின் பரப்பில் மனுஷியின் இடம் என்ன என அலசி இம்மாத உயிர்மையில் ஒரு குறிப்பு எழுதியிருக்கிறேன். நண்பர்கள் அதை வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...