Skip to main content

மீனா டிரைவர்

இன்றிரவு நியூஸ் செவனில் ஒரு நிகழ்ச்சியில் பேச சென்றிருந்தேன். எனக்கு முன் ஒரு தாடி வைத்து கோட்டு அணிந்த வழக்கறிஞர் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு நேரலையில் பதில் அளித்துக் கொண்டிருந்தார். என் நிகழ்ச்சி முடிந்ததும் இருவரும் ஒரே காரில் பயணப்பட்டோம். அவர் என்னிடம் என் நிகழ்ச்சி எதைப் பற்றி எனக் கேட்டார். அரசியல் என்றேன். “அப்படீண்ணா நீங்க அரசியல்வாதியா?” என்று கேட்டார். “இல்லீங்க. நான் ஒரு எழுத்தாளன்”
உடனே அவர் கேட்டார் “பார்ட் டைம் எழுத்தாளனா?”. ஏன் அப்படி ஒரு கேள்வி அவருக்குள் உதித்தது எனப் புரியவில்லை. நான் ஒரு தத்துவக் குழப்பத்தில் ஆழ்ந்தேன். நான் பகுதி நேர எழுத்தாளனா முழுநேர எழுத்தாளனா? முழுநேர எழுத்தாளன் என்றால் அதிலிருந்து எவ்வளவு வருமானம் வரும் என இவர் கேட்க நான் அதற்கு பதில் சொல்லி அவமானப்பட நேருமே என ஒரு பயம். “ஒரு சாதாரண எழுத்தாளனுங்க” என்று சொல்லி வைத்தேன். 


ஆனால் இது போன்ற அடையாளக் குழப்பங்கள் இல்லாதவர்களும் இருக்கிறார்கள். கடந்த வாரம் சன் டிவிக்கு ஒரு நிகழ்ச்சிக்காய் காரில் சென்று கொண்டிருந்தேன். தி நகரில் மற்றொரு விருந்தினரை ஏற்றிக் கொள்ள வேண்டும். ஓட்டுநர் அங்கு சாலைக்கு நடுவே பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த ஒருவரிடம் முகவரி சொல்லி விசாரித்தார். அவர் பளிச்சென கேட்டார் “நீங்க சன் டிவி டிரைவரா?”. ஓட்டுநர் ஆமாம் என்றார். இவர் உடனே புன்னகையுடன் “நான் மீனா டிரைவருங்க” என்று சொல்லி விட்டு நடுரோட்டில் மற்றொரு மத்தாப்பு கொளுத்த சென்று விட்டார். எனக்கு ஒரே குழப்பம்! மீனா டிராவல்ஸ் என்று ஏதாவது நிறுவனத்தில் வேலை செய்கிறாரோ என என்னை அழைத்துப் போன ஓட்டுநரிடம் கேட்டேன். “இல்ல. அவர் நடிகை மீனா கிட்ட டிரைவரா இருக்கிறார்” என்றார்.

 அவருக்கு தான் தான் யார் எனக் கூற எவ்வளவு சுலபமாய் இருக்கிறது. எனக்கு என்னைப் பற்றி விளக்க குறைந்தது பத்து வாக்கியங்கள் தேவைப்படும். உதாரணமாய், என்ன வேலை என்று சொன்னால் அது எப்படியான வேலை, எங்கு உள்ளது, என்ன நிறுவனம் என விளக்க வேண்டும். அதன் பிறகும் கேட்பவருக்கு முழுக்க விளங்காது. மீனா டிரைவருக்கு ரெண்டே சொற்கள் போதும்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...