குவைத்தில் இருந்து ஒரு ஆஸாத் எனும் ஒரு வாசகர் அனுப்பிய கையெழுத்துக் கடிதம் இது. இது போன்ற கடிதங்களைக் கண்டு பல வருடங்கள் ஆகின்றன. தொண்ணூறுகளில் இது போல் எத்தனையோ கடிதங்களை கையால் எழுதியிருக்கிறேன். சு.ராவும், மனுஷ்ய புத்திரனும் அப்போது தபால் அட்டையில் எனக்கு எழுதிய அனுப்பிய கடிதங்களை இப்போதும் வைத்திருக்கிறேன். கையெழுத்து ஏனோ அவ்வளவு அணுக்கமாய் உணர வைக்கிறது. ஆஸாத்துக்கு என் நன்றிகள்!
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share
