Skip to main content

விகடன் விருதுகள்



விகடன் விருது பெறும் ஷோபா சக்தி, யூமா வாசுகி, கார்த்திகைப்பாண்டியன், சபரிநாதன், கண்டராதித்தன், பாலு சத்யா ஆகியோருக்கு வாழ்த்துக்கள். நண்பன் லஷ்மி சரவண குமாருக்கு கூடுதல் அன்பும் முத்தங்களும். எப்போதும் விகடன் விருது பெறும் புத்தகங்களுக்கு புத்தகக் கண்காட்சியில் மவுசு கூடும். அதை மனதில் வைத்து மார்ச்சில் அறிவித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அல்லது மார்ச்சில் விகடன் வாசகர்களுக்கு மீண்டும் ஒருமுறை நினைவூட்டலாம். இம்முறை விருது பெறுகிறவர்கள் முக்கியமானவர்கள். தொடர்ந்து பங்காற்றி வருகிறார்கள். யூமா வாசுகியின் உழைப்பு திகைப்பூட்டுகிறது. எவ்வளவு முக்கியமான நூல்களை மலையாளத்தில் இருந்து மொழியாக்கி இருக்கிறார்! ஷோபா சக்தி நம் காலத்தின் ராக் ஸ்டார். அவருக்கான ஒவ்வொரு அங்கீகாரமும் நாம் அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது.


 மொழிபெயப்புக்காய் விருது வாங்கியுள்ளவர் கவிஞர் சபரிநாதன் தானே? அவர் கவிதைகள் படித்திருக்கிறேன். இளந்தலைமுறை கவிஞர்களில் மிக மிக முக்கியமானவர். அவர் தொகுப்பு பற்றி எழுத வேண்டும் என பல மாதங்களாய் எடுத்து வைத்திருக்கிறேன். லஷ்மி சரவணகுமார் நூறு வருடங்கள் கழித்தும் நம் மொழியின் கலாச்சார அடையாளமாய் நிலைக்க போகிற எழுத்தாளன். அதற்கான திறமையும் உழைப்பும் அர்ப்பணிப்பும் அவரிடம் உண்டு. ஒருவித self-obsessionஇன் உச்சம் அவர். அது நேர்மறையாக அவருக்கு எழுத்தில் பயன்படுகிறது.
சரி இவ்வளவு பேரும் சேர்ந்து எப்போது பார்ட்டி கொடுக்க போகிறீர்கள்?

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...