Skip to main content

காஷ்மீர் பிரச்சனை - எரியூட்டப்படும் குரங்கின் வால்

மத்திய அரசின் காஷ்மீர் கொள்கை தெளிவானது. ஒரு பக்கம் அவர்கள் காஷ்மீர் பற்றி எரிந்து கொண்டிருப்பதை விரும்புகிறார்கள். இதன் மூலம் பாகிஸ்தான் இந்தியாவுடன் போர் முனையில் நிற்கிறது எனும் பிம்பத்தை, பதற்றத்தை உருவாக்கி மதவாதம் + தேசியவாதத்தை மக்களிடையே தூண்டி விட வேண்டும். அதிகமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டு, பல இடங்களில் போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்துவதன் மூலம் காஷ்மீரிய மக்களின் உணர்ச்சிகளை தூண்டுவது, போராட்டக்காரர்களை தொடர்ந்து தாக்குவதன் மூலம் போராளிகளுக்கு மறைமுக ஊக்கம் கொடுப்பதை காங்கிரஸ் அரசும் செய்தது, இப்போது அதையே பா.ஜ.கவும் செய்கிறது.


 ஆனால் ஒரே வித்தியாசம் பா.ஜ.க காஷ்மீர் பிரச்சனையை மதப்போராக மாற்றி மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி அதன் மூலம் தேசம் சந்திக்கும் வளர்ச்சியின்மை, பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றில் இருந்து கவனத்தை திருப்ப முனைகிறது.
எல்லா மதவாத கலவரங்களிலும் செய்வது போல் வன்முறையை ஒரு பக்கம் தூண்டி விட்டு விட்டு இன்னொரு புறம் பா.ஜ.கவின் தலைமை தொட்டிலையும் ஆட்டுகிறது. சுதந்திர தின உரையின் போது மோடி காஷ்மீர் பிரச்சனையை பாகிஸ்தானுடனான ஒரு எல்லை தகராறாக, தீவிரவாத அத்துமீறலின் விளைவாக மட்டுமே சித்தரித்து, பாகிஸ்தானை எச்சரித்து ஒரு ராணுவ தளபதி போன்றே தன்னை காட்டிக் கொண்டார். அதே போல காஷ்மீரிய போராட்டக்காரர்களை கடுமையாய் ஒடுக்கவில்லை என அவர் காஷ்மீர் முதலமைச்சர் மீது ஏமாற்றம் கொண்டிருப்பதாகவும், இது சம்மந்தமாய் – அதாவது பிரச்சனையை வன்மையாகவா அமைதி பேச்சுவார்த்தை மூலமா தீர்ப்பது என்பதில் – இருவருக்கும் கருத்து மாறுபாடு உள்ளது என்று சொல்லப்படுகிறது.  ஆனால் தற்போது மோடி காந்தியின் ரூபம் எடுத்து “காஷ்மீரிய மக்களின் வலியில் நானும் பங்கு கொள்கிறேன்” என்கிறார்.
காஷ்மீரில் எப்படி உடனடியாய் அமைதியாய் மீட்பது என மோடி அறிவார். ராணுவத்தை குவிப்பது அமைதியை அன்றி அமைதியின்மையையே அதிகம் தூண்டும் எனவும் அறிவார். அவருக்கு அதுவே வேண்டும். தன் அரசின் செயல்பாடு மீது அல்லாது மீடியாவின் கவனம் காஷ்மீர் மீது இருக்க வேண்டும் என அவர் விரும்புகிறார்.

ஒரு நேர்மையான அரசு காஷ்மீரில் ராணுவ இருப்பை குறைத்து, மக்கள், போராளிகள், பாகிஸ்தான் ஆகிய முத்தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தும். ஆனால் அப்படியான ஒரு அரசு இன்னும் இங்கு அமையவில்லை. எல்லா அரசுகளும் குரங்கின் வால் எரிவதையே விரும்புகின்றன.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...