Skip to main content

கோபி கிருஷ்ணன் படைப்புலகம்




கோபி கிருஷ்ணன் தமிழ்ப் புனைவுலகில் மிகவும் வித்தியாசமானவர். பிற எழுத்தாளர்களைப் போல விரிவான பிரச்சனைகள், பரந்துபட்ட கதாபாத்திரங்களை தன் எழுத்துக்குள் கொண்டு வர அவர் கவலைப்பட்டதில்லை. அவருடைய உளவியல் பிறழ்வு கொண்ட மனிதர்கள் மிகச் சின்ன உலகம். இப்புள்ளியில் நிலை கொண்டு நேர்த்தியான சில கதைகளையும், மிகவும் சுவாரஸ்யமான ஒரு நாவலையும் (உள்ளிருந்து சில குரல்கள்) எழுதியிருக்கிறார். அவரை எதார்த்த / இயல்புவாத எழுத்தாளர் என்றும் வகைப்படுத்த முடியாது. புனைவும் அபுனைவும் கலக்கிற ஒரு மெட்டாபிக்‌ஷன் பாணி எழுத்தை முயன்றிருக்கிறார். ”மகான்கள்”, “கடவுளின் கடந்தகாலம்” போன்ற சிறுகதைகளிலும், “உள்ளிருந்து சில குரல்களிலும்” இதை அநாயசமாக செய்திருக்கிறார். கதைமொழியைப் பொறுத்தமட்டில் கோபி கிருஷ்ணன் சாரு நிவேதிதாவுக்கு மிகவும் நெருக்கமானவர். இருவரும் பிறழ்வு கொண்ட உதிரி மனிதர்களில் அக்கறை கொண்டவர்கள். உரைநடையும் புனைவுகளும் ஊடுபாவும் நடையை கொண்டவர்கள். மனதின் கசடுகளை காட்டுவது தான் இருவரும் நோக்கம். ஒரே வித்தியாசம் சாருவிடம் உள்ள இகோடிசம் (தான் தான் எனும் அறைகூவல்) மற்றும் எலைட்டிசம் கோபி கிருஷ்ணனிடம் இல்லை.

 கோபி கிருஷ்ணனின் இன்னொரு முக்கியமான தனித்துவம் அவரது கதைகளின் case study வடிவம். எனக்குத் தெரிந்து தமிழில் யாரும் இதை முயன்றதில்லை. பொதுவாக உளவியல், சமூகவியல் ஆய்வுகளில் மனிதர்களை பேட்டி கண்டு அதை சுருக்கமாய் ஒரு கதைவடிவில் ஆய்வறிக்கையில் அளிப்பார்கள். இது தான் கேஸ் ஸ்டடி. இதில் எழுதுபவரின் தாக்கம் இன்றி மிகவும் புறவயமாக இருக்க வேண்டும். கோபி கிருஷ்ணனின் ”உள்ளிருந்து சில குரல்கள்” முழுக்க உளவியல் நோயாளிகளின் கேஸ் ஸ்டடிகளின் தொகுப்பு தான்.
(கோபி கிருஷ்ணனின் படைப்புகள் பற்றி நான் எழுதிய கட்டுரையின் முதல் பத்தி இது. மிச்ச கட்டுரையை விரைவில் பிரசுரிக்கிறேன்)
கோபி கிருஷ்ணனின் படைப்புகள் பற்றி ஒரு முக்கியமான விவாதம் இன்று மாலை 5:30க்கு வாசக சாலை அமைப்பு சார்பாய் நடக்கிறது. கோபி கிருஷ்ணனின் சமகாலத்தவரான அழகிய சிங்கர் பேசுகிறார். இளங்கோ, தமிழ்ச்செல்வன், மனோஜ் ஆகியோரின் பேச்சுகளும் சிறப்பாய் இருக்கும். நான் நிச்சயம் செல்வேன். நீங்களும் கலந்து கொள்ளுங்கள்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...