Skip to main content

பர்தாவும் பெண்ணுரிமையும்

பர்தா அணிந்த ஒரு பெண்ணை பார்க்கையில் சிலநேரம் சமூக கோபம் சிலருக்கு வரலாம். எப்படி இந்த காலத்துக்கு பெண்களே ஆணாதிக்கவாத சிந்தனைக்கு அடிபணிந்து தம்மை வெறும் உடலாக பாவிக்கலாம் எனத் தோன்றலாம். ஆனால் இது மேம்போக்கான பார்வை. சுதந்திரமோ தனிமனித உரிமையோ பெண்ணுரிமையோ உண்மையில் ஆடையில் இல்லை. பாப்கட் வைத்து சட்டை பேண்ட் அணிந்த பெண்கள் எல்லாம் முழு சுதந்திரமானவர்களா? அவசியமில்லை. அப்பெண் தனிப்பட்ட முறையில் பல்வேறு சமரசங்களை ஆண் சமூகத்திடம் செய்து தன் ஆடை சுதந்திரத்தை மட்டும் தக்க வைத்திருக்கலாம். ஒருவேளை சேலை அணிந்த ஒரு பெண்ணை போல சில விசயங்களில் துணிச்சலாய் ஆண்களை எதிர்க்க அப்பெண்ணால் முடியாமல் போகலாம்.


 பெண் சுதந்திரத்தை அளவிடவே முடியாது. வாழ்க்கை மிக மிக சிக்கலானது. பல வித சமாளிப்புகளை கடந்து தான் பெரிய பெண்ணுரிமை போராளிகளும் கையளவு சுதந்திரத்துடன் வாழ முடியும். ஒவ்வொருவரும் தமக்கான அளவில் சுதந்திரத்துடன் மகிழ்ச்சியாக உள்ளார்கள் என்பது தான் உண்மை.
பொதுவாக தனிமனித சுதந்திரத்தை கூடத் தான் அளவிட முடியாது. கேரளாவில் பரவலாக முத்தப்போராட்டம் நடத்தினார்கள். அதற்கு எதிர்ப்பு எழுந்தது. ஒருவேளை சமூகம் அதை ஏற்றுக் கொண்டு விட்டால் அடுத்தது என்ன? சுதந்திரத்துக்கு முடிவே இல்லை. பொதுவெளியில் முத்தமிட முடியாதவர்கள் எல்லாம் மூச்சு முட்டி புழுங்குகிறார்களா? இல்லை.
முழு சுதந்திரம் தான் மகிழ்ச்சி என்றில்லை.

பர்தா அணிந்த பெண்ணுக்கு திரும்பவும் வருவோம். பர்தா சரியா தவறா என்பதற்கு நான் செல்லவில்லை. நான் நேற்று அலுவலக மின் தூக்கியில் செல்லும் போது பர்தா அணிந்த ஒரு பெண்ணும் ஏறிக் கொண்டார். நான் 10 வருடங்களாக பல்வேறு இடங்களில் வேலை பார்த்திருக்கிறேன். முதன்முறையாக ஒரு பர்தா அணிந்த இஸ்லாமிய பெண்ணை அலுவலகத்தில் பார்க்கிறேன். ஆரம்பத்தில் கொஞ்சம் ஜெர்க்காக இருந்தது. பிறகு எனக்கு இஸ்லாமிய பெண்கள் வேலைக்கு வருவதே முற்போக்கான மாற்றம் எனப் பட்டது. முன்பை விட அச்சமூகத்தில் பெண்கள் அதிகமாய் கல்லூரியில் படிக்கிறார்கள். இப்போது மெல்ல மெல்ல வேலைக்கு வரத் தொடங்குகிறார்கள். இன்னும் 40 வருடங்களில் பொது சமூக நீரோட்டத்துடன் அவர்கள் கலக்கப் போகிறார்கள் என்பதற்கு இது ஒரு அறிகுறி. அந்த பெண்ணின் வாழ்க்கை எல்லைக்குள் அவளுக்கான கட்டுப்பாடுகளும் சுதந்திரங்களும் மகிழ்ச்சியும் இருக்கும். அதை மதிப்பிட நாம் யார்? அவள் தன் ஸ்மார்ட்போனில் பேஸ்புக் பார்த்தபடியே வந்தாள். அந்த பரந்த வெளியில் அவள் சுதந்திரத்தை யார் தடுக்க முடியும்? சல்மாவின் மூன்றாம் ஜாமங்களின் கதையில் வரும் வீட்டின் சிறு எல்லைக்குள் மாட்டித் தவிக்கும் பெண்களில் இருந்து இவளைப் போன்ற பெண்கள் எவ்வளவு தூரம் வந்து விட்டார்கள்!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...