Skip to main content

சட்டீஷ்வர் புஜாராவும் முயலும்

Image result for alastair cook
கதவை திறக்கலாமா வேண்டாமா?
நடந்து வரும் இங்கிலாந்து-இந்தியா முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியில் இருந்து தப்பிக்க இங்கிலாந்து அணித்தலைவர் கருணை வைத்தால் உண்டு என என் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அலிஸ்டெர் குக்கின் தலைமை அதற்கு செவி சாய்த்துள்ளது. நேற்றும் இன்றும் அவரது தலைமையின் கீழ் இங்கிலாந்து ஒரு தற்காப்பு மனநிலையுடன், வெல்லும் அக்கறையின்றி, ஆக்ரோஷமின்றி ஆடியது. ஒருநாள் நான் என் மனைவியிடம் முயல் கறி வாங்க வா என்றேன். அவள் கடைக்கு சென்று முயலைப் பார்த்தாள். மனம் கருணையில் ததும்பியது. முயலை செல்லப்பிராணியாக வளர்க்க முடிவு செய்து வீட்டுக்கு கொண்டு வந்து விட்டாள். நேற்றைய நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் தலைவர் குக்கின் தலைமை இப்படித் தான் இருந்தது. 

சட்டீஷ்வர் புஜாரா தான் சந்தித்த எல்லா பந்தையும் முன்னங்காலில் ஆடி வந்தார். இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸ் சில பவுன்சர்களை வீச பந்து தொடர்ந்து புஜாராவின் தலையில் பட்டது. நல்லவேளை காயமின்றி தப்பித்தார். புஜாராவின் பின்னங்கால் ஸ்டம்புக்கு குறுக்கே செல்ல முன்னங்கால் முழுசாய் முன்னே வந்து பந்தை சந்தித்தது. இதனால் பவுனசர் பந்தை சமாளிக்கும் விதமாய் அவரால் முழுக்க பின்னங்காலுக்கு நகர முடியவில்லை. இது ஒரு சிக்கலான சுய பொறி. இங்கிலாந்து வேகவீச்சாளர்கள் தொடர்ந்து பவுன்சர்கள் வீசி இருந்தால் ஒன்று புஜாரா காயம்பட்டு வெளியேறி இருப்பார் அல்லது அவுட் ஆகி போயிருப்பார். ஆனால் தம் ஆக்ரோஷம் காரணமாய் (பவுன்சர் பட்டு இறந்து போன ஆஸ்திரேலியாவின் ஹியூக்ஸ் போல) புஜாராவுக்கு அசம்பாவிதம் நேரக்கூடாது என்பதிலேயே இங்கிலாந்து அணித்தலைவர் குக் கவனமாய் இருந்தார். அவர் பவுன்சர்களை நிறுத்தினார். புஜாராவை சுலபமாய் சதம் அடிக்க அனுமதித்தார்.
அதே போல நேற்று விஜய் இங்கிலாந்தின் லெக் ஸ்பின்னர் ரஷீதின் கூக்ளியை கணிக்க முடியாமல் திணறினார். வெளியே போகும் பந்தை கூட கூக்ளியாக கருதி கால் பக்கம் ஆடினார். கால் பக்கம் பீல்டர்களை அகற்றி off sideஐ வலுப்படுத்தி இருந்தால் குக் கால் பக்கம் அடிக்க முனைந்து கவர் பகுதிக்கு leading edge கொடுத்து வெளியேறி இருப்பார். ஆனால் ரஷீத் அவ்வப்போது தன் கட்டுப்பாட்டை இழந்து விடுவதால் இந்த வியூகம் வகுக்கவும் குக் தயங்கினார். அவர் மிட் ஆன், லாங் லெக் என கால் பக்கம் பீல்டர்களை நிறுத்தினார். இதனால் ரஷீதால் விஜய் சதம் அடிப்பதை தடுக்க முடியவில்லை.
இன்று, நான்காவது நாள், கோலி ஆட வர வேகவீச்சாளர்கள் வழக்கம் போல் பந்தை வைடாக டிரைவ் செய்யும் நீளத்தில் வீசி கோலியை கவர் டிரைவ் அடிக்க தூண்டினர். அதுவே அவர் பலவீனம். முன்னங்கால் சரியாக நகராததால் அவர் அடிக்கடி ஸ்லிப்பில் எட்ஜ் கொடுத்து வெளியேறுவார். ஆனால் கோலியை இதற்கு முழுக்க தூண்ட off sideஇல் காலி இடங்கள் விட வேண்டும். கவர் டிரைவ் அடித்தால் நான்கு ரன்கள் கிடைக்கும் என சேதியை கோலிக்கு விட வேண்டும். ஆனால் குக்கோ வைடாக பந்தை வீச செய்து off sideஇல் அதிக தடுப்பாளர்களை நிறுத்தி தடுப்பாட்ட களம் அமைத்தார். கிட்டத்தட்ட ஒருநாள் களம் போல் இது இருந்தது. குக் விரும்பியது கோலியை வெளியேற்ற அல்ல கட்டுப்படுத்த. நியுசிலாந்து அணி சமீபத்தில் இந்த வியூகத்தை அழகாக வகுத்து கோலியை டிரைவ் செய்ய வைத்து வெளியேற்றியது. ஆனால் இங்கிலாந்து அணித்தலைவரின் மட்டமான களத்தடுப்பு அமைப்பு காரணமாய் கோலி ஒரு கவர் டிரைவ் கூட ஆடவில்லை. தப்பித்து விட்டார். (ஆனால் கோலி தானாகவே hit wicket மூலம் வெளியேறினது வேறு விசயம்.)

இப்படி இங்கிலாந்தின் மட்டமான தலைமை உபயம் இந்தியா இந்த டெஸ்டில் தப்பிக்க வாய்ப்பு அதிகம். அதையும் மீறி நாம் இன்னும் மட்டமாய் ஆடி தோற்றால் தான் உண்டு. இப்போதைக்கு யார் அதிக மட்டமாய் ஆடுவது என்றுதான் போட்டி!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...