Skip to main content

வாழ்த்துக்கள் ஜெயமோகன்

பத்மஸ்ரீ விருதை ஜெயமோகன் மறுத்துள்ளது தர்க்கரீதியான முடிவாக தெரியவில்லை. எதையும் தெளிவாக வலுவாக முன்வைக்கும் அவர் இம்முறை கூறியுள்ள காரணங்கள் பனிமூட்டம் போல் உள்ளன. தன் எதிர்தரப்பின் கண்டனங்களை கண்டு அவர் என்று ஒதுங்கி போயிருக்கிறார்? எதிர்தரப்பை சீண்டுவதும், அதனோடு மோதுவதும் தான் அவரது எழுத்து உத்வேகத்தின் சுனை. அப்படியான ஜெயமோகன் தான் இப்போது தன் பெயர் அல்லது படைப்பின் அங்கீகாரம் களங்கப்படக் கூடாது என்பதற்காக மறுத்துள்ளார். இது அவரது அடிப்படை சுபாவத்துக்கே எதிரானது.

எந்த விருதும் அதிகாரத்தில் உள்ளவர்களின் பரிந்துரையினால் தான் கிடைக்கும். அதற்காய் எழுத்தாளன் அதிகார வர்க்கத்தின் காலில் விழுந்தே வாங்குகிறான் என்றில்லை. உங்களுக்கே தெரியாது கூட யாராவது உங்கள் தரப்பில் இருந்து முயன்று விருதை பெற்றுத் தர முடியும். அத்தரப்பு இடதாகவோ வலதாகவோ இருக்கலாம். எழுத்தாளன் தான் ஒரு குறிப்பிட்ட அடையாளத்தின் கீழ் வரையறுக்கப்படுவதை விரும்பாமல் இருந்தாலும் இவ்விசயத்தில் தவிர்க்க முடியாது.

பத்மஸ்ரீ நிச்சயமாய் ஒரு உயரிய அங்கீகாரம் தான். ஆனால் அது இல்லாமலும் ஜெயமோகனும் அவரைப் போன்று தமிழ் தீவிர படைப்புலகில் விருதுகள் பெறாத இன்னும் பலரும் தேசிய சர்வதேச அளவில் மிகச்சிறந்த சாதனையாளர்கள் தாம். அதனால் ஒரு இழப்பாக இதை நான் பார்க்கவில்லை. நாம் யாரும் இதற்காய் கண்ணீரை வீணடிக்க வேண்டாம். இலக்கியவாதிகள் இதற்காக வருந்திய மரபே நமக்கு இல்லை.


எப்படியோ வாங்கினாரோ இல்லையோ தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஒரு எளிய சக எழுத்தாளனின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...