Skip to main content

சீனியர் எழுத்தாளர்களும் விசித்திர தந்தை உளவியலும்


தொடர்ந்து எழுதுகிறவர்களை யாரும் புரமோட் செய்ய வேண்டியதில்லை. அவர்களாகவே மேலே வந்து விடுவார்கள். ஆனால் எழுத்தில் விருப்பம் இல்லாதவர்களை சீனியர் எழுத்தாளர்கள் புகழ்ந்து முன்னெடுத்தபடியே இருப்பார்கள். அவர்களும் ஒரே வருடத்தில் எழுதுவதை விட்டு மாயமாகி விடுவார்கள். இதை நான் என் ஞான திருஷ்டியால் ஒன்றும் சொல்லவில்லை. கடந்த பத்தாண்டுகளில் முன்னெடுக்கப்பட்ட இளம் எழுத்தாளர்களின் சிறு பட்டியலை எடுத்து பார்த்தால் யாருக்கும் புரியும். தமிழில் இந்த விசித்திரத்துக்கு முன்னுதாரணங்கள் உண்டு. நாற்பது வருடங்களுக்கு முன்பே கா.ந.சு இது போல் சில எழுத தெரியாதவர்களை அடுத்த தலைமுறையின் சாதனை எழுத்தாளன் என பாராட்டி தள்ளி இருக்கிறார். அவர்களின் பெயரைப் இன்று பார்த்தால் யாரென்றே உங்களுக்கு தெரியாது. ஏன் திறமையும் எழுதும் வெறியும் இல்லாதவர்களை க.நா.சுவில் இருந்து இன்றுள்ளவர்கள் வரை புரமோட செய்ய வேண்டும்? இது ஒரு நிலப்பிரபுத்துவ ஆண்மைய குடும்ப மனநிலையில் இருந்து தோன்றும் விசித்திரம். நிலப்பிரபுத்துவ குடும்பங்களில் பொதுவாக அப்பாவுக்கு திறமை குறைந்த வேலையே செய்யாத உதவாக்கரை பையனையே பிடிக்கும்.

 விவிலியத்தின் Prodigal Son கதை இந்த உளவியலைத் தான் பேசுகிறது. பூஞையான பிள்ளை மீது அப்பாவுக்கு பிரியமும் வலுவான பிள்ளை மீது பொறாமையும் மென்மையான வெறுப்பும் ஏற்படுகிறது. விவிலியத்தில் ஆரம்பித்து இன்று வரை பல குடும்பங்களில் இதைப் பார்க்கலாம்.  சமகாலத்தில் கலைஞர்-அழகிரி உறவை உதாரணமாய் சொல்லலாம். கலைஞருக்கு ஸ்டாலின் மீது பொறாமையும் அழகிரி மீது பிரியமும் இருக்கும். நடன இயக்குநர் சுந்தரம் மாஸ்டருக்கான ஒரு பாராட்டு நிகழ்வின் போது பிரபுதேவாவிடம் உங்க அப்பாவுக்கு மகன்களில் யாரை பிடிக்கும் என்று கேட்டார்கள். பிரபுதேவா அதற்கு தன்னையோ அண்ணன் ராஜுவையோ விட தம்பி நாகேந்திர பிரசாத்தை தான் அப்பாவுக்கு அதிகம் பிடிக்கும் என்றார். நாகேந்திர பிரசாத் தான் சகோதரர்களில் வெற்றி பெறாதவர். இதை விளக்கவே முடியாது. தந்தையின் உளவியல் அப்படித் தான்.

நம் சீனியர் எழுத்தாளர்கள் இயல்பிலேயே நிலப்பிரபுத்துவ சூழலின் நீட்சி. ஒரு தந்தையை போலத் தான் அவர்கள் இளைய எழுத்தாளர்களை நோக்குகிறார்கள். அடுத்த தலைமுறையினர் சீனியர்களாகும் போது நிலைமை நேர்கீழாக இருக்கும் என நினைக்கிறேன்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...