Skip to main content

உப்புமா ஆடுதளத்தில் இந்தியா தோல்வியின் விளிம்பில்


தற்போது ராஜ்கோட்டில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா ஒரு மீளமுடியாத சிக்கலில் இருக்கிறது. இங்கிலாந்து மோசமாய் கட்டுப்பாடே இன்றி பந்து வீசினால் மட்டுமே இந்தியா தப்பிக்கும். மற்றபடி தோல்வி கிட்டத்தட்ட உறுதி.

ஆடுதளம் தான் முக்கிய காரணம். ராஜ்கோட்டில் நடக்கும் முதல் டெஸ்ட் இது. இந்த நவம்பர் டிசம்பர் காலத்தில் இந்தியா முழுக்கவே மந்தமான பருவச்சூழல் இருக்கும். ஆடுதளத்துக்கு போதுமான வெயில் கிடைக்காது. அதனால் உள்ளுக்குள் சற்று ஈரமாக இருக்கும் ஆடுதளத்தில் ரொம்ப மந்தமாய் மெதுவாய் தான் வரும். இதை சரி செய்ய ஆடுதள தயாரிப்பாளர்கள் தளத்தின் மீதுள்ள புற்களை முழுக்க கத்தரிக்காமல் விடுவார்கள். ஆனால் சரியாக காயாததால் ஆடுதளம் முழுக்க வெடிப்புகளுடன் இருக்கும். இது பந்தை ஏற்ற இறக்கத்துடன் எகிற வைக்கும். இந்த வெடிப்புகள் ரொம்ப விரியக் கூடாது எனும் பதற்றம் தான் ஆடுதள தயாரிப்பாளர்களுக்கு இருக்குமே தவிர ஒரு சிறந்த டெஸ்ட் ஆடுதளமாய் அதை மாற்ற தோன்றாது. தற்காலிக தேவைக்காக அவசர கதியில் பண்ணப்பட்ட இட்லி உப்புமா போன்றது இந்த ஆடுதளம்.
இதில் பந்து அதிகம் பவுன்ஸ் ஆகாது. ஸ்பின் ஆகாது. ஆனால் புற்கள் இருப்பதால் கொஞ்சம் ஸ்விங் ஆகும். இந்த புற்களையும் ரோலர் மூலம் மண்ணுக்குள் அழுத்தி வைத்திருப்பதால் ஸ்விங் குறைவாக இருக்கும். ரிவர்ஸ் ஸ்விங் ஆகும். ஆனால் அதுவும் குறைவாகவே இருக்கும். வழக்கமாய் இந்திய ஆடுதளங்களில் முதல் நாள் ஸ்பின்னர்கள் ஓரளவுக்காவது பந்து வீச முடியும். இந்த ஆடுதளம் மிக மொட்டையாக இருக்கிறது. இதில் பவுலிங் போடவே இந்தியர்கள் விரும்பவில்லை. அவர்களின் ஏமாற்றம் முதல் நாளே தவற விட்ட காட்சுகளால் அதிகமானது. விரக்தியில் கோலி நிதானம் இழந்தார்கள். அவருடன் சேர்ந்து பிற வீரர்களும் தோல்வி பயத்தில் நடுங்கினார்கள். விளைவாக அடுத்த மூன்று நாட்களும் 600 சொச்சம் ரன்களை எப்படி எடுக்க போகிறோம் என யோசித்து தற்போதைய ஆட்டத்தில் கவனம் இழந்தனர். மேலும் கேட்சுகளை தவற விட்டனர். இன்னும் மோசமாய் பவுலிங் செய்தார்கள்.
மலையாக ரன்களை குவித்த நிலையில் இங்கிலாந்தால் இன்னும் கூலாக பொறுமையாக பந்து வீச முடியும். விரிசல்கள் அதிகமானால் பந்துகள் சிலர் தாழ்வாக செல்லும். நம்மை விட நன்றாக பந்தை ரிவர்ஸ் செய்யக் கூடியவரக்ள் இங்கிலாந்து வேகவீச்சாளர்கள். அவர்கள் நேராக பந்தை வீசினாலே (இப்போதைய விரக்தி மனநிலையில்) இந்தியர்கள் எல்.பி.டபிள்யோ மற்றும் பவுல்ட் ஆகி வெளியேறுவார்கள். மேலும் ஆடுதளத்தில் உள்ள புற்கள் தரும் கோஞ்ச நஞ்ச ஸ்விங்கையும் அவர்கள் நன்றாக பயன்படுத்துவார்கள்.
ஆனால் ஒருவேளை வெயிலில் தொடர்ந்து காய்ந்து ஆடுதளம் கொஞ்சம் வேகமெடுத்தால் அது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயம் உதவும். அதே போல் ஆடுதள விரிசல்களும் மோசமாகாமல் இருந்தால் உதவும். இந்தியா இப்போதைய இங்கிலாந்தின் ஸ்கோரை முறியடித்து லீட் பெற்று மீண்டும் இந்த ஆடுதளத்தில் ஐந்தாவது நாளில் நம் ஸ்பின்னர்கள் பந்து வீசி இங்கிலாந்தை இரண்டாவது இன்னிங்ஸில் சுருட்டுவார்களா? சாத்தியம் குறைவு தான்.
இந்த ஆட்டம் நிச்சயம் டிரா ஆகாது. அதே போல் இந்தியா வெல்லவும் வாய்ப்பு குறைவே. இங்கிலாந்து தாமாகவே இந்த ஆட்டத்தை நமக்கு பரிசளித்தால் தான் உண்டு.

இனிமேலும் இது போன்ற அவசர கதி உப்புமா ஆடுதளங்களில் நாம் ஆடாமல் இருக்கும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...