Skip to main content

சாருவும் வெள்ளமும்



இந்த வெள்ளத்தின் போது சகமனிதர்களிடம் அபாரமான சமூக அர்ப்பணிப்புணர்வை, சேவை மனப்பான்மையை பார்த்தோம். ஒவ்வொருவரும் கண்கூட கண்டோம். சாருவை தவிர. இம்மாத உயிர்மையில் இவ்வாறு எழுதுகிறார்: “வெள்ளத்தில் சென்னை மூழ்கிய போது வெள்ளத்தோடு கூடவே மனிதாபிமானமும் பெருகி ஓடியதாக பத்திரிகைகள் கூவிக் கொண்டிருந்தன. விரல் நகத்தின் அழுக்கு அளவுக்கு தான் அந்த அபிமானம் நிலவியதாக தெரிந்தது எனக்கு. பேனை பெருமாளாக்கியது போல் அந்த அழுக்கை தான் ஒரேயடியாக பேசுகிறார்கள் எல்லாரும் ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் மரணம் ஒன்று போல் தாக்கிய போது மனிதன் பயந்தான். அதனால் ஒருவனுக்கொருவன் உதவிக் கொண்டான். அவ்வளவு தான் விசயம். இதே நகரத்தில் வெள்ளத்துக்கு பதிலாக ஒரு மதக்கலவரம் சூழ்ந்திருந்தால் இதே மனிதாபிமானிகள் கையில் ஆயுதத்தை தூக்கியிருப்பார்கள்”.

சாருவின் பார்வையில் எனக்கு உடன்பாடில்லை. மனிதர்கள் ஒரேயடியாய் நல்லவர்கள் ஆகி விட்டதாய் யாரும் கூறவில்லை. அதை நினைத்து சாரு பதற்றப்பட வேண்டாம். ஆனால் மனிதனுக்குள் தூங்கும் நன்மை விழிக்க இது ஒரு சந்தர்ப்பம் ஆகியது. மரண பயம் தான் காரணம் என நான் நினைக்கவில்லை. சிறு குழந்தைகளுக்கு கூட சகமனிதர்களுக்கு உதவும் விருப்பம் உண்டு என ஆய்வில் நிரூபித்திருக்கிறார்கள். அதே நேரம் சிறு குழந்தைகளுக்கு எறும்பை நசுக்கவும் நாயை கல்விட்டு அடிக்கவும் விருப்பம் உண்டு. மனிதன் இந்த இரண்டு விழைவுகளின் கலவை. இப்போதைக்கு நன்மையின் எழுச்சியை கொண்டாடுவோம்.
இந்த வெள்ளம் வந்த போது தான் என்றில்லை. பொதுவாய் தமிழர்கள் இரக்கமும் நெகிழ்ச்சியும் மிக்கவர்கள். இங்கே தெரியாத ஒரு ஊரில் கூட நான் தைரியமாய் தனியே நிற்பேன். என்னை பாதுகாக்கவும் உதவவும் ஏதோ இரு கைகள் நீளும் என அறிவேன். எத்தனை எத்தனை இதயங்களின் அன்பை இதுவரை இந்த சிறு வாழ்வில் பெற்றிருப்பேன். தாயின் கருவறைக்குள் இருப்பது போன்ற பாதுகாப்புணர்வை நீங்கள் தமிழகத்தில் மட்டுமே உணர முடியும். கேரளாவில் ரோட்டில் தனித்து ஆதரவின்றி நின்றால் யாரும் திரும்பி கூட பார்க்க மாட்டார்கள். பெங்களூரிலும் அதே தான். அதனால் தான் எனக்கு இந்த ஊரை விட்டுப் போக என்றும் மனமில்லை.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...