Skip to main content

ஏன் சில புத்தகங்கள் (புரொமோஷன் இன்றியே) பரவலாய் பேசப்படுகின்றன?

இது என் கடந்த பதிவின் தொடர்ச்சி
புரொமோஷன் இல்லாமலே அதிகம் கவனம் பெறும் புத்தகங்கள் இல்லையா?
உண்டு. ஆனால் இது விதிவிலக்கே. (பெரும்பாலான நூல்களுக்கு புரொமோஷன் இன்று அவசியம்.)
ஏன் விதிவிலக்காய் இவை கவனம் பெறுகின்றன?
இரண்டு காரணங்கள்.

1) சமூகத் தேவை. சில நூல்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ஆதாரமான ஒரு தேவையை நிவர்த்தி செய்யும் போது அவை அச்சமூகத்தால் உடனடியாய் கொண்டாடப் படும். ஹிட்லரால் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட யூதர்கள் தப்பி ஓடி உலகெங்கும் சிதறினர். தம் இனத்துக்கு நேர்ந்த கொடுந்துயர் குறித்த நினைவுகளை சினிமா, இலக்கியம், பத்திரிகைகள் எங்கும் பதிவு செய்தனர். தம் நினைவுகளை தொகுத்து ஒரு குறியீடாக்கினர். உலகம் முழுக்க கவனமும் இரக்கமும் அவர்கள் பால் குவிந்தது. இந்த படைப்புகள் இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் பெருமளவில் யூத சமூகத்தால் புரொமோட் செய்யப்பட்டன. பின்னர் இஸ்ரேல் உருவாக்கத்திற்கு இந்த படைப்புகள் ஒரு ஆதாரமான அடித்தளமாய் அமைந்தன. இன்று ஈழத்தமிழரின் போர் குறித்து நினைவுகள் இவ்வாறு தொகுக்கப்படுகின்றன. புனைவுகளில் அவை ஒரு உணர்ச்சிகரமான ஆழமான குறியீடு ஆகின்றன. ஈழ சமூகம் தன்னை தக்க வைப்பதற்கு இப்படைப்புகள் அவசியம். ஈழத்து நினைவுகள் எழுத்து வடிவில் குவியும் போது கலாச்சார அதிகாரமாக மாறுகின்றன. அம்மக்களுக்கு இந்த அதிகாரமும் தேவை. ஒரு ஆயுதமாக இதை எடுத்துக் கொள்கிறார்கள். ஆகவே ஈழப்போர் இலக்கியத்தை அவர்கள் பெருமளவில் கொண்டாடுகிறார்கள். ஒரு சமூகமே அதை புரொமோட் செய்கிறது. ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையாகின்றன. நிறைய கூட்டங்கள் நடக்கின்றன. இப்படைப்புகள் இலக்கிய தகுதி கொண்டவை என்றாலும் அவை பெறும் கவனத்துக்கு சமூக அரசியல் ஒரு முக்கிய காரணம். இவ்வாறு ஒரு படைப்பை ஒரு சமூகம் தன் கையில் எடுத்துக் கொள்ளும். இது எழுத்தாளன் கையில் இல்லை. 
தமிழில் இது இமையத்தின் பெத்தவன் கதைக்கு நிகழ்ந்தது. சாதி குறித்த ஒரு சிக்கலான இடத்தை விவாதிக்க அப்புனைவு நமக்கு அவசியப்பட்டது. அதை பிரதியெடுத்து திருமணங்களில் பரிசாக வழங்கினர். படித்தவர்களும் மேலும் பிரதிகள் எடுத்து பகிர்ந்து கொண்டனர். இதே விசயம் எதிர்மறையாக பெருமாள் முருகனுக்கு நடந்ததை அறிவோம். ஆனால் இது விதிவிலக்கு. நூற்றில் ஒரு புத்தகத்துக்கே இது நேரும்.
2) பொழுதுபோக்கு அம்சம். பொழுதுபோக்கு என்றதும் அது வணிக எழுத்து சமாச்சாரம் என நாம் நினைத்து விடக் கூடாது. இலக்கிய படைப்புகளிலும் பொழுதுபோக்கு அம்சம் உண்டு. பொழுதுபோக்கு அம்சம் கொண்ட புத்தகங்களில் ஒரு புதிய சுவாரஸ்யமான உலகம் இருக்கும். வாசகனுக்கு அது ஒரு கிளர்ச்சி அளிக்கும். அந்நூல்கள் பட்டாசு போல் பற்றியதும் வெடிக்கும். சு.ராவின் ஜெ.ஜெ சில குறிப்புகள் வெளியான உடனே பரபரப்பாக படிக்கப்பட்டது. அதாவது இலக்கிய வாசகர்களால். ஆனால் சம்பத்தின் இடைவெளி நாவலில் இந்த அம்சம் இல்லை. அது மிக மிக மெதுவாய் தான் கவனம் பெற்றது.
ஆனால் இந்த அம்சத்தையும் ஒரு இலக்கிய பிரதியில் நாம் திட்டமிட்டு உருவாக்க முடியாது. இதுவும் விதிவிலக்கு தான். 
மீதி 99%. நூல்களும் கோயில் தேர் போல் ஊர் கூடி இழுத்தால் தான் நகரும். அதுவும் ரேஸ் கார் போல் ஓடும் என எதிர்பார்க்கக் கூடாது.


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...